என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "14 km distance"

    • கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
    • கலெக்டர் ஆய்வு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பா தையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    ஆடி மாத பவுர்ணமி அதிகாலை 3.25 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 1.05 மணிக்கு நிறைவடைகின்றது. இதனால் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் எவ்வித இடையூறுகளும் இன்றி சாமி தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யபட்டன.

    போலீசார் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணித்தனர். 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப் பாதையை 14 மண்டலங்களாக பிரித்து அங்கு குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

    அன்னதானம் வழங்க அனுமதிக்கப்பட்ட இடத்தில் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். ஆய்வின் போது மாவட்ட எஸ்.பி. டாக்டர் கார்த்திகேயன், அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் கோமதி குணசேகரன், சினம் பெருமாள், ஆர்டிஒ மந்தாகினி, டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, குணசேகரன், ஆய்வாளர் சுபா, வட்டாட்சியர் சரளா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    ×