search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1.25 lakh robbery"

    • கோவில் உண்டியலையும் விட்டு வைக்கவில்லை
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் இளங்கோவன்(50), வெங்கடேசன்(50). இவர்கள் இருவரும் ஒடுகத்தூர்-மேல் அரசம்பட்டு சாலையோரம் தனிதனியே அடுக்குமாடிகள் கட்டி கடைகளை வாடகைக்கு விட்டுள்ளனர்.

    கொள்ளை

    இங்கு மாட்டு தீவனம், ஓட்டல், சலூன், மளிகை, பழக்கடை, டீக்கடை, வெல்டிங் ஷாப், மோட்டர் பழுதுபார்க்கும் கடை உள்ளிட்ட 9 கடைகள் உள்ளது. இந்த கடைகளை அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் இரும்பு ஆயுதங்களால் 9 கடைகளின் ஷட்டர்களை உடைத்து ஒவ்வொரு கடைகளில் வைத்திருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இதில், மொத்தம் ரூ.1.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்துள்ளது.

    அப்போது, கட்டிடத்தின் அருகே இருந்த விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியலையும் கடப்பாரையால் உடைத்து அதிலிருந்த பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மேலும், உண்டியலை அருகே உள்ள நிலத்தில் வீசி விட்டனர்.

    இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×