search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 people"

    • திண்டுக்கல் அருகே டிரைவர் மற்றும் பெண்ணை தாக்கிய 10 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    • வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே டிரைவர் மற்றும் பெண்ணை தாக்கிய 10 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(26). இவர் டிராக்டர் வைத்து உழவு பணிகள் செய்து வருகிறார். சம்பவத்தன்று செங்காளியூரில் உள்ள ஒரு தோட்டத்தில் டிராக்டரில் உழவு பணி மேற்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த கோபால், இந்துமதி, பாலுச்சாமி, காயத்ரி ஆகிய 4 பேரும் டிராக்டரை தடுத்து நிறுத்தி பிரச்சினைக்குரிய இந்த நிலத்தில் எதற்காக வேலை பார்க்கிறாய் என கூறி அவரிடம் தகராறு செய்தனர்.

    மேலும் டிராக்டரை சேதப்படுத்தியும், அவரது ெசல்போனை உடைத்தும், சிவக்குமாரை தாக்கியும் மிரட்டிஉள்ளனர். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் பாலுச்சாமி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் கோபால்(42) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் ராஜம்மாள், சிலம்பாயி, சுப்ரமணி, மணிகண்டன், சிவா, ரத்தினம் ஆகிய 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×