என் மலர்
கோவில்கள்
ஐயப்பன் அருள் பல அருள்பவன். சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாற்றை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
ஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல்.
மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். ஐயப்பன் வரலாறு பற்றி கூறப்படுவதாவது:-
கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார்.
குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும், தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம் உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொருளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர்.
வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும் தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.
அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள்.ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும் குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.
ஆனால் எங்குமே நல் மனதைக் கெடுக்கும் புல்லுருவிகள் இருக்குமல்லவா? ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர்.
தீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.
ஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை. தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுததாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன். புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள். ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.
மேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.
இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.
ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு முறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்ட போது அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.
மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சார்த்தப்படும்.
ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை.
மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். ஐயப்பன் வரலாறு பற்றி கூறப்படுவதாவது:-
கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார்.
குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும், தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம் உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொருளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர்.
வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும் தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.
அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள்.ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும் குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.
ஆனால் எங்குமே நல் மனதைக் கெடுக்கும் புல்லுருவிகள் இருக்குமல்லவா? ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர்.
தீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.
ஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை. தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுததாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன். புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள். ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.
மேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.
இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.
ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு முறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்ட போது அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.
மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சார்த்தப்படும்.
ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை.
ஒருவரது உயிர் கடைசி காலங்களில் மரண அவஸ்தையில் சிக்காமல், சிரமமில்லாமல் பிரியவும், ஆன்மா அமைதியடையவும் வழிபட வேண்டிய திருத்தலம் ஒன்றுள்ளது. அந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நீண்ட காலம் வாழவேண்டுமென்ற ஆசை உண்டு. மரணம் என்பதை வேண்டுமென்று வரவேற்பவர் யாரும் உண்டா! நாம் எல்லோருமே வேண்டாம் என்று பதறியடித்து ஓடுபவர்கள் தான். மரண பயம் ஒவ்வொருவருக்கும் உண்டு. நமது உயிரை பறித்துக் கொண்டு, மரணத்தைத் தருபவரை எமன் என்று இந்து புராணங்கள் சொல்கின்றன. மரண பயத்தை நீக்கி மனிதர்களுக்கு வாழ்வு தருபவர், முக்கண் பரமனான சிவபெருமான் தான்.
எனவே எம பயம் நீங்கி ஆயுள் நீட்டிக்க வழி படவும், பூஜைகள் புரியவும், பரிகாரங்கள் செய்யவும் தமிழ்நாட்டில் நாகை மாவட்டம் திருக்கடவூர் வீரட்டேசுவரர், திருவாரூர் மாவட்டம் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர், தஞ்சை மாவட்டம் திருவையாறு ஆட்கொண்டேசுவரர், குரு தலமான ஆலங்குடி அருகில் உள்ள நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் போன்ற தலங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் மனிதர்கள் தொண்ணூறு, நூறு வயதுகளைத் தொடும் போது, அவர்களால் சாதாரணமாக வாழ முடிவதில்லை. உடன் இருப்பவர்களுக்கு சுமையாக இருக்கிறார்கள். அதிலும் சிலர் மரணப்படுக்கையில் கிடக்கும் போது, உயிர் இதோ.. அதோ.. என்று பல மாதங்களாக இழுத்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்களின் உயிர் உடனடியாகப் பிரிந்து நற்கதி அடைய வேண்டும் என்று, உடனிருப்பவர்கள் வாய்விட்டுச் சொல்லுவதை நாம் பல இடங்களில் கேட்டிருக்கலாம்.
ஒருவரது உயிர் கடைசி காலங்களில் மரண அவஸ்தையில் சிக்காமல், அவரது இன்னுயிர் சிரமமில்லாமல் பிரியவும், ஆன்மா அமைதியடையவும் வழிபட வேண்டிய திருத்தலம் ஒன்றுள்ளது. அந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.
திருமாகாளம் :
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்துக்கு கிழக்கே காரைக்கால் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ‘திருமாகாளம்’ என்ற அழகிய கிராமம். மயிலாடுதுறை, திருவாரூர், கும்பகோணம், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய ஊர்களிலிருந்து இந்தக் கிராமத்திற்குச் செல்ல பேருந்து வசதி உள்ளது. காரைக்காலுக்கு மிக அருகில் இருக்கிறது ‘கோவில் திருமாளம்’ என்று அழைக்கப்படும் ‘திருமாகாளம்’ திருத்தலம்.
காளம் என்னும் நாக கன்னி வழிபட்டதால் மாகாளம் என்று பெயர் பெற்றதாகவும், மாகாளி அம்மன் பூஜித்த ஆலயம் என்பதால் மாகாளம் என்று அழைக்கப்படுவதாகவும் வரலாறு சொல்கிறது. அதை நிரூபிக்கும் வகையிலான சிற்பங்கள் கோவிலில் காணப்படுகின்றன.
சப்தவிடங்கத் தலம்:
ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், காற்றோட்டமான திறந்த வெளியும், அதனூடே மண்டபங்களும் காணப்படுகின்றனர். இந்த மண்டபங்களைக் கடந்து சென்றால், கிழக்கு நோக்கிய சன்னிதியில் மாகாள நாதர், லிங்க மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மாகாளப் பெருமானுக்கு வலதுபுறம் தியாகேசப் பெருமான் சன்னிதி உள்ளது. இந்த ஆலயம் சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகும். ஆலயத்தில் பரிகார கணபதி, தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி, மகரிஷிகள், வில்லேந்திய முருகப்பெருமான், மகாலட்சுமி, சண்டேசர், துர்க்கை மற்றும் நவக்கிரகங்கள் காணப்படுகின்றன. தெற்கு பிரகாரத்தில் காளி அம்மன் கோவில் உள்ளது.
ஆலயத்தின் தெற்கு புறத்தில் அம்பாள் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்புரிகிறார். பட்சயாம்பிகை என்ற பெயரில் வீற்றிருக்கும், இந்த அம்பாளை வழிபடுபவர்களுக்கு திருமணம் தடை அகலும் என்பது நம்பிக்கை. அம்மனுக்கு இரண்டு சிவப்பு அரளி மாலைகளைக் கொண்டு வந்து சாத்தி வழிபாடு செய்தால், அம்பிகை நல்ல வழி காட்டுவாள் என்பது கண்கூடான விஷயம்.
அமபரன், அம்பாசுரன் என்ற இரு அரக்கர்கள் இருந்தனர். அவர்களை காளி வதம் செய்தாள். அந்த பாவம் நீங்குவதற்காக காளிதேவி, இத்தல இறைவனை வழிபட்டாள். இதனால் இறைவனுக்கு அம்பர் மகாளம் என்ற பெயரும் உண்டு. இந்த ஆலயத்தின் தல விருட்சம் கருங்காலி மரம். வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத தலவிருட்சமாக இது காணப்படுகிறது. தற்போது கருங்காலி மர கன்று ஒன்று புதியதாக வைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரது பாடல் பெற்ற தேவாரத் திருத்தலங் களில் இதுவும் ஒன்றாகும். இந்தத் திருக்கோவிலில் உள்ள மோட்ச லிங்கம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேண்டிக் கொண்டால், கடைசி காலங்களில் படுத்தப் படுக்கையில் கிடந்தபடி மரண அவஸ்தையில் வாழ்பவர்கள், நிம்மதியாக கண்மூடுவதுடன் மோட்சம் அடைவர் என்பது நம்பிக்கை.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
ஆலயத்தின் அருகில் கூத்தனூர் சரஸ்வதி கோவில், திலதர்ப்பணபுரி மந்தாரனேஸ்வரர் ஆலயம், திருமீயச்சூர் லலிதாம்பிகை சமேத மேகநாதர் கோவில் போன்ற ஆலயங்களும் இருக்கின்றன.
மோட்சத்திற்காக என்று இல்லாவிட்டாலும், சிறப்பு மிகுந்த தியாகராசப் பெருமாளையும், பட்சயாம்பிகை சமேத மாகாள நாதரையும், காளியையும் தரிசித்து எல்லா நலனும் பெற இந்த ஆலயத்திற்கு ஒருமுறை சென்று வரலாமே.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்துக்கு கிழக்கே காரைக்கால் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ‘திருமாகாளம்’ என்ற அழகிய கிராமம். மயிலாடுதுறை, திருவாரூர், கும்பகோணம், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய ஊர்களிலிருந்து இந்தக் கிராமத்திற்குச் செல்ல பேருந்து வசதி உள்ளது. காரைக்காலுக்கு மிக அருகில் இருக்கிறது ‘கோவில் திருமாளம்’ என்று அழைக்கப்படும் ‘திருமாகாளம்’ திருத்தலம்.
எனவே எம பயம் நீங்கி ஆயுள் நீட்டிக்க வழி படவும், பூஜைகள் புரியவும், பரிகாரங்கள் செய்யவும் தமிழ்நாட்டில் நாகை மாவட்டம் திருக்கடவூர் வீரட்டேசுவரர், திருவாரூர் மாவட்டம் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர், தஞ்சை மாவட்டம் திருவையாறு ஆட்கொண்டேசுவரர், குரு தலமான ஆலங்குடி அருகில் உள்ள நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் போன்ற தலங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் மனிதர்கள் தொண்ணூறு, நூறு வயதுகளைத் தொடும் போது, அவர்களால் சாதாரணமாக வாழ முடிவதில்லை. உடன் இருப்பவர்களுக்கு சுமையாக இருக்கிறார்கள். அதிலும் சிலர் மரணப்படுக்கையில் கிடக்கும் போது, உயிர் இதோ.. அதோ.. என்று பல மாதங்களாக இழுத்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்களின் உயிர் உடனடியாகப் பிரிந்து நற்கதி அடைய வேண்டும் என்று, உடனிருப்பவர்கள் வாய்விட்டுச் சொல்லுவதை நாம் பல இடங்களில் கேட்டிருக்கலாம்.
ஒருவரது உயிர் கடைசி காலங்களில் மரண அவஸ்தையில் சிக்காமல், அவரது இன்னுயிர் சிரமமில்லாமல் பிரியவும், ஆன்மா அமைதியடையவும் வழிபட வேண்டிய திருத்தலம் ஒன்றுள்ளது. அந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.
திருமாகாளம் :
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்துக்கு கிழக்கே காரைக்கால் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ‘திருமாகாளம்’ என்ற அழகிய கிராமம். மயிலாடுதுறை, திருவாரூர், கும்பகோணம், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய ஊர்களிலிருந்து இந்தக் கிராமத்திற்குச் செல்ல பேருந்து வசதி உள்ளது. காரைக்காலுக்கு மிக அருகில் இருக்கிறது ‘கோவில் திருமாளம்’ என்று அழைக்கப்படும் ‘திருமாகாளம்’ திருத்தலம்.
காளம் என்னும் நாக கன்னி வழிபட்டதால் மாகாளம் என்று பெயர் பெற்றதாகவும், மாகாளி அம்மன் பூஜித்த ஆலயம் என்பதால் மாகாளம் என்று அழைக்கப்படுவதாகவும் வரலாறு சொல்கிறது. அதை நிரூபிக்கும் வகையிலான சிற்பங்கள் கோவிலில் காணப்படுகின்றன.
