என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "176 persons arrested"

    • குட்கா தொடர்பாக 226 வழக்குகள் பதிவு
    • போலீசார் 49 பேரை பாராட்டி சான்றிதழ்களை டி.ஐ.ஜி. வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், தமிழ்நாடு காவல்துறையின் 'இமைகள் திட்டம்' (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுதல்) குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

    கருத்தரங்கத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கினார். கருத்தரங்கில் வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி கலந்து கொண்டு பேசினார். இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. முத்துசாமி கூறியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 6மாதத்தில் நடத்தப்பட்ட கள்ளசாரயம், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் விற்பனை தடுப்பு என மொத்தமாக 154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 176 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதில் 64 கிலோ கஞ்சா மற்றும் 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா தொடர்பாக 226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 216 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதில் 1,421 கிலோ குட்கா மற்றும் 5வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கள்ளசாராயம் தொடர்பாக 1,768 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,065லிட்டர் கள்ளசாராயம் மற்றும் 3,552 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் ரவுடிகள்-4பேர், வழிப்பறி மற்றும் திருட்டு குற்றங்களில்-8பேர், கஞ்சா மற்றும் குட்கா வழக்குகளில்-11பேர், பாலியல் குற்றவாளிகள்-2, கள்ளச்சாரயம் விற்பனை வழக்கில் ஒருவர் என மொத்தம் 26 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு டி.ஐ.ஜி முத்துசாமி தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என -14 பேருக்கும், 35 போலீசார் என 49 பேரை பாராட்டி சான்றிதழ்களை டி.ஐ.ஜி முத்துசாமி வழங்கினார்.

    இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, ஏ.எஸ்.பி யாதவ் கிரிஷ் அசோக், டி.எஸ்.பிக்கள் பிரபு, ரவிசந்திரன், சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×