search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1987"

    42 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில், ஓய்வுபெற்ற போலீசார் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. #DelhiHighCourt #16Policemen

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம், மீரட் பகுதியில் 1987-ம் ஆண்டு இரு பிரிவினர் இடையே வகுப்பு கலவரம் நடந்தது. அப்போது அங்குள்ள ஹாசிம்பூரா பகுதியை சேர்ந்த சிறுபான்மை சமூகத்தினர் 42 பேர், போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள், கால்வாயில் வீசப்பட்டன. இது ஹாசிம்பூரா படுகொலை என அழைக்கப்படுகிறது.

    இது தொடர்பாக 19 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டது.

    அதைத் தொடர்ந்து இந்த வழக்கை டெல்லி திஸ்கஸாரி கோர்ட்டு விசாரித்தது. 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் விசாரணை காலத்தில் இறந்து விட்டார்.

    முடிவில் 16 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, விடுதலை செய்து 2015-ம் ஆண்டு அந்த கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ். முரளிதர், வினோத் கோயல் அமர்வு விசாரித்தது. கடந்த மாதம் 6-ந் தேதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில், கீழ் கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்தும், அங்கு விடுதலை செய்யப்பட்ட 16 போலீசாருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ். முரளிதர், வினோத் கோயல் அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. அதைத் தொடர்ந்து 16 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட போலீசார் அனைவரும் தற்போது பணியில் இருந்து ஓய்வுபெற்று விட்டனர்.

    ×