என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people in the court"

    • மேலும் 2 பேரிடம் விசாரணை
    • தனிப்படை தீவிரம்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மழையூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. விடுதலை சிறுத்தை கட்சியின் ஆற்காடு தொகுதி இளைஞர் எழுச்சி பாசறை செயலாளராக இருந்து வந்தார்.

    இவருக்கும் மழையூர் ரோட்டு தெருவை சேர்ந்த ராஜேஷுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பார்த்தசாரதியை தீர்த்துக்கட்ட ராஜேஷ் முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று பார்த்த சாரதியை கும்பல் ஒன்று பின் தொடர்ந்து சென்று வெட்டி கொலை செய்தனர். இது குறித்து கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த கொலையில் ஈடுபட்ட ஆனந்தன், ரவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்‌.

    இந்த நிலையில் ஆற்காடு உரிமையியல், குற்றவியல் கோர்ட்டில் ராஜேஷ் (வயது 37), சதீஷ்குமார் (20) ஆகியோர் சரண் அடைந்தனர். மேலும் சென்னையில் இருந்து 2 பேரை பிடித்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×