என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "18 pound jewelery heist"

    • கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் இன்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலை சம்பந்தமாக வெளியே சென்றிருந்தார். பின்னர்

    வீடு திரும்பிய சதீஷ்குமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த 18 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து சதீஷ்குமார் சோளிங்கர் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×