search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1008 litres"

    • மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை முன்னிட்டு சாமிக்கு வடமாலை சாத்துப்படியும்
    • அதனை தொடர்ந்து நல்லெண்ணெய் சீயக்காய் 1008 லிட்டர் தயிர், தயிர், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமையும் அமாவாசை, பவுர்ணமி ,அனுமன் ஜெயந்தி ,தீபாவளி ,பொங்கல், புத்தாண்டு நாட்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும்.

    அதன்படி மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை முன்னிட்டு சாமிக்கு வடமாலை சாத்துப்படியும், அதனை தொடர்ந்து நல்லெண்ணெய் சீயக்காய் 1008 லிட்டர் தயிர், தயிர், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    அதன் பின்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×