என் மலர்
நீங்கள் தேடியது "100 days salary"
- உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- துறை ரீதியான அதிகாரிகள் துறை சார்ந்த திட்டங்களை எடுத்துக்கூறினார்கள்.
உடுமலை :
உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமிமுருகன் தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் சண்முகவடிவேல், ஒன்றியக்குழு ஆணையர் ஜோதி, வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.அப்போது 23 தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து துறை ரீதியான அதிகாரிகள் துறை சார்ந்த திட்டங்களை எடுத்துக்கூறினார்கள். அப்போது கிராமங்களில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சினை, சின்ன வீரம்பட்டி இந்திராநகர் இணைப்பு சாலை பணியை விரைவுப்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்துதல், சாலை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும், 100 நாள் சம்பளத்தை தடையின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினர்கள் பேசினார்கள்.