சப்தவிடங்கத் தலம்:
ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், காற்றோட்டமான திறந்த வெளியும், அதனூடே மண்டபங்களும் காணப்படுகின்றனர். இந்த மண்டபங்களைக் கடந்து சென்றால், கிழக்கு நோக்கிய சன்னிதியில் மாகாள நாதர், லிங்க மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மாகாளப் பெருமானுக்கு வலதுபுறம் தியாகேசப் பெருமான் சன்னிதி உள்ளது. இந்த ஆலயம் சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகும். ஆலயத்தில் பரிகார கணபதி, தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி, மகரிஷிகள், வில்லேந்திய முருகப்பெருமான், மகாலட்சுமி, சண்டேசர், துர்க்கை மற்றும் நவக்கிரகங்கள் காணப்படுகின்றன. தெற்கு பிரகாரத்தில் காளி அம்மன் கோவில் உள்ளது.
ஆலயத்தின் தெற்கு புறத்தில் அம்பாள் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்புரிகிறார். பட்சயாம்பிகை என்ற பெயரில் வீற்றிருக்கும், இந்த அம்பாளை வழிபடுபவர்களுக்கு திருமணம் தடை அகலும் என்பது நம்பிக்கை. அம்மனுக்கு இரண்டு சிவப்பு அரளி மாலைகளைக் கொண்டு வந்து சாத்தி வழிபாடு செய்தால், அம்பிகை நல்ல வழி காட்டுவாள் என்பது கண்கூடான விஷயம்.
அமபரன், அம்பாசுரன் என்ற இரு அரக்கர்கள் இருந்தனர். அவர்களை காளி வதம் செய்தாள். அந்த பாவம் நீங்குவதற்காக காளிதேவி, இத்தல இறைவனை வழிபட்டாள். இதனால் இறைவனுக்கு அம்பர் மகாளம் என்ற பெயரும் உண்டு. இந்த ஆலயத்தின் தல விருட்சம் கருங்காலி மரம். வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத தலவிருட்சமாக இது காணப்படுகிறது. தற்போது கருங்காலி மர கன்று ஒன்று புதியதாக வைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரது பாடல் பெற்ற தேவாரத் திருத்தலங் களில் இதுவும் ஒன்றாகும். இந்தத் திருக்கோவிலில் உள்ள மோட்ச லிங்கம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேண்டிக் கொண்டால், கடைசி காலங்களில் படுத்தப் படுக்கையில் கிடந்தபடி மரண அவஸ்தையில் வாழ்பவர்கள், நிம்மதியாக கண்மூடுவதுடன் மோட்சம் அடைவர் என்பது நம்பிக்கை.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
ஆலயத்தின் அருகில் கூத்தனூர் சரஸ்வதி கோவில், திலதர்ப்பணபுரி மந்தாரனேஸ்வரர் ஆலயம், திருமீயச்சூர் லலிதாம்பிகை சமேத மேகநாதர் கோவில் போன்ற ஆலயங்களும் இருக்கின்றன.
மோட்சத்திற்காக என்று இல்லாவிட்டாலும், சிறப்பு மிகுந்த தியாகராசப் பெருமாளையும், பட்சயாம்பிகை சமேத மாகாள நாதரையும், காளியையும் தரிசித்து எல்லா நலனும் பெற இந்த ஆலயத்திற்கு ஒருமுறை சென்று வரலாமே.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்துக்கு கிழக்கே காரைக்கால் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ‘திருமாகாளம்’ என்ற அழகிய கிராமம். மயிலாடுதுறை, திருவாரூர், கும்பகோணம், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய ஊர்களிலிருந்து இந்தக் கிராமத்திற்குச் செல்ல பேருந்து வசதி உள்ளது. காரைக்காலுக்கு மிக அருகில் இருக்கிறது ‘கோவில் திருமாளம்’ என்று அழைக்கப்படும் ‘திருமாகாளம்’ திருத்தலம்.
பூராட நட்சத்திரக்காரர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு நிறைவான பலனைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தவம் செய்ய சிறந்த இடம் எது? என்று கேட்டால்.... மலை, காடு, நதியோரம், குடில், மர நிழல் இப்படிப்பட்ட இடங்களில்தான் தேவர்களும், முனிவர்களும், தேவியரும் தவமிருந்ததாக புராணங்களிலும், தல வரலாறுகளிலும் படித்திருக்கிறோம். வானில் புவி ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட இடத்தில் தேவி தவமிருந்தாள் என்பது அபூர்வமான தகவல் அல்லவா?
நகர் என்ற தலத்தில் அருள்பாலிக்கும் இறைவன் அப்ரதீஸ்வரர் ஆலயத்தின் தல புராணம் அப்படித்தான் சொல்கிறது. அது என்ன கதை?
தல வரலாறு :
ஒரு சமயம் அம்பிகை ஏகாந்தமாகத் தவமிருக்க விரும்பினாள். அதற்கான இடத்தைத் தேடியவள், அதுவரை யாரும் தவம் இருந்திராத ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தாள்.
புவி ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட பீதாம்பர யோகம் என்ற நிலையில், பூமிக்கு மேல் குறிப்பிட்ட உயரத்தில் மிதந்தவாறு, அசலன யோகம் என்ற அசைவற்ற யோக நிலையில் சர்வேஸ்வரனை நோக்கி தவமிருக்கத் தொடங்கினாள் அம்பிகை. அதை அறிந்ததும் யோக மாயையான அன்னையின் சக்தியால் இயங்கும், பிரபஞ்சத்தின் அனைத்துக் கோள்களும், நட்சத்திரங்களும் அத்தலத்தை வலமாகவும், இடமாகவும் வலம் வரலாயின.
அசலனத் தவத்திலிருந்து நவமி திதி நாள் ஒன்றில், அன்னை மீண்டாள். அப்போது அத்தலத்தில் சூரிய சந்திரக் கிரகங்களும், கோடானு கோடி நட்சத்திரங்களும் வல இடமாக வலம் வந்து இறைவனை வணங்குவதைக் கண்டு அதிசயித்தாள் தேவி. சகலமும் ஒன்றாக வலம் வர அந்த இடத்தில் இருக்கும் இறைவனின் விசேஷமான சுயம்பு வடிவே காரணம் என்பதை ஞானபூர்வமாக உணர்ந்தாள். உடனே தேவி இறைவனை கோடானு கோடி சொர்ண வில்வ தளங்களால் பூஜிக்கத் தொடங்கினாள். மகிழ்ந்த சர்வேஸ்வரன் சுயம்பு லிங்க மூர்த்தியாகத் தோன்றி அன்னையின் சலனமற்ற யோகநிலையை வாழ்த்தி அருளினார்.
அன்னை மானுட வடிவில் சலனம் ஏதுமில்லா நிலையில் தியானம் இருந்ததால், அம்பிகைக்கு ‘அசல சுந்தரி’ என்ற பெயர் வந்தது. ஆலயத்தில் இறைவனின் திருநாமம் அப்ரதீஸ்வரர் என்பதாகும். அன்னைக்கு அதுல சுந்தரி என்ற பெயரும் உண்டு. கிரகங்கள் இங்கு ஒன்றாக நகர்ந்ததால் ‘நகர்’ என்று பெயர் பெற்ற தலம் இது. இங்குள்ள கல்வெட்டுளிலும் ‘நகர்’ என்ற பெயரே காணப்படுகிறது.
ஆலய அமைப்பு :
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சுற்றிலும் உயரமான மதிற்சுவர் உள்ளது. முகப்பைத் தாண்டியதும் இடதுபுறம் திருக்குளம் இருக்கிறது. அடுத்துள்ள நுழைவு வாசலைக் கடந்ததும் திருச்சுற்று வருகிறது. பிரகாரத்தின் மேற்கில் தென் கயிலாசநாதர், சண்முகநாதர், வள்ளி - தெய்வானை, வட கயிலாசநாதர், கஜலட்சுமி சன்னிதிகள் உள்ளன.
வடக்கில் ஆதி மூலவரான நகரீஸ்வரரின் தனிக்கோவில் உள்ளது. இவரது சன்னிதிக்கு எதிரே ஆலயத்தின் தலவிருட்சமான மகாவில்வ மரம் இருக்கிறது. மற்ற வில்வ மரங்களைப் போல் இந்த மரத்தில் முட்கள் காணப்படவில்லை. காசியில் மட்டுமே இது போன்ற மரங்கள் காணப்படுவதாகக் கூறுகின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதியும், வட கிழக்கு மூலையில் நவக்கிரகங்களும் உள்ளன. தேவ கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மத்தியில் இருக்க மற்ற கிரகங்கள் சூரியனை பார்த்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது அபூர்வ அமைப்பாகும்.
பிரகாரத்தின் கீழ் பகுதியில் சூரியன், பைரவர் திருமேனிகள் உள்ளன. காலசந்தியின் போது முதலில் சூரியனுக்கு தீபாராதனைக் காட்டிய பிறகே, விநாயகருக்கும், இறைவன், இறைவிக்கும் தீபாராதனை காட்டப்படுகின்றன. இந்த விநோத வழக்கம், இந்த ஆலயத்தில் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.
மண்டபத்தின் வலதுபுறம் இறைவி அதுல சுந்தரி தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு நான்கு கரங்கள். தனது மேல் கரங்களில் அங்குசம் பாசம் தாங்கியும், கீழ்க்கரங்களில் அபய வரத முத்திரை தாங்கியும், ஜடாமகுடம் அணிந்தும் அன்னை கருணை ததும்ப அருள்பாலிக்கும் அழகே அழகு.
கருவறையில் இறைவன் அப்ரதீஸ்வரர் லிங்கத்திருமேனியாக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவரின் விமானம் தஞ்சைப் பெரிய கோவிலில் இருப்பது போன்று மிக உயரமாக உள்ளது. இறைவனுக்கு எதிரே இரண்டு நந்திகள் உள்ளன. பிரதோஷ காலத்தில் இந்த இரண்டு நந்திகளையும் வழிபடுவதால் இரட்டிப்பு பலன் கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். இரண்டாம் ராஜாதி ராஜன், மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. ஆலயம் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டிருப்பது ஆலயத்தின் மற்றொரு சிறப்பு.
தல விருட்சமான மகா வில்வ மரத்தின் அடியில், ஒரு பெரிய சகஸ்ரலிங்கம் அமைக்கப்பெற்றுள்ளது. இந்த மரத்திற்கு சந்தனம், பூசு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு புத்தாடை அணிவித்து மரத்தையும், சகஸ்ரலிங்கத்தையும் வழிபட்டால் பித்ரு தோஷமும், இன்னபிற தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இத்தலத்து இறைவனையும், இறைவியையும் கோள்களே வழிபட்டதால், இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு நட்சத்திர தோஷம், கிரகதோஷம் முதலியன நீங்கும் என்பது ஐதீகம். திருமணக் குழப்பங்கள் நீங்கவும், குழந்தைப்பேறு பெறவும் நவமி திதியில் இத்தலம் வந்து கோவில் பிரகாரத்தை இடம் வலமாகச் சுற்றி வந்து தரிசித்தால் உரிய பலன் கிடக்கும்.
ஆராதனைகள் :
தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம், காலை 6 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தின் தீர்த்தம் பால்குனி ஆறு. இந்த ஆலயத்தில் நவராத்திரி, தீபாவளி, பொங்கல், சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி, சோமவாரங்கள், பிரதோஷ நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பவுர்ணமி நாட்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் விளக்குப் பூஜை வெகு சிறப்பாக நடைபெறும். திருவாதிரை அன்று நடராஜர் வீதியுலா வருவதுண்டு.
இறைவனையும் இறைவியையும் கோள்கள் வழிபட்ட தலம் இது. எனவே இத்தல இறைவன் இறைவியை வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பதுடன், பூராட நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டு நிறைவான பலனைப் பெறலாம் என்று பக்தர்கள் நம்புவது உண்மையே.
