என் மலர்
வழிபாடு

புரட்டாசி மாத பவுர்ணமி
- சிவ வழிபாடு செய்பவர்களை துன்பங்கள் நெருங்காது.
- வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள்.
ஐப்பசி பவுர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற் கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பவுர்ணமி திருநாளில் சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு. அந்த வகையில் புரட்டாசி பவுர்ணமி தினத்தில் வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று வில்வார்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.
பிள்ளையார் பக்தரான கிருச்சமத முனிவரின் மகன் பலி. அவனும் பிள்ளையாரை வழிபட்டு பல வரங்களை பெற்றான். அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள். அவற்றை கொண்டு மூவுலகங்களையும் துன்புறுத்தினான். திரிபுரங்களுக்கு அதிபதியான அந்த அசுரனின் தொல்லைகளை பொறுக்க முடியாத தேவர்களும், முனிவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர்.
அவர்களை ரட்சிக்க திருவுளம் கொண்ட பிள்ளையார் அசுரன் மீது போர் தொடுத்தார். போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது சிவகணை. திரிபுரனாகிய பலி, சிவனாரின் திருவடிகளில் ஒன்றில் கலந்தான். அப்படி அவன் பீடுபேறடைந்த திருநாள் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினமாகும்.
அந்த நாளை பாகுளி என்று அழைப்பார்கள். இந்த புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களை துன்பங்கள் நெருங்காது.
புரட்டாசி பவுர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல் இந்த பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாைல பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் எல்லாமே நீங்குவதுடன் விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும்.






