என் மலர்
நீங்கள் தேடியது "105 liters of liquor"
- தனிபிரிவு போலீசார் நடவடிக்கை
- தமிழக- ஆந்திர எல்லை மலைப்பகுதியில் சோதனை
ஆலங்காயம்:-
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் மஞ்சுநாதன், ரேணுகா தேவி, விஜய் மற்றும் போலீசார் தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள மாதகடப்பா மலைப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கள்ள சாராயம் தயாரிக்க மறைத்து வைத்திருந்த 105 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 105 லிட்டர் சாராயம் ஆகியவற்றை அழித்தனர்.
மேலும் தப்பி ஓடிய கள்ள சாராயம் காய்ச்சும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.






