என் மலர்
நீங்கள் தேடியது "நீரில் மூழ்கி சிறுவன் சாவு"
- கிணற்றில் நீச்சல் பழகி குளிக்கச் செல்வதாக கூறிச் சென்றான்.
- நீண்ட போராட்டத்துக்கு பிறகு நவீன்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காமக்காபட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68). இவருக்கு நதீஸ்வரி, வைத்தீஸ்வரி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நதீஸ்வரிக்கும், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் நெல்லூரைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்து கொடுத்து அவர்களுக்கு நவீன்குமார் (14), நவீனா (10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
நதீஸ்வரியின் கணவர் இறந்து விட்டதால் அவர் தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று நவீன்குமார் அருகில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கிணற்றில் நீச்சல் பழகி குளிக்கச் செல்வதாக கூறிச் சென்றான்.
அய்யாத்துரை என்பவரது தோட்டத்து கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்தபோது திடீரென நீரில் நவீன்குமார் மூழ்கினார். உடன் சென்ற ஜோதி சிவா மற்றும் கவியரசன் ஆகியோர் அவனை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோரிடம் சிறுவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு புகார் தெரிவித்து கிணற்றில் நவீன்குமாரை தேடினர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு நவீன்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழியில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.
- அப்பகுதியில் விளையாட சென்றான்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ரோகித்சர்மா(வயது 3). இவன் நேற்று தனது பாட்டி தங்கம்மாளுடன், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளான். பின்னர் அவன் அப்பகுதியில் விளையாட சென்றான். இதற்கிடையே அந்த ரேஷன் கடை அருகில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டிருந்தது. மேலும் நேற்று முன்தினம் பெய்த மழையால், அந்த குழி முழுவதும் தண்ணீர் நிரம்பி இருந்தது. இந்நிலையில் விளையாட சென்ற ரோகித்சர்மா அந்த குழியில் தவறி விழுந்தான். இதில் நீரில் மூழ்கி அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதற்கிடையே தனது பேரனை காணவில்லையே என தங்கம்மாள், அப்பகுதியில் தேடியுள்ளார்.
அப்போது ரோகித்சர்மா குழியில் உள்ள தண்ணீரில் மூழ்கி இறந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அங்கு வந்த உறவினர்கள் ரோகித் சர்மாவின் உடலை கண்டு கதறி அழுதது, அங்கு இருந்தவர்களையும் கண்கலங்க செய்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரோகித் சர்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






