என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "-Supreme Court"

    தமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்துக்கு மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்காலத் தடையை நீக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. #LokAyudha #SupremeCourt
    புதுடெல்லி:

    தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு மாநில அரசு கடந்த சில நாட்களுக்கு முன் உறுப்பினர்களை நியமித்தது. இதில் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தேவதாஸ் நியமிக்கப்பட்டார். மேலும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்து கடந்த 1-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    இதில் ராஜாராம், ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி கரூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர்கள் இருவரின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர், ராஜாராம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். அவர்கள் இருவரின் நியமனமும் சட்ட விதிகளுக்கு புறம்பானது என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.

    மதுரை ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அமர்வில் நேற்று நடைபெற்றது.

    இதில் தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி மற்றும் ராஜேந்திரன் தரப்பில் மூத்த வக்கீல் சிராஜூதீன் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணை தொடங்கியதும், ‘லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமித்த தமிழக அரசின் உத்தரவுக்கு, மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை நீக்க முடியாது’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    பின்னர் தமிழக அரசின் மனு மீதான பதில் மனுவை தாக்கல் செய்ய, இந்த வழக்கின் எதிர்மனுதாரர் ராஜேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #LokAyudha #SupremeCourt
    பட்டாசு தொழிலாளர்களின் பட்டினியை எங்களால் அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். #FireWorkers #SupremeCourt
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. தீபாவளிக்கு 2 மணி நேரமும், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு 40 நிமிடங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், பசுமை பட்டாசுகள் தயாரிக்கவும் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி தமிழக அரசும், சில பட்டாசு தயாரிப்பாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு நேற்று நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், பட்டாசு வெடிப்பதால் உண்டாகும் மாசுக்கேடு மற்றும் வாகனப்புகையால் உண்டாகும் மாசுக்கேடு குறித்து மத்திய அரசு ஒரு ஒப்பீடு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வாகனப்புகையால் அதிக அளவு மாசுக்கேடு உண்டாகும் நிலையில் பட்டாசுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பட்டாசு தொழிலாளர்களின் வேலையின்மையை தடுக்கும் வகையில் வழிமுறைகளை மத்திய அரசு கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினர்.

    மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்கர்னி, பசுமை பட்டாசு தயாரிப்பது தொடர்பாக நாளை (இன்று) ஆலோசனை கூட்டம் நடைபெற்ற உள்ளதாக தெரிவித்தார்.

    இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் அரசு வக்கீல் வினோத் கன்னா ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பல்லாயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அந்த பகுதியில் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக உள்ளது.

    பட்டாசு தயாரிக்கும் தொழில் சட்டரீதியான தொழில். அதற்கான உரிமம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது பட்டாசு தொழிலுக்கே தடை விதிக்க வேண்டும் என்று கோருவது எந்த வகையில் நியாயம்? என்று வாதிட்டனர்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிலர் பட்டாசுகள் சரியானவை அல்ல என்பதால், ஒரு பிரிவினர் பட்டினியால் வாடுவதை எங்களால் அனுமதிக்க முடியாது. நிரூபணம் இல்லாத சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பட்டாசு தொழிலாளர்களின் அடிப்படை உரிமையில் பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்கக்கூடாது. இந்த வழக்கை நாங்கள் மிகவும் விரிவாக விசாரிக்க விரும்புகிறோம். வழக்கின் விசாரணை ஏப்ரல் 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்தனர். 
    ×