அருகாமை ஆலயங்கள் :
நகர் என்ற இந்த ஊருக்கு அருகில் ஏராளமான சிறப்பு பெற்ற ஆலயங்கள் உள்ளன. லால்குடி சப்தரிஷிஸ்வரர் ஆலயம், திருமங்கலம் சாம வேதீஸ்வரர் ஆலயம், பூவாளூர் திருமூலநாதர் ஆலயம், திருமாந்துறை ஆம்ரவனேஸ்வரர் ஆலயம், ஆங்கரை மருதாந்த நாதேஸ்வரர் ஆலயம், ஆதிகுடி அங்குரேஸ்வரர் ஆலயம், திண்ணியம் சண்முகநாத சுவாமி ஆலயம் போன்ற ஆலயங்கள் உள்ளன.
திருச்சி நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், லால்குடி சாலையில் மாந்துறையில் இருந்து வடக்கே 2 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது நகர் என்ற திருத்தலம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் செல்லும் பேருந்துகள் இவ்வூர் வழியாகச் செல்லும்.
நகர் என்ற தலத்தில் அருள்பாலிக்கும் இறைவன் அப்ரதீஸ்வரர் ஆலயத்தின் தல புராணம் அப்படித்தான் சொல்கிறது. அது என்ன கதை?
தல வரலாறு :
ஒரு சமயம் அம்பிகை ஏகாந்தமாகத் தவமிருக்க விரும்பினாள். அதற்கான இடத்தைத் தேடியவள், அதுவரை யாரும் தவம் இருந்திராத ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தாள்.
புவி ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட பீதாம்பர யோகம் என்ற நிலையில், பூமிக்கு மேல் குறிப்பிட்ட உயரத்தில் மிதந்தவாறு, அசலன யோகம் என்ற அசைவற்ற யோக நிலையில் சர்வேஸ்வரனை நோக்கி தவமிருக்கத் தொடங்கினாள் அம்பிகை. அதை அறிந்ததும் யோக மாயையான அன்னையின் சக்தியால் இயங்கும், பிரபஞ்சத்தின் அனைத்துக் கோள்களும், நட்சத்திரங்களும் அத்தலத்தை வலமாகவும், இடமாகவும் வலம் வரலாயின.
அசலனத் தவத்திலிருந்து நவமி திதி நாள் ஒன்றில், அன்னை மீண்டாள். அப்போது அத்தலத்தில் சூரிய சந்திரக் கிரகங்களும், கோடானு கோடி நட்சத்திரங்களும் வல இடமாக வலம் வந்து இறைவனை வணங்குவதைக் கண்டு அதிசயித்தாள் தேவி. சகலமும் ஒன்றாக வலம் வர அந்த இடத்தில் இருக்கும் இறைவனின் விசேஷமான சுயம்பு வடிவே காரணம் என்பதை ஞானபூர்வமாக உணர்ந்தாள். உடனே தேவி இறைவனை கோடானு கோடி சொர்ண வில்வ தளங்களால் பூஜிக்கத் தொடங்கினாள். மகிழ்ந்த சர்வேஸ்வரன் சுயம்பு லிங்க மூர்த்தியாகத் தோன்றி அன்னையின் சலனமற்ற யோகநிலையை வாழ்த்தி அருளினார்.
அன்னை மானுட வடிவில் சலனம் ஏதுமில்லா நிலையில் தியானம் இருந்ததால், அம்பிகைக்கு ‘அசல சுந்தரி’ என்ற பெயர் வந்தது. ஆலயத்தில் இறைவனின் திருநாமம் அப்ரதீஸ்வரர் என்பதாகும். அன்னைக்கு அதுல சுந்தரி என்ற பெயரும் உண்டு. கிரகங்கள் இங்கு ஒன்றாக நகர்ந்ததால் ‘நகர்’ என்று பெயர் பெற்ற தலம் இது. இங்குள்ள கல்வெட்டுளிலும் ‘நகர்’ என்ற பெயரே காணப்படுகிறது.
ஆலய அமைப்பு :
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சுற்றிலும் உயரமான மதிற்சுவர் உள்ளது. முகப்பைத் தாண்டியதும் இடதுபுறம் திருக்குளம் இருக்கிறது. அடுத்துள்ள நுழைவு வாசலைக் கடந்ததும் திருச்சுற்று வருகிறது. பிரகாரத்தின் மேற்கில் தென் கயிலாசநாதர், சண்முகநாதர், வள்ளி - தெய்வானை, வட கயிலாசநாதர், கஜலட்சுமி சன்னிதிகள் உள்ளன.
வடக்கில் ஆதி மூலவரான நகரீஸ்வரரின் தனிக்கோவில் உள்ளது. இவரது சன்னிதிக்கு எதிரே ஆலயத்தின் தலவிருட்சமான மகாவில்வ மரம் இருக்கிறது. மற்ற வில்வ மரங்களைப் போல் இந்த மரத்தில் முட்கள் காணப்படவில்லை. காசியில் மட்டுமே இது போன்ற மரங்கள் காணப்படுவதாகக் கூறுகின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதியும், வட கிழக்கு மூலையில் நவக்கிரகங்களும் உள்ளன. தேவ கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மத்தியில் இருக்க மற்ற கிரகங்கள் சூரியனை பார்த்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது அபூர்வ அமைப்பாகும்.
பிரகாரத்தின் கீழ் பகுதியில் சூரியன், பைரவர் திருமேனிகள் உள்ளன. காலசந்தியின் போது முதலில் சூரியனுக்கு தீபாராதனைக் காட்டிய பிறகே, விநாயகருக்கும், இறைவன், இறைவிக்கும் தீபாராதனை காட்டப்படுகின்றன. இந்த விநோத வழக்கம், இந்த ஆலயத்தில் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.
மண்டபத்தின் வலதுபுறம் இறைவி அதுல சுந்தரி தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு நான்கு கரங்கள். தனது மேல் கரங்களில் அங்குசம் பாசம் தாங்கியும், கீழ்க்கரங்களில் அபய வரத முத்திரை தாங்கியும், ஜடாமகுடம் அணிந்தும் அன்னை கருணை ததும்ப அருள்பாலிக்கும் அழகே அழகு.
கருவறையில் இறைவன் அப்ரதீஸ்வரர் லிங்கத்திருமேனியாக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவரின் விமானம் தஞ்சைப் பெரிய கோவிலில் இருப்பது போன்று மிக உயரமாக உள்ளது. இறைவனுக்கு எதிரே இரண்டு நந்திகள் உள்ளன. பிரதோஷ காலத்தில் இந்த இரண்டு நந்திகளையும் வழிபடுவதால் இரட்டிப்பு பலன் கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். இரண்டாம் ராஜாதி ராஜன், மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. ஆலயம் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டிருப்பது ஆலயத்தின் மற்றொரு சிறப்பு.
தல விருட்சமான மகா வில்வ மரத்தின் அடியில், ஒரு பெரிய சகஸ்ரலிங்கம் அமைக்கப்பெற்றுள்ளது. இந்த மரத்திற்கு சந்தனம், பூசு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு புத்தாடை அணிவித்து மரத்தையும், சகஸ்ரலிங்கத்தையும் வழிபட்டால் பித்ரு தோஷமும், இன்னபிற தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இத்தலத்து இறைவனையும், இறைவியையும் கோள்களே வழிபட்டதால், இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு நட்சத்திர தோஷம், கிரகதோஷம் முதலியன நீங்கும் என்பது ஐதீகம். திருமணக் குழப்பங்கள் நீங்கவும், குழந்தைப்பேறு பெறவும் நவமி திதியில் இத்தலம் வந்து கோவில் பிரகாரத்தை இடம் வலமாகச் சுற்றி வந்து தரிசித்தால் உரிய பலன் கிடக்கும்.
ஆராதனைகள் :
தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம், காலை 6 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தின் தீர்த்தம் பால்குனி ஆறு. இந்த ஆலயத்தில் நவராத்திரி, தீபாவளி, பொங்கல், சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி, சோமவாரங்கள், பிரதோஷ நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பவுர்ணமி நாட்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் விளக்குப் பூஜை வெகு சிறப்பாக நடைபெறும். திருவாதிரை அன்று நடராஜர் வீதியுலா வருவதுண்டு.
இறைவனையும் இறைவியையும் கோள்கள் வழிபட்ட தலம் இது. எனவே இத்தல இறைவன் இறைவியை வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பதுடன், பூராட நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டு நிறைவான பலனைப் பெறலாம் என்று பக்தர்கள் நம்புவது உண்மையே.
அருகாமை ஆலயங்கள் :
நகர் என்ற இந்த ஊருக்கு அருகில் ஏராளமான சிறப்பு பெற்ற ஆலயங்கள் உள்ளன. லால்குடி சப்தரிஷிஸ்வரர் ஆலயம், திருமங்கலம் சாம வேதீஸ்வரர் ஆலயம், பூவாளூர் திருமூலநாதர் ஆலயம், திருமாந்துறை ஆம்ரவனேஸ்வரர் ஆலயம், ஆங்கரை மருதாந்த நாதேஸ்வரர் ஆலயம், ஆதிகுடி அங்குரேஸ்வரர் ஆலயம், திண்ணியம் சண்முகநாத சுவாமி ஆலயம் போன்ற ஆலயங்கள் உள்ளன.
திருச்சி நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், லால்குடி சாலையில் மாந்துறையில் இருந்து வடக்கே 2 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது நகர் என்ற திருத்தலம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் செல்லும் பேருந்துகள் இவ்வூர் வழியாகச் செல்லும்.
காமதேனு பசு வழிபட்ட பசுபதீஸ்வரர் கோவில் பற்றிய சிறப்பான தகவல்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.
கொங்கு மண்டலத்தில் உள்ள ஏழு சிவாலயங்களாகிய ஆதி கருவூர், வெஞ்சமாங்கூடலூர், திருமுருகன்பூண்டி, அவினாசி, திருச்செங்கோடு, பவானி, திருப்பாண்டிக் கொடுமுடி என்பனவற்றும் முதன்மையானதாக உள்ளது ஆதி கருவூர். தற்போது கரூர் என்று அழைக்கப்படும் இந்த திருத்தலத்தில் உள்ள பசுபதீஸ்வரர் கோவில் சிறப்புமிக்கதாகும்.
ஆதி கருவூர் என்று இந்தத் திருத்தலம் அழைக்கப்படுவதற்கு, உலகம் தோன்றும் போது முதன் முதலாக தோன்றிய ஊர் என்பதாகவும், பிரம்மன் தனது படைப்பு தொழிலை முதன் முதலாக தொடங்கிய இடம் என்பதாகவும் கொள்ளலாம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்புகளை கொண்டதாக இந்த ஆலயம் திகழ்கிறது.
தல வரலாறு :
பிரம்மன் தானே ஆதிகர்த்தா என்றும், தான் படைப்பு தொழிலை செய்யாவிட்டால், காத்தல், அழித்தல் முதலியவைகளை செய்பவர்களுக்கு வேலையில்லை என்றும் எண்ணி கர்வம் கொண்டார். அவரது அறியாமையை போக்க நினைத்தார் சிவபெருமான். ஒரு முறை பிரம்மன் படைப்புத் தொழிலைத் தொடங்கினார். ஆனால் எந்த ஒரு உயிரும் உருவாகவில்லை.
