என் மலர்
நீங்கள் தேடியது "14th century statue stone"
- எரியோடு கோவிலூர் பகுதியில் வரலாற்று ஆய்வு குழுவினர் ஆய்வு செய்தனர்.
- 14-ம் நூற்றாண்டு வில்லேந்திய வீரன் நடுகல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே எரியோடு கோவிலூர் பகுதியில் வரலாற்று ஆய்வு குழு ஆய்வாளர் விஸ்வ நாததாஸ், மாணவர் ரத்தின முரளிதர், தலித் சந்திரசேகர், பெருமாள்சாமி, புண்ணியமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதில் இடைக்கால பாண்டியர் ஆட்சிக்காலத்தில் பள்ளி நாடு எனப்படும் எரியோடு, கோவிலூர் பகுதியில் 14-ம் நூற்றாண்டு வில்லேந்திய வீரன் நடுகல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நடுகல் 3 அடி அகலம், 6 அடி நீளம் ¾ அடி கனம் கொண்ட பலகை கல் நடுகல்லாக உள்ளது.
வீரனின் தலையில் தலைப்பாகை மகுடமும், அதில் முத்துச்சரம் சுற்றப்பட்டு தலைப்பாகை முனையும் முத்துச்சரத்தின் முனையும், காற்றில் அசைந்தாடுவது போல் உள்ளது. இரு காதிலும் குண்டலங்கள் தொங்கு கிறது. மார்பில் கழுத்தணி ஆரமும், வீரச்சங்கிலியும், இருதோள்களிலும் லாகு வளையமும், இருகைகளிலும் மணிகட்டில் கங்கணமும் உள்ளது.
வலது கை கத்தியை நீட்டிபிடித்த நிலையும், இடதுகை வில்லை பிடித்து தரையில் ஊன்றிய நிலை யில் உள்ளது. இடது தோளுக்கு மேலே வேல் நீட்டிய நிலையில் உள்ளது. அதற்கு கீழே அம்பார துணியில் அம்பு நீட்டிய நிலையில் உள்ளது. வீரனின் இடை கச்சை முழங்கால் வரை உள்ளது. இடைக்கச்சை யில் குறுவாள் தொங்கிய நிலையில் உள்ளது.
இந்த நடுகல் வீரன் நிற்கும் நிலையில் போருக்கு தயாராக உள்ளதை குறிக்கிறது. 14ம் நூற்றாண்டு பிற்கால பாண்டியரின் கால நடுகல். லிங்கத்தில் ஆவுடையார் மட்டும் உள்ளது. இதில் லிங்கம் காணவில்லை ஆவுடையார் முறையாக செதுக்கப்பட வில்லை.
தமிழரின் மழை அளவு மழை மானி-3 மழை அளவு 1 செ.மீ 1 உழவு எனப்படும். பெரிய கற்களில் வாப்பாடுடன் கூடிய குழி ஆட்டுக்கல் போல் இருக்கும். இதுவே பழந்தமிழரின் மழை மானி. இதில் பெரிய மழை மானி 4 டன் எடை, 6 அடி உயரம், 3½ அடி விட்டம் கொண்டது. அக்குழியில் வாப்பாடு பகுதி ¼ அடி உயரமும் மேலும் நடுவில் உள்ள குழியின் விட்டம் 1 அடியும் அதன் ஆழம் 1½ அடியும் கொண்ட அதன் உள்கூடு விட்டம் 1½ அடியும் மிகப் பெரிய மழைமானி.
மாவட்டத்திலேயே இதுதான் பெரிய மழைமானி. மற்ற இரண்டும் இதை விட சிறியதானவை. இதிலிருந்து மழை அளவை கணக்கிடு வதில் நம் முன்னோர்கள் மிகுந்த மதி நுட்பத்துடன் செயல்பட்டு வந்தனர் என்பது தெரிய வந்துள்ளது.
இதே போல் விநாயகர் சிற்பம் போன்றும் செதுக்க ப்பட்டுள்ளது. அதன் மேல் சூரியன், சந்திரன் கோட்டுரு வாக பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் 15ம் நூற்றா ண்டைச் சேர்ந்தவையாக இருக்கும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது. இதே போல மண்பானை ஓடுகளும் இரும்பு ஆயுதம் தயாரிக்க ப்படும் இரும்பு தாது கற்களும் இங்கு அதிகம் கிடைத்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டு ள்ளது.






