என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்- 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
    X

    திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்- 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

    • கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
    • ஐப்பசி மாதம் கடைசி சுப முகூர்த்த தினம் என்பதால் திருச்செந்தூர் கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது.

    இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த னர்.

    இதையொட்டி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று ஐப்பசி மாதம் கடைசி சுப முகூர்த்த தினம் என்பதால் திருச்செந்தூர் கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டத்துடன் மணமக்கள் வீட்டார்கள் கூட்டமும் கோவில் அதிகமாக காணப்பட்டது.

    Next Story
    ×