சிவபெருமான், தன்னை வணங்க கயிலைக்கு வந்த காமதேனுவிடம், 'நீ பூலோகம் சென்று, பிரம்மனைப் போல படைப்பு தொழில் செய்து வா' என்று அருளினார். அதன்படி அன்று முதல் பிரம்மனுக்கு பதிலாக காமதேனு பசுவே, படைப்புத் தொழிலை செய்து வந்தது. இதையறிந்ததும் கர்வம் அகன்ற பிரம்மதேவன், சிவபெருமானை வணங்கி தான் செய்த பிழைக்கு வருந்தினார். மீண்டும் தனக்குப் படைப்புத் தொழிலை தந்தருள வேண்டும் என்று வேண்டினார்.
உடனே சிவபெருமான், 'நீ ஆம்பிரமா நதிக்கரையில் உள்ள வஞ்சிவனம் எனப்படும் கருவூரில், என்னை தியானித்து வழிபடுவாயாக' என்று அருளினார். அதன்படி பிரம்ம தேவன், ஆம்பிரமா நதிக்கரையில் இருந்து சிவபெருமானை வழிபட்டு வந்தார். பல காலம் அவர் செய்து வந்த தவத்தின் பலனாக அவருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார்.
'பிரம்மனே! இன்று முதல் உன்னுடைய அனைத்து வினைகளும் அகன்றது. இந்த தலத்தில் பெரும் வேள்வி ஒன்றை இயற்றி, கலைமகளை மணம் செய்து படைப்பு தொழிலையும் இந்த இடத்தில் இருந்த படியே நடத்துவாயாக..' என்று அருள்புரிந்தார்.
அதன்பிறகு பிரம்மன், ஆம்பிரமா நதியின் வடபுறத்தில் தனது பெயரால் தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி, சிவபெருமானை வழிபட்டார். பின்னர் வெண்ணெய் மலையின் வடக்கே பெரிய வேள்விச் சாலை ஒன்றை ஏற்படுத்தி வேள்வி செய்தார். பின்னர் கலைமகளை மணம் முடித்தார். தொடர்ந்து அந்தப் பகுதியில் சிவபெருமானுக்கு திருக்கோவில் ஒன்றையும் அமைத்தார். அந்த ஆலயத்தின் தென்கிழக்கு திசையில் காளி கோவில் ஒன்றும், அய்யனார் கோவில் ஒன்றும் தோற்றுவித்தார்.
பூலோகம் வந்த காமதேனு வராககிரி தொடங்கி, ஒவ்வொரு சிவாலயமாக வழிபட்டவாறே வஞ்சிவனம் வந்தது. அங்கிருந்து தவம் செய்தது. ஒரு நாள் ஆகாயத்தில் இருந்து ஒரு அசரீரி ஒலித்தது. 'காமதேனுவே! வஞ்சி வனத்துக்குள் ஒரு புற்றிடத்தில், ஆதிலிங்கம் என்னும் மகாலிங்கம் உள்ளது.
அது சுயம்பு மூர்த்தியாகும். அதனை பூஜித்து வா' என்றது அந்தக் குரல். காமதேனுவும் அவ்வாறே சென்று, ஆதிலிங்கத்தை கண்டு, தனது மடியில் இருந்து பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது. ஒரு நாள் அதன் கால் குளம்பு, இறைவனின் திருமுடியின் இடது பாகத்தில் பட்டுவிட்டது. இதனால் அதில் இருந்து ரத்தம் வெளிவந்தது. அதைக் கண்ட காமதேனு பதைபதைத்தது.
அப்போது இறைவன் தோன்றி, 'காமதேனுவே! பதற்றம் வேண்டாம். இது உன் பிழையல்ல. நீ என்னை வழிபட்டமையால், இன்றும் முதல் இந்த லிங்கம் பசுபதிநாதர் என்ற பெயரால் அழைக்கப்படும். என்னுடைய அருள் இருந்தால், பிரம்மன் மட்டுமல்ல... பசுவும் கூட படைப்புத் தொழிலை நடத்தும் என்பதை உணர்த்துவதற்காகவே உன்னை பூலோகம் வந்து படைப்புத் தொழில் செய்யச் செய்தேன். பிரம்மனிடம் படைப்புத் தொழிலை ஒப் படைத்து விட்டு, தேவலோகம் செல்வாயாக' என்று ஆசி கூறி மறைந்தார் என்பது தல வரலாறு.
ஆலயத்தின் முன்பாக ஏழு நிலை ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி தருகிறது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், சிறிய கோபுரம் ஐந்து நிலைகளுடன் உள்ளது. இரண்டிற்கும் இடைபட்ட இடத்தில் விளக்கேற்றும் வகையில் கல் தூண் ஒன்று இருக்கிறது. இதன் நான்கு பகுதிகளிலும் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. தெற்கு நோக்கியவாறு விநாயகர் வீற்றிருக்கிறார். 12 நாகங்களால் அமையப்பெற்ற நாகப்பந்தலின் கீழ், காமதேனு தன் நாவால் லிங்கத்தை வருடியபடி, பால் சொரியும் காட்சி அமைப்பு காணப்படுகிறது. ஆலயத்திற்குள் வீற்றிருக்கும் மூலவரான சிவலிங்கம் சுயம்பு மூர்த்தியாகும்.
இவர் பசுபதிநாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த மூர்த்தம் சற்றே சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. பங்குனி மாதத்தில் தன் மீது விழும் சூரிய ஒளியை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு சாய்ந்துள்ளதாக காரண காரியம் கூறப்படுகிறது. இந்த லிங்கத்தின் மீது பசுவின் காலடி தடம் இருப்பதை இன்றும் காணலாம். கிழக்கு நோக்கி அம்மன் சன்னிதி உள்ளது. அம்பாள் அலங்காரவல்லி என்னும் கிருபாநாயகி ஆவார். அம்மன் திருவடியின் கீழ் சக்ர பீடம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது தவிர தெற்கு நோக்கியவாறு சவுந்திரநாயகி என்னும் வடிவுடையாள் அம்மனின் சன்னிதியும் இருக்கிறது.
மூலவர் கருவறையைச் சுற்றி நர்த்தன விநாயகர், தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மதேவர், துர்க்கா பரமேஸ்வரி ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. மேலும் நவக்கிரகங்களும், பைரவர் முதலிய திருவுருவங்களும் இருக்கின்றன.
இறைவனுடன் ஐக்கியமான பெண் :
ஆலயத்தில் உள்ள சவுந்திரநாயகி அம்மன் சன்னிதி, பிற்காலத்தில் அமைக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது. சவுந்திரநாயகி என்ற பெயரில் உள்ள அம்பாள், தனது தவப் பயனால், ஈசனை மணந்த மானுடப் பெண் என்று கூறப்படுகிறது. கருவூருக்கு மேற்கே அப்பிபாளையம் என்ற சிறிய கிராமம் இருந்தது. இங்கு வேட்டுவ இனத்தைச் சேர்ந்த தனவந்தருக்கு வடிவுடையாள் என்ற பெண் இருந்தாள். அவள் மற்ற பெண்களைப் போல் அல்லாமல், அதீத அறிவுடன் வளர்ந்தாள். வயது ஏற, ஏற அவளிடம் பேச்சு குறைந்து, மவுனம் அதிகரித்தது. பசுபதி ஈஸ்வரரை வணங்க வேண்டும் என்ற மகளின் கோரிக்கையை அவளது தந்தை நிறைவேற்றிவைத்தார்.
மகளுக்காக சந்தனக் கட்டையில் சிவலிங்கம் செய்து கொடுத்தார். அந்த லிங்கத்திற்கு வடிவுடையாள் தினமும் வழிபாடு செய்து வந்தாள். வேடுவ குலத்தில் பிறந்தும், புலால் உண்ணாமல் சைவ வழியில் இருந்து சிவனை பூஜித்தாள். திருமண வயது வந்ததும், பசபதீஸ்வரரையே மணக்க எண்ணினாள். அதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அன்றிரவு வடிவுடையாள் பெற்றோர் கனவில் சிவபெருமான் தோன்றினார். 'உங்கள் மகளை, யாம் பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் நாளில் திருமணம் செய்வோம். அதன் அடையாளமாக அப்பிபாளையம் முழுவதும் அன்றைய தினம் பூச்செரிந்து இருக்கும்' என்று கூறினார்.
அதைக் கேட்ட வடிவுடையாளின் பெற்றோர் பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் நாளுக்காக காத்திருக்கத் தொடங்கினர். அந்த நாளும் வந்தது. கனவில் ஈசன் சொன்னது போலவே, நிஜத்தில் அப்பிபாளையம் முழுவதும் பூச்செரிந்து இருந்தது. வீட்டில் தியானத்தில் இருந்த வடிவுடையாளின் கழுத்தில் ஒளிவீசும் மலர் மாலை அலங்கரித்து இருந்தது. இதையடுத்து ஊர் மக்கள் அனைவரும் வடிவுடையாளை பல்லக்கில் ஏற்றிக்கொண்டு, பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு வந்தனர். கருவறைக்குள் சென்ற வடிவுடையாள் இறைவனோடு ஐக்கியமானாள் என்கிறது தலவரலாறு.
பங்குனி உத்திர விழாவின் ஆறாம் நாள் பசு பதீஸ்வரர் அப்பிபாளையம் செல்வதும், அங்கிருந்து ஏழாம் நாள் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு வடிவுடையாளுடன் வருவதும் இன்றும் நடைபெறும் ஐதீக நிகழ்வாகும்.
ஆதி கருவூர் என்று இந்தத் திருத்தலம் அழைக்கப்படுவதற்கு, உலகம் தோன்றும் போது முதன் முதலாக தோன்றிய ஊர் என்பதாகவும், பிரம்மன் தனது படைப்பு தொழிலை முதன் முதலாக தொடங்கிய இடம் என்பதாகவும் கொள்ளலாம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்புகளை கொண்டதாக இந்த ஆலயம் திகழ்கிறது.
தல வரலாறு :
பிரம்மன் தானே ஆதிகர்த்தா என்றும், தான் படைப்பு தொழிலை செய்யாவிட்டால், காத்தல், அழித்தல் முதலியவைகளை செய்பவர்களுக்கு வேலையில்லை என்றும் எண்ணி கர்வம் கொண்டார். அவரது அறியாமையை போக்க நினைத்தார் சிவபெருமான். ஒரு முறை பிரம்மன் படைப்புத் தொழிலைத் தொடங்கினார். ஆனால் எந்த ஒரு உயிரும் உருவாகவில்லை.
சிவபெருமான், தன்னை வணங்க கயிலைக்கு வந்த காமதேனுவிடம், 'நீ பூலோகம் சென்று, பிரம்மனைப் போல படைப்பு தொழில் செய்து வா' என்று அருளினார். அதன்படி அன்று முதல் பிரம்மனுக்கு பதிலாக காமதேனு பசுவே, படைப்புத் தொழிலை செய்து வந்தது. இதையறிந்ததும் கர்வம் அகன்ற பிரம்மதேவன், சிவபெருமானை வணங்கி தான் செய்த பிழைக்கு வருந்தினார். மீண்டும் தனக்குப் படைப்புத் தொழிலை தந்தருள வேண்டும் என்று வேண்டினார்.
உடனே சிவபெருமான், 'நீ ஆம்பிரமா நதிக்கரையில் உள்ள வஞ்சிவனம் எனப்படும் கருவூரில், என்னை தியானித்து வழிபடுவாயாக' என்று அருளினார். அதன்படி பிரம்ம தேவன், ஆம்பிரமா நதிக்கரையில் இருந்து சிவபெருமானை வழிபட்டு வந்தார். பல காலம் அவர் செய்து வந்த தவத்தின் பலனாக அவருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார்.
'பிரம்மனே! இன்று முதல் உன்னுடைய அனைத்து வினைகளும் அகன்றது. இந்த தலத்தில் பெரும் வேள்வி ஒன்றை இயற்றி, கலைமகளை மணம் செய்து படைப்பு தொழிலையும் இந்த இடத்தில் இருந்த படியே நடத்துவாயாக..' என்று அருள்புரிந்தார்.
அதன்பிறகு பிரம்மன், ஆம்பிரமா நதியின் வடபுறத்தில் தனது பெயரால் தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி, சிவபெருமானை வழிபட்டார். பின்னர் வெண்ணெய் மலையின் வடக்கே பெரிய வேள்விச் சாலை ஒன்றை ஏற்படுத்தி வேள்வி செய்தார். பின்னர் கலைமகளை மணம் முடித்தார். தொடர்ந்து அந்தப் பகுதியில் சிவபெருமானுக்கு திருக்கோவில் ஒன்றையும் அமைத்தார். அந்த ஆலயத்தின் தென்கிழக்கு திசையில் காளி கோவில் ஒன்றும், அய்யனார் கோவில் ஒன்றும் தோற்றுவித்தார்.
பூலோகம் வந்த காமதேனு வராககிரி தொடங்கி, ஒவ்வொரு சிவாலயமாக வழிபட்டவாறே வஞ்சிவனம் வந்தது. அங்கிருந்து தவம் செய்தது. ஒரு நாள் ஆகாயத்தில் இருந்து ஒரு அசரீரி ஒலித்தது. 'காமதேனுவே! வஞ்சி வனத்துக்குள் ஒரு புற்றிடத்தில், ஆதிலிங்கம் என்னும் மகாலிங்கம் உள்ளது.
அது சுயம்பு மூர்த்தியாகும். அதனை பூஜித்து வா' என்றது அந்தக் குரல். காமதேனுவும் அவ்வாறே சென்று, ஆதிலிங்கத்தை கண்டு, தனது மடியில் இருந்து பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது. ஒரு நாள் அதன் கால் குளம்பு, இறைவனின் திருமுடியின் இடது பாகத்தில் பட்டுவிட்டது. இதனால் அதில் இருந்து ரத்தம் வெளிவந்தது. அதைக் கண்ட காமதேனு பதைபதைத்தது.
அப்போது இறைவன் தோன்றி, 'காமதேனுவே! பதற்றம் வேண்டாம். இது உன் பிழையல்ல. நீ என்னை வழிபட்டமையால், இன்றும் முதல் இந்த லிங்கம் பசுபதிநாதர் என்ற பெயரால் அழைக்கப்படும். என்னுடைய அருள் இருந்தால், பிரம்மன் மட்டுமல்ல... பசுவும் கூட படைப்புத் தொழிலை நடத்தும் என்பதை உணர்த்துவதற்காகவே உன்னை பூலோகம் வந்து படைப்புத் தொழில் செய்யச் செய்தேன். பிரம்மனிடம் படைப்புத் தொழிலை ஒப் படைத்து விட்டு, தேவலோகம் செல்வாயாக' என்று ஆசி கூறி மறைந்தார் என்பது தல வரலாறு.
ஆலயத்தின் முன்பாக ஏழு நிலை ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி தருகிறது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், சிறிய கோபுரம் ஐந்து நிலைகளுடன் உள்ளது. இரண்டிற்கும் இடைபட்ட இடத்தில் விளக்கேற்றும் வகையில் கல் தூண் ஒன்று இருக்கிறது. இதன் நான்கு பகுதிகளிலும் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. தெற்கு நோக்கியவாறு விநாயகர் வீற்றிருக்கிறார். 12 நாகங்களால் அமையப்பெற்ற நாகப்பந்தலின் கீழ், காமதேனு தன் நாவால் லிங்கத்தை வருடியபடி, பால் சொரியும் காட்சி அமைப்பு காணப்படுகிறது. ஆலயத்திற்குள் வீற்றிருக்கும் மூலவரான சிவலிங்கம் சுயம்பு மூர்த்தியாகும்.
இவர் பசுபதிநாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த மூர்த்தம் சற்றே சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. பங்குனி மாதத்தில் தன் மீது விழும் சூரிய ஒளியை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு சாய்ந்துள்ளதாக காரண காரியம் கூறப்படுகிறது. இந்த லிங்கத்தின் மீது பசுவின் காலடி தடம் இருப்பதை இன்றும் காணலாம். கிழக்கு நோக்கி அம்மன் சன்னிதி உள்ளது. அம்பாள் அலங்காரவல்லி என்னும் கிருபாநாயகி ஆவார். அம்மன் திருவடியின் கீழ் சக்ர பீடம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது தவிர தெற்கு நோக்கியவாறு சவுந்திரநாயகி என்னும் வடிவுடையாள் அம்மனின் சன்னிதியும் இருக்கிறது.
மூலவர் கருவறையைச் சுற்றி நர்த்தன விநாயகர், தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மதேவர், துர்க்கா பரமேஸ்வரி ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. மேலும் நவக்கிரகங்களும், பைரவர் முதலிய திருவுருவங்களும் இருக்கின்றன.
இறைவனுடன் ஐக்கியமான பெண் :
ஆலயத்தில் உள்ள சவுந்திரநாயகி அம்மன் சன்னிதி, பிற்காலத்தில் அமைக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது. சவுந்திரநாயகி என்ற பெயரில் உள்ள அம்பாள், தனது தவப் பயனால், ஈசனை மணந்த மானுடப் பெண் என்று கூறப்படுகிறது. கருவூருக்கு மேற்கே அப்பிபாளையம் என்ற சிறிய கிராமம் இருந்தது. இங்கு வேட்டுவ இனத்தைச் சேர்ந்த தனவந்தருக்கு வடிவுடையாள் என்ற பெண் இருந்தாள். அவள் மற்ற பெண்களைப் போல் அல்லாமல், அதீத அறிவுடன் வளர்ந்தாள். வயது ஏற, ஏற அவளிடம் பேச்சு குறைந்து, மவுனம் அதிகரித்தது. பசுபதி ஈஸ்வரரை வணங்க வேண்டும் என்ற மகளின் கோரிக்கையை அவளது தந்தை நிறைவேற்றிவைத்தார்.
மகளுக்காக சந்தனக் கட்டையில் சிவலிங்கம் செய்து கொடுத்தார். அந்த லிங்கத்திற்கு வடிவுடையாள் தினமும் வழிபாடு செய்து வந்தாள். வேடுவ குலத்தில் பிறந்தும், புலால் உண்ணாமல் சைவ வழியில் இருந்து சிவனை பூஜித்தாள். திருமண வயது வந்ததும், பசபதீஸ்வரரையே மணக்க எண்ணினாள். அதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அன்றிரவு வடிவுடையாள் பெற்றோர் கனவில் சிவபெருமான் தோன்றினார். 'உங்கள் மகளை, யாம் பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் நாளில் திருமணம் செய்வோம். அதன் அடையாளமாக அப்பிபாளையம் முழுவதும் அன்றைய தினம் பூச்செரிந்து இருக்கும்' என்று கூறினார்.
அதைக் கேட்ட வடிவுடையாளின் பெற்றோர் பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் நாளுக்காக காத்திருக்கத் தொடங்கினர். அந்த நாளும் வந்தது. கனவில் ஈசன் சொன்னது போலவே, நிஜத்தில் அப்பிபாளையம் முழுவதும் பூச்செரிந்து இருந்தது. வீட்டில் தியானத்தில் இருந்த வடிவுடையாளின் கழுத்தில் ஒளிவீசும் மலர் மாலை அலங்கரித்து இருந்தது. இதையடுத்து ஊர் மக்கள் அனைவரும் வடிவுடையாளை பல்லக்கில் ஏற்றிக்கொண்டு, பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு வந்தனர். கருவறைக்குள் சென்ற வடிவுடையாள் இறைவனோடு ஐக்கியமானாள் என்கிறது தலவரலாறு.
பங்குனி உத்திர விழாவின் ஆறாம் நாள் பசு பதீஸ்வரர் அப்பிபாளையம் செல்வதும், அங்கிருந்து ஏழாம் நாள் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு வடிவுடையாளுடன் வருவதும் இன்றும் நடைபெறும் ஐதீக நிகழ்வாகும்.
பதவி உயர்வு, பதவி இழந்தவர்களும் இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் நிச்சயம் நிறைவேறும் என்று இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.
இத்தலத்துக்கான வரலாறு வருமாறு :
தங்கம் வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அமைத்து மூன்று புறங்களிலும் ஆண்டு வந்த தாரகாட்சன், கமலாட்சன், வித்யுமன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் இமையோர்களைத் துன்புறுத்தி வாழ்ந்து வந்தனர். மூன்று அசுரர்களையும் அவர்கள் முப்புரக் கோட்டைகளையும் சிவபெருமான் எரித்துச் சாம்பலாக்கினார்.
இத்திரிபுர தகனத்திற்கு திருமால் அம்பாக இருந்து உதவினார் என்கிறது திருவதிகைப்புராணம். இம்மூன்று அசுரர்களுக்கும் தளபதியாக இருந்த பரிகலாசூரன் மனித உடலும் குதிரை முகத்தையும் கொண்டவன். திரிபுர தகன நிகழ்ச்சியின் போது தப்பித்துச் சென்ற இவ்வசுரன் பஞ்ச கிருஷ்ணாரண்யங்களில் ஓன்றான திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பகுதிக்குள் மறைந்து கொண்டான்.
இப்பகுதியை திருமால் பக்தனான வசந்தராஜன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான். பரிக்கல் பகுதியும் இம்மன்னனின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. நரசிம்ம மூர்த்தியின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்த வசந்தராஜன் தன் படைகளின் ஓரு பிரிவினை நிறுத்தி வைத்திருந்த பரிக்கல் பகுதியில் நரசிம்மருக்கு திருக்கோயில் எழுப்புவதென்று முடிவு செய்து அதற்கான திருப்பணிகளை தொடங்கினான்.
இத்தருணம் பார்த்து பரிகலாசூரன் தன் மாயப்படைகளுடன் வந்து பரிக்கல் பகுதியைத் தாக்கி அழிக்கிறான். மன்னனின் குதிரைப்படைகளும் கோயி லும் தாக்கி அழிக்கப்படு கின்றன. மன்னனின் பெற்றோர்கள் மரணமடைகின்றனர்.
இதைப் பெரியதொரு அபசகுனமாகக் கருதிய மன்னன் அனைத்துப் பணிகளையும் நிறுத்தி வைத்து சில காலங்கள் கழித்து மறுபடியும் நரசிம்மர் கோயிலுக்கான திருப்பணியை தொடங்கபோகும் சமயத்தில் தன்னுடைய ராஜகுருவான வாமதேவரிடம் உத்தரவும் அதற்குண்டான ஆலோசனைகளையும் கேட்டான்.
முன்பு கோயில் எழுப்புவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடமும், கோயில் திருப்பணி தொடங்கிய நாளும், கோளும் சாத்திர முறையும் தவறானவை என்று எடுத்துரைத்த வாமதேவ முனிவர் வேறொரு இடத்தைத் தேர்வு செய்து, கோயில் எழுப்ப வேண்டிய சாத்திர நெறிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தார்.
மேலும் கோயில் திருப்பணி தொடங்குவதற்கு முன் மாபெரும் யாகம் ஓன்றை நடத்த வேண்டும் என அறிவுரை கூறி மூன்று நாட்கள் இரவும் பகலும் தொடர்ந்து யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். பரிகலாசூரனின் மாய வல்லமைகளை அறிந்த வாமதேவர் அவ்வசுரனால் யாகத்திற்கு இடையூறு ஏற்படாதிருக்கக் கங்கணம் ஓன்றைத் தயாரித்து அதை பூஜையில் வைத்து வசந்தராஜன் கையில் அணிவித்தார்.
முனிவர்களுடன் அமர்ந்து வாமதேவர் யாகம் நடத்த தொடங்கும் முன்பு வசந்தராஜன் தனித்திருந்து யாகம் செய்ய வேண்டியிருந்ததால் அரசரின் பாதுகாப்புக் கருதி அராக்ஷ்ர அமிர்தராக்ஷ்ர என்ற மந்திரத்தை வசந்தராஜ னுக்கு போதித்து யாகம் நடைபெறும் இடத்திலிருந்து கூப்பிடும் தூரத்தே இருந்த புதருக்குள் மன்னனை அமர வைத்தார்.
யாகத்தின்போது தனியாக இருந்து உச்சரிக்க வேண்டிய மந்திரங்களை இடையில் நிறுத்திவிடக்கூடாது என்பதற்காக ஓரே நினைவில் மனதை நிலை நிறுத்தி மந்திரத்தைக் கூறிக் கொண்டிருக்க அசம் பிரக்ஞம் என்ற ஞானநிலையை அரசனுக்கு போதித்தார்.யாகம் தொடங்கிய சில கணங்களில் தம் மாயப் படைகளுடன் அங்கு வந்த பரிகலாசூரன் வாமதேவரை நோக்கி தானே கடவுள் என்றும், என்னைத் துதித்து யாகம் செய்தால் மகிழ்ந்து இவ்விடம் விட்டு அகலுவேன் இல்லையேல் அனைத்தையும் அழிப்பேன் என்று பயமுறுத்தினான்.
நரசிங்கப் பெருமானே முழு முதற்கடவுள் என்றும் அப்பெருமானின் திருவடி தொழுது நின்றால் உமக்கு சாபவிமோசனம் உண்டு என்றும், அப்படித் தவிர்த்து இந்த யாகத்திற்கு இடையூறு விளைவித்தால் உனக்கு அழிவு நிச்சயம் என்றும் வாமதேவ முனிவர் பதிலுரைக்க கடுங்கோபம் கொண்ட பரிகலாசூரன் முனிவர்களையெல்லாம் தாக்கி யாகத்தைச் சிதைக்க ஆரம்பித்தான்.
இறுதியாக தனக்கு ஆபத்து வரும் காலங்களில் பிரயோகிப்பதற்காக வைத்திருந்த சக்திபெற்ற கோடரி ஓன்றினை வரவழைத்து, அக்கோடரியால் வசந்த ராஜனின் தலையைப் பிளக்கிறான். அவ்வாறு பிளந்த தலையிலிருந்து உக்கிரம் கலந்த கோபக்கனல் பறக்க ஸ்ரீ நரசிங்கப்பெருமான் தோன்றி எதிர்நின்ற பரிகலாசூரனின் உடலை இரண்டாகப் பிளந்து எறிந்தார்.
நரசிம்மப் பெருமானின் திருவருளால் வசந்தராஜன் உயிர்ப்பித்தெழுந்தான். வசந்தராஜன் நரசிங்கப் பெருமானின் அகோர விசுவரூபத்தைத் தரிசித்து மகிழ்ந்தான். பக்தர்களின் குறையகற்றும் எம்பிரானானே இந்த அடியோனை திருவருள் கொண்டு ஆதரித்தீர். இது இந்த எளியேன் பெற்ற மிகப் பெரும் பாக்கியம்.
என்னோடு யாகத்தில் ஈடுபட்ட என் குருநாதர் வாமதேவ மாமுனிவரையும், மற்ற முனிவர் பெருமக்களையும் உயிர்த் தெழச் செய்து அருள்புரிய வேண்டும். மேலாக அடியவர்களின் மனங்களைக் கலங்கச் செய்யும் இந்த கோப உக்கிரம் பொதிந்த திருவுருவத்தை மக்கள் துதிப்பதும், ஆராதிப்பதும் அரியதாகிவிடும் இன்முகம் காட்டும் சாந்த சொரூபராக என் அன்னை திருமகளோடு எழுந்தருள வேண்டுகிறேன் என்று வசந்தராஜன் விழுந்து வணங்க ஸ்ரீ சிங்கப்பிரான் சாந்த சொரூபராக மாற்றம் கொண்டு ஸ்ரீலட்சுமி நரசிம்மராகக் காட்சியளித்தார்.
வாமதேவரும் மற்ற முனிவர் பெருமக்களும் உயிர் பெற்றெழுந்து அக்காட்சியைக் கண்டு தொழுதனர்.மேலும் பரிகலாசூரனின் வரவாலேயே எனக்கு இந்தப் பாக்கியம் கிடைத்தது. எனவே இந்தப் பரிகலாசூரனின் பெயராலேயே இத்தலம் அழைக்கப்பெற்று விளங்க அருள்புரிய வேண்டும் என வசந்தராஜன் வேண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மமூர்த்தி அவ்வாறே அருள்புரிந்தார்.
பரிகலாசூரனை வதைத்த இடம் இதுவாதலால் பரிகலபுரம் என வழங்கி வந்து இன்று பரிக்கல் என மருவியுள்ளது. இக்கோயில் உற்சவமூர்த்தி திருவுருவச் சிலையின் அடிப்பாகத்தில் பரிகல ஸ்ரீ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
நரசிம்மரும் லட்சுமி தாயாருடன் இணைந்து சாந்த நரசிம்மராக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். சில காலம் இந்த விக்கிரகத்திற்கு சிறப்பான பூஜை செய்யப்பட்டது. காலப்போக்கில் இது சரிவர பராமரிக்கப்படாமல், புற்று மறைத்து விட்டது.
இவ்வூருக்கு அருகில் அக்ரஹாரத்தில் வாழ்ந்த வாய் பேசமுடியாத ஒருவன் கனவில் தோன்றிய பெருமாள், நரசிம்மர் சிலை புற்றில் மறைந்திருப்பதாகவும், அதை மீண்டும் பிரதிஷ்டை செய்யும்படியும் கூறி மறைந்தார். இதை அவன் ஊர்மக்களிடம் தெரிவித்தான். அதன்படி ஊர்மக்களும் லட்சுமி நரசிம்மரை எடுத்து, புதிதாக கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்கள்.
மூலஸ்தானத்தில் லட்சுமி நரசிம்மரும், தனி சன்னதியில் கனகவல்லித் தாயாரும் அருள்பாலிக்கின்றனர். பெருமாள் கிழக்கு பார்த்து உட்கார்ந்துள்ளார். அவரது இடப்பக்கம் தாயார் மடியில் உட்கார்ந்துள்ளார். பிரகாரத்தின் வாயு மூலையில் வாயுமைந்தனான அனுமன், வீர ஆஞ்சநேயராகவும், பக்த ஆஞ்சநேயராகவும் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் இவருக்கு முன்னால் நவதானியம் மற்றும் நெல்லை கொட்டி அதில் தங்கள் கோரிக்கைகளை எழுதி வழிபாடு செய்கின்றனர். இதனால் தங்கள் கோரிக்கைகள் விரைவில் தீரும் என்பது நம்பிக்கை.
பிரகாரத்தில் வடக்கே வரதராஜப்பெருமாள், தென்கிழக்கே விநாயகர், கோயில் எதிரே கருடன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். ஸ்ரீரங்கம் பெருமாள் மாதிரி இங்கும் வரதராஜ பெருமாள் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். ஊரின் வடமேற்கில் சக்கர தீர்த்தம் உள்ளது. இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்ட கோணம் எனப்படும்.
பொதுவாக நரசிம்மர் கோயிலில் உக்கிர மூர்த்தியான நரசிம்மர் தன் மடியிலுள்ள மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்திருப்பார். ஆனால் இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடி மூர்த்தி உண்டு.
இதிலிருந்தே நரசிம்மரின் உக்கிரம் முழுதும் தணிந்து வேண்டுவோர்க்கு வேண்டும் அருள் கிடைக்கும் என்பது நிச்சயம். வீர ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர் ஒரு சேர உள்ளது இத்தலத்தின் முக்கிய சிறப்பாகும். தினம் எள் எண்ணெய் தீபம் ஏற்றி, நவதானியங்களை இவர்கள் முன் பரப்பி, தாங்கள் கோரும் பிரார்த்தனைகளைக் கையால் எழுதுகிறார்கள். இதனால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். நவகிரகங்களினால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.
இது, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று எல்லா மதத்தினரும் மதவேறுபாடு இல்லாமல் வந்து வழிபடும் சிறப்பு வாய்ந்த தலம் இது.
வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு திருவிழா நடத்தப்படுகிறது. பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச் சிறப்பு என்று இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.
கை கால் ஊனம், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், கல்யாணத் தடை உள்ளவர்கள், வழக்கு வம்புகளில் சிக்கி இருப்பவர்கள், பில்லி சூன்யங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்டால் தங்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட்டு நல்ல தீர்வு கிடைக்கப் பெறுவார்கள். எண்ணெய், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் இவற்றோடு கூடிய நித்ய அபிசேகங்கள் செய்யலாம். நரசிம்மருக்கு வஸ்திரம் சாத்தலாம். பக்தர்களின் நேர்த்திகடன்களாக மொட்டை போடுதல், காதுகுத்துதல், மாவிளக்கு ஏற்றுதல், அங்கபிரதட்சணம் ஆகியவை பெருமாளுக்கு இத்தலத்தில் செய்யப்படுகின்றன.
ஆனால் கொடிமரம் பகுதியில் வைக்கப்படும் பொங்கல் போன்றவை ஆலயத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை. தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.
நெல்லைப் பரப்பி விருப்பத்தை எழுதுங்கள் :
இரண்டு ஆஞ்சநேயர் சுவாமிகள் இக்கோவிலின் உட்பிரகாரத்திலுள்ளனர். வடக்குப் பிரகாரத்தில் ஓரத்தில் பக்த ஆஞ்சநேயரும் மற்றும் வீர ஆஞ்சநேயரையும் சேவிக்கலாம். மூல மூர்த்தியை வணங்கிய பிறகு ஆஞ்சநேயரை வணங்க வேண்டும். அவர் முன்பு நெல் தானியத்தை ஒரு தட்டில் பரப்பி ஆஞ்சநேயர் முன்பு வைக்க வேண்டும். பக்தர்கள் நெல்லை பரப்பி தங்கள் விருப்பத்தை கட்டை விரலால் நெல்லில் எழுதி பகவானிடம் பிரார்த்திக்கின்றனர். இவ்வாறு தங்கள் விருப்பதை நிறைவேற்ற வேண்டுகின்றனர்.
எவரெவர் இந்த பரிக்கல் நரசிம்மரை சுவாமியை வணங்க வேண்டும் என்ற விரும்புகிறார்களோ அவர்கள் நவதானி யங்களைப் பரப்பி அதில் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகின்றனர். பக்தர்களின் பலமான நம்பிக்கை என்னவென்றால் இக்கோவிலின் முக்கியமான இடத்தில் நரசிம்மரிடம் வேண்டினால், தங்கள் கோரிக்கைகள், தொல்லைகள் நீங்கப் பெற்று, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அமைதியும் நல்ல தேக ஆரோக்கியமும் கிட்டும் என்பதாகும்.
மாசிமகத்தன்று பவுர்ணமி அன்று 10 கி.மீ. தொலை தூரத்தில் உள்ள கடிலம் நதிக்கு ஊர்வலமாகப் புறப்பாடு கண்டருளுகின்றார் ஸ்ரீநரசிம்மர். பங்குனி உத்திரத் தன்று ஸ்ரீநரசிம்மர் ஊர்வலமாக ஓரத்தூர் கிராமத்திற்கு எழுந்தருளுகின்றார். எல்லா மாதங்களிலும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு திருமுஞ்சனம் நடைபெறும். மாலை வேளையில் திருக்கோவில் உட்பிரகாரத்தில் ஸ்ரீநரசிம்மர் புறப்பாடு கண்டருளுவார்.
ஸ்ரீபரிக்கல் கோவிலுள்ள சுவர்களில் கல்வெட்டுக்கள் :
சரித்திர புகழ் பெற்ற கல்வெட்டுக்கள் பரிக்கல் கோவிலின் வெளிச்சுவர்களில் உள்ளன. பல்லாயிரக்கணக்கான புகழ் பெற்ற மீன் வடிவக் குறியீடுகள் உள்ள கல்வெட்டுக்கள், (பாண்டிய அரசர்களின் சின்னம் மீன் சின்னம்) இங்கே காணப்படுகின்றன.
13ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோப்பெருஞ்சிங்கம் என்ற பாண்டிய அரசனுடைய பெரும் பங்களிப்பை இது குறிக்கிறது. 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருபுவனம் சக்கரவர்த்தி கோனிர்மாய் கொண்டானுடைய பங்களிப்பைப் பற்றியும் நாம் அறிகிறோம்.
மற்றொரு கல்வெட்டின் மூலம் அருகிலுள்ள கிராமங்களான திருவெண்ணை நல்லூர், அனத்தூர், சித்தனூர் முதலிய கிராம மக்களுக்கு வரி தள்ளுபடியை வழங்கியதாகவும், அக்கிராம மக்கள் அந்த தொகையை இத்திருக்கோவிலைப் பராமரிக்கவும், விளக்கு ஏற்றவும் மற்றும் கோவில் திருப்பணிக்காகவும் பயன்படுத்தியதாகச் சாசனம் இங்கே உள்ளது.
முதலாம் ராஜராஜ சோழன் பரிக்கல் கோவிலின் திருக்குளத்தை வெட்டி இத்தலத்தில் திருப்பணி செய்துள்ளான். இத்திருக்கோவிலின் குடமுழுக்கை பல்லவ அரசர்கள் நாயக்க மன்னர்கள் நிறைவேற்றியதாகவும் கல்வெட்டில் குறிப்புகள் உள்ளன.
வியாசர் நிறுவிய ஆஞ்சநேயர் :
பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் இரண்டு நதிகளுக்கு இடையில் (தென்பெண்ணை, கடிலம் ஆறுகளுக்கு) அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் போல் இந்த இடமும் சிறப்பு மிகுந்தது. இதனுடைய சரித்திரப் பெயர் பரிக்கல். கிராமத்தின் நடுவில் இக்கோவிலுள்ளது. விமானத்தின் மேற்கூரை அஷ்டாங்க விமானம் எனப்படும்.
பக்தர்கள் நுழைவயிலில் ஆஞ்ச நேயரையும், விநாய கரையும், நாகர்களையும் பிரகாரத்திலும் சேவிக்கலாம். கருடனை சேவித்த பிறகு மூலவர் சந்நிதியில் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடலாம்.
ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார். ஸ்ரீகனகவல்லி தாயாரைத் தம்முடைய மடியில் இருத்திக் கொண்டுள்ளார். இவர் சுயம்பு மூர்த்தியாவார். ஸ்ரீவியாசராயர் ஆஞ்சநேயரின், 732 சிலை களை தென் இந்தியாவில் நிறுவினார். அவற்றில் இங்குள்ள ஆஞ்சநேயரும் ஒருவராவார்.
ராஜகோபுரம் கட்ட உதவுங்கள் :
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். எந்த ஒரு ஆலயத்துக்கும் அழகையும், கம்பீரத்தையும் கொடுப்பது கோபுரங்கள்தான்.
அதிலும் ராஜகோபுரத்துக்கு தனித்துவமும், ஆற்றலும் உண்டு. ஆலயத்துக்கு சென்று வழிபட இயலாதவர்கள், தூரத்தில் இருந்து ராஜகோபுரத்தை பார்த்து கைக்கூப்பி தரிசனம் செய்தாலே போதும், ஆலயத்துக்குள் சென்று வழிபட்ட முழுப் புண்ணியமும் கிடைத்து விடும்.
இதைக் கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் ஆலய ராஜகோபுரத்தை மிகவும் உயரமாக பல அடுக்குகளாக கட்டினார்கள். சில ஆலயங்களின் ராஜகோபுரம் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும். இறைவனின் ஸ்தூல வடிவமான கோபுரம் முன்பு நாம் மிகவும் சிறியவர்கள் என்ற எண்ணம் வர வேண்டும். அப்படி வந்தால்தான் “நான்” என்ற அகந்தை அகன்று பணிவு தோன்றும். இப்படி மனப் பக்குவத்தையும் ராஜகோபுரம் தரவல்லது.
எனவேதான் ஒவ்வொரு ஆலயத்திலும் ராஜகோபுரம் முக்கியமானதாக கருதப்படுகிறது. சிங்கிரிக்குடி, பூவரசன் குப்பம் இரு தலங்களிலும் அழகான ராஜ கோபுரம் உள்ளது. அதிலும் பூவரசன் குப்பம் தலத்து ராஜகோபுரம் வர்ணங்கள் பூசப் பட்டு கண்ணுக்கு குளுமையாக ஜொலிக்கிறது.
ஆனால் பரிக்கல் தலத்தில் தற்போதுதான் ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. பல தடவை அனுமதி கேட்டும் சமீபத்தில்தான் ராஜகோபுரம் கட்டுவதற்கு உரிய உத்தரவை இத்தலத்து லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு வழங்கினார். இதையடுத்து உரிய விதிப்படி பூஜைகள் போடப்பட்டு ராஜகோபுரம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மொத்தம் 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரமாக கட்டும் திட்டத்துடன் திருப்பணி தொடங்கியுள்ளது.
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை, இங்கு ராஜகோபுரம் கட்டும் திட்டத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கியுள்ளது. ஆனால் 5 நிலைகளையும் கட்டி முடிக்க இத்தொகை போதுமானதாக இல்லை. எனவே பக்தர்கள் அளித்து வரும் நன் கொடையைக் கொண்டே இத்தலத்து ராஜகோபுரம் கட்டும் பணி அந்த லட்சுமி நரசிம்மரின் அருள் பார்வையால் தங்கு தடையின்றி நடந்து வருகிறது. பக்தர்கள் அன்பளிப்பை கொடுக்க, கொடுக்க கோபுரம் உயர்ந்து வருகிறது. இந்த ஆலயத்திருப்பணியில் உங்களையும் இணைத்துக் கொள்வது மிகப்பெரும் புண்ணியத்தைத் தரும்.
நீங்கள் கொடுக்கும் தொகை சிறியதோ, பெரியதோ... அது பற்றி எதுவும் நினைக்காதீர்கள். முதலில் கோபுரம் கட்ட நாம் உதவ வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். நான் கொடுக்கும் இந்த சிறு தொகையா.... அங்கு போய் நிறையப் போகிறது என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். சிறுதுளி பெரு வெள்ளம் என்பார்கள்.
ஆகையால் பரிக்கல் ஆலய ராஜகோபுரம் கட்டுவதற்கு உங்களால் முடிந்த தொகையை கொடுங்கள். ராஜகோபுரம் கட்டுவதற்கு நாமும் உதவி செய்தோம் என்ற ஆத்மதிருப்தி உண்டாகும்.
நம்மால் தனிநபராக ஒரு ஆலயத் திருப்பணியை நிச்சயம் செய்ய இயலாது. இந்த நிலையில் நம்மால் முடிந்த உதவியை செய்யும்போது அதற்கான புண்ணிய பலன்கள் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் சந்ததிகளுக்கும் கிடைக்கும். லட்சுமி நரசிம்மரே இந்த வாய்ப்பை உங்களுக்கு தந்து இருப்பதாக கருதி ராஜகோபுர திருப்பணிக்கு உதவுங்கள். உங்கள் அன்பளிப்பை அனுப்ப வேண்டிய
முகவரி :
செயல் அலுவலர்,
அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில்,
பரிக்கல் - 607 204
உளுந்தூர் பேட்டை தாலுகா, விழுப்புரம் மாவட்டம்.
தொடர்புக்கு: 9943530122 (மணி, செயல் அலுவலர்).
தங்கம் வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அமைத்து மூன்று புறங்களிலும் ஆண்டு வந்த தாரகாட்சன், கமலாட்சன், வித்யுமன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் இமையோர்களைத் துன்புறுத்தி வாழ்ந்து வந்தனர். மூன்று அசுரர்களையும் அவர்கள் முப்புரக் கோட்டைகளையும் சிவபெருமான் எரித்துச் சாம்பலாக்கினார்.
இத்திரிபுர தகனத்திற்கு திருமால் அம்பாக இருந்து உதவினார் என்கிறது திருவதிகைப்புராணம். இம்மூன்று அசுரர்களுக்கும் தளபதியாக இருந்த பரிகலாசூரன் மனித உடலும் குதிரை முகத்தையும் கொண்டவன். திரிபுர தகன நிகழ்ச்சியின் போது தப்பித்துச் சென்ற இவ்வசுரன் பஞ்ச கிருஷ்ணாரண்யங்களில் ஓன்றான திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பகுதிக்குள் மறைந்து கொண்டான்.
இப்பகுதியை திருமால் பக்தனான வசந்தராஜன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான். பரிக்கல் பகுதியும் இம்மன்னனின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. நரசிம்ம மூர்த்தியின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்த வசந்தராஜன் தன் படைகளின் ஓரு பிரிவினை நிறுத்தி வைத்திருந்த பரிக்கல் பகுதியில் நரசிம்மருக்கு திருக்கோயில் எழுப்புவதென்று முடிவு செய்து அதற்கான திருப்பணிகளை தொடங்கினான்.
இத்தருணம் பார்த்து பரிகலாசூரன் தன் மாயப்படைகளுடன் வந்து பரிக்கல் பகுதியைத் தாக்கி அழிக்கிறான். மன்னனின் குதிரைப்படைகளும் கோயி லும் தாக்கி அழிக்கப்படு கின்றன. மன்னனின் பெற்றோர்கள் மரணமடைகின்றனர்.
இதைப் பெரியதொரு அபசகுனமாகக் கருதிய மன்னன் அனைத்துப் பணிகளையும் நிறுத்தி வைத்து சில காலங்கள் கழித்து மறுபடியும் நரசிம்மர் கோயிலுக்கான திருப்பணியை தொடங்கபோகும் சமயத்தில் தன்னுடைய ராஜகுருவான வாமதேவரிடம் உத்தரவும் அதற்குண்டான ஆலோசனைகளையும் கேட்டான்.
முன்பு கோயில் எழுப்புவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடமும், கோயில் திருப்பணி தொடங்கிய நாளும், கோளும் சாத்திர முறையும் தவறானவை என்று எடுத்துரைத்த வாமதேவ முனிவர் வேறொரு இடத்தைத் தேர்வு செய்து, கோயில் எழுப்ப வேண்டிய சாத்திர நெறிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தார்.
மேலும் கோயில் திருப்பணி தொடங்குவதற்கு முன் மாபெரும் யாகம் ஓன்றை நடத்த வேண்டும் என அறிவுரை கூறி மூன்று நாட்கள் இரவும் பகலும் தொடர்ந்து யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். பரிகலாசூரனின் மாய வல்லமைகளை அறிந்த வாமதேவர் அவ்வசுரனால் யாகத்திற்கு இடையூறு ஏற்படாதிருக்கக் கங்கணம் ஓன்றைத் தயாரித்து அதை பூஜையில் வைத்து வசந்தராஜன் கையில் அணிவித்தார்.
முனிவர்களுடன் அமர்ந்து வாமதேவர் யாகம் நடத்த தொடங்கும் முன்பு வசந்தராஜன் தனித்திருந்து யாகம் செய்ய வேண்டியிருந்ததால் அரசரின் பாதுகாப்புக் கருதி அராக்ஷ்ர அமிர்தராக்ஷ்ர என்ற மந்திரத்தை வசந்தராஜ னுக்கு போதித்து யாகம் நடைபெறும் இடத்திலிருந்து கூப்பிடும் தூரத்தே இருந்த புதருக்குள் மன்னனை அமர வைத்தார்.
யாகத்தின்போது தனியாக இருந்து உச்சரிக்க வேண்டிய மந்திரங்களை இடையில் நிறுத்திவிடக்கூடாது என்பதற்காக ஓரே நினைவில் மனதை நிலை நிறுத்தி மந்திரத்தைக் கூறிக் கொண்டிருக்க அசம் பிரக்ஞம் என்ற ஞானநிலையை அரசனுக்கு போதித்தார்.யாகம் தொடங்கிய சில கணங்களில் தம் மாயப் படைகளுடன் அங்கு வந்த பரிகலாசூரன் வாமதேவரை நோக்கி தானே கடவுள் என்றும், என்னைத் துதித்து யாகம் செய்தால் மகிழ்ந்து இவ்விடம் விட்டு அகலுவேன் இல்லையேல் அனைத்தையும் அழிப்பேன் என்று பயமுறுத்தினான்.
நரசிங்கப் பெருமானே முழு முதற்கடவுள் என்றும் அப்பெருமானின் திருவடி தொழுது நின்றால் உமக்கு சாபவிமோசனம் உண்டு என்றும், அப்படித் தவிர்த்து இந்த யாகத்திற்கு இடையூறு விளைவித்தால் உனக்கு அழிவு நிச்சயம் என்றும் வாமதேவ முனிவர் பதிலுரைக்க கடுங்கோபம் கொண்ட பரிகலாசூரன் முனிவர்களையெல்லாம் தாக்கி யாகத்தைச் சிதைக்க ஆரம்பித்தான்.
இறுதியாக தனக்கு ஆபத்து வரும் காலங்களில் பிரயோகிப்பதற்காக வைத்திருந்த சக்திபெற்ற கோடரி ஓன்றினை வரவழைத்து, அக்கோடரியால் வசந்த ராஜனின் தலையைப் பிளக்கிறான். அவ்வாறு பிளந்த தலையிலிருந்து உக்கிரம் கலந்த கோபக்கனல் பறக்க ஸ்ரீ நரசிங்கப்பெருமான் தோன்றி எதிர்நின்ற பரிகலாசூரனின் உடலை இரண்டாகப் பிளந்து எறிந்தார்.
நரசிம்மப் பெருமானின் திருவருளால் வசந்தராஜன் உயிர்ப்பித்தெழுந்தான். வசந்தராஜன் நரசிங்கப் பெருமானின் அகோர விசுவரூபத்தைத் தரிசித்து மகிழ்ந்தான். பக்தர்களின் குறையகற்றும் எம்பிரானானே இந்த அடியோனை திருவருள் கொண்டு ஆதரித்தீர். இது இந்த எளியேன் பெற்ற மிகப் பெரும் பாக்கியம்.
என்னோடு யாகத்தில் ஈடுபட்ட என் குருநாதர் வாமதேவ மாமுனிவரையும், மற்ற முனிவர் பெருமக்களையும் உயிர்த் தெழச் செய்து அருள்புரிய வேண்டும். மேலாக அடியவர்களின் மனங்களைக் கலங்கச் செய்யும் இந்த கோப உக்கிரம் பொதிந்த திருவுருவத்தை மக்கள் துதிப்பதும், ஆராதிப்பதும் அரியதாகிவிடும் இன்முகம் காட்டும் சாந்த சொரூபராக என் அன்னை திருமகளோடு எழுந்தருள வேண்டுகிறேன் என்று வசந்தராஜன் விழுந்து வணங்க ஸ்ரீ சிங்கப்பிரான் சாந்த சொரூபராக மாற்றம் கொண்டு ஸ்ரீலட்சுமி நரசிம்மராகக் காட்சியளித்தார்.
வாமதேவரும் மற்ற முனிவர் பெருமக்களும் உயிர் பெற்றெழுந்து அக்காட்சியைக் கண்டு தொழுதனர்.மேலும் பரிகலாசூரனின் வரவாலேயே எனக்கு இந்தப் பாக்கியம் கிடைத்தது. எனவே இந்தப் பரிகலாசூரனின் பெயராலேயே இத்தலம் அழைக்கப்பெற்று விளங்க அருள்புரிய வேண்டும் என வசந்தராஜன் வேண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மமூர்த்தி அவ்வாறே அருள்புரிந்தார்.
பரிகலாசூரனை வதைத்த இடம் இதுவாதலால் பரிகலபுரம் என வழங்கி வந்து இன்று பரிக்கல் என மருவியுள்ளது. இக்கோயில் உற்சவமூர்த்தி திருவுருவச் சிலையின் அடிப்பாகத்தில் பரிகல ஸ்ரீ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
நரசிம்மரும் லட்சுமி தாயாருடன் இணைந்து சாந்த நரசிம்மராக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். சில காலம் இந்த விக்கிரகத்திற்கு சிறப்பான பூஜை செய்யப்பட்டது. காலப்போக்கில் இது சரிவர பராமரிக்கப்படாமல், புற்று மறைத்து விட்டது.
இவ்வூருக்கு அருகில் அக்ரஹாரத்தில் வாழ்ந்த வாய் பேசமுடியாத ஒருவன் கனவில் தோன்றிய பெருமாள், நரசிம்மர் சிலை புற்றில் மறைந்திருப்பதாகவும், அதை மீண்டும் பிரதிஷ்டை செய்யும்படியும் கூறி மறைந்தார். இதை அவன் ஊர்மக்களிடம் தெரிவித்தான். அதன்படி ஊர்மக்களும் லட்சுமி நரசிம்மரை எடுத்து, புதிதாக கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்கள்.
மூலஸ்தானத்தில் லட்சுமி நரசிம்மரும், தனி சன்னதியில் கனகவல்லித் தாயாரும் அருள்பாலிக்கின்றனர். பெருமாள் கிழக்கு பார்த்து உட்கார்ந்துள்ளார். அவரது இடப்பக்கம் தாயார் மடியில் உட்கார்ந்துள்ளார். பிரகாரத்தின் வாயு மூலையில் வாயுமைந்தனான அனுமன், வீர ஆஞ்சநேயராகவும், பக்த ஆஞ்சநேயராகவும் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் இவருக்கு முன்னால் நவதானியம் மற்றும் நெல்லை கொட்டி அதில் தங்கள் கோரிக்கைகளை எழுதி வழிபாடு செய்கின்றனர். இதனால் தங்கள் கோரிக்கைகள் விரைவில் தீரும் என்பது நம்பிக்கை.
பிரகாரத்தில் வடக்கே வரதராஜப்பெருமாள், தென்கிழக்கே விநாயகர், கோயில் எதிரே கருடன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். ஸ்ரீரங்கம் பெருமாள் மாதிரி இங்கும் வரதராஜ பெருமாள் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். ஊரின் வடமேற்கில் சக்கர தீர்த்தம் உள்ளது. இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்ட கோணம் எனப்படும்.
பொதுவாக நரசிம்மர் கோயிலில் உக்கிர மூர்த்தியான நரசிம்மர் தன் மடியிலுள்ள மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்திருப்பார். ஆனால் இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடி மூர்த்தி உண்டு.
இதிலிருந்தே நரசிம்மரின் உக்கிரம் முழுதும் தணிந்து வேண்டுவோர்க்கு வேண்டும் அருள் கிடைக்கும் என்பது நிச்சயம். வீர ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர் ஒரு சேர உள்ளது இத்தலத்தின் முக்கிய சிறப்பாகும். தினம் எள் எண்ணெய் தீபம் ஏற்றி, நவதானியங்களை இவர்கள் முன் பரப்பி, தாங்கள் கோரும் பிரார்த்தனைகளைக் கையால் எழுதுகிறார்கள். இதனால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். நவகிரகங்களினால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.
இது, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று எல்லா மதத்தினரும் மதவேறுபாடு இல்லாமல் வந்து வழிபடும் சிறப்பு வாய்ந்த தலம் இது.
வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு திருவிழா நடத்தப்படுகிறது. பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச் சிறப்பு என்று இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.
கை கால் ஊனம், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், கல்யாணத் தடை உள்ளவர்கள், வழக்கு வம்புகளில் சிக்கி இருப்பவர்கள், பில்லி சூன்யங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்டால் தங்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட்டு நல்ல தீர்வு கிடைக்கப் பெறுவார்கள். எண்ணெய், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் இவற்றோடு கூடிய நித்ய அபிசேகங்கள் செய்யலாம். நரசிம்மருக்கு வஸ்திரம் சாத்தலாம். பக்தர்களின் நேர்த்திகடன்களாக மொட்டை போடுதல், காதுகுத்துதல், மாவிளக்கு ஏற்றுதல், அங்கபிரதட்சணம் ஆகியவை பெருமாளுக்கு இத்தலத்தில் செய்யப்படுகின்றன.
ஆனால் கொடிமரம் பகுதியில் வைக்கப்படும் பொங்கல் போன்றவை ஆலயத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை. தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.
நெல்லைப் பரப்பி விருப்பத்தை எழுதுங்கள் :
இரண்டு ஆஞ்சநேயர் சுவாமிகள் இக்கோவிலின் உட்பிரகாரத்திலுள்ளனர். வடக்குப் பிரகாரத்தில் ஓரத்தில் பக்த ஆஞ்சநேயரும் மற்றும் வீர ஆஞ்சநேயரையும் சேவிக்கலாம். மூல மூர்த்தியை வணங்கிய பிறகு ஆஞ்சநேயரை வணங்க வேண்டும். அவர் முன்பு நெல் தானியத்தை ஒரு தட்டில் பரப்பி ஆஞ்சநேயர் முன்பு வைக்க வேண்டும். பக்தர்கள் நெல்லை பரப்பி தங்கள் விருப்பத்தை கட்டை விரலால் நெல்லில் எழுதி பகவானிடம் பிரார்த்திக்கின்றனர். இவ்வாறு தங்கள் விருப்பதை நிறைவேற்ற வேண்டுகின்றனர்.
எவரெவர் இந்த பரிக்கல் நரசிம்மரை சுவாமியை வணங்க வேண்டும் என்ற விரும்புகிறார்களோ அவர்கள் நவதானி யங்களைப் பரப்பி அதில் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகின்றனர். பக்தர்களின் பலமான நம்பிக்கை என்னவென்றால் இக்கோவிலின் முக்கியமான இடத்தில் நரசிம்மரிடம் வேண்டினால், தங்கள் கோரிக்கைகள், தொல்லைகள் நீங்கப் பெற்று, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அமைதியும் நல்ல தேக ஆரