search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 thieves arrested"

    • கந்தசாமி (வயது 45). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வெளியூர் சென்று விட்டார்.
    • வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஹரி நகர் அங்காளம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வெளியூர் சென்று விட்டார். அப்போது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    இது பற்றி அவர் வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், நாமக்கல் மாவட்டம் செருக்கலை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில் அவர் நகை திருடியதை ஒப்புக் கொண்டார். அவர் அளித்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வெண்ணந்தூர் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூர் மாவட்டம், சிதம்பரம் தண்டேஸ்வரநல்லூர் கொய்யாப்பிள்ளை சாவடி பகுதியைச் சேர்ந்த மாதையன் மகன் பிரபு (24), நாமக்கல் மாவட்டம் பரமத்தி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் மணி என்கிற கோவில் மணி (35) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்ததில், அவர்கள் இருவரும் கந்தசாமி வீட்டில் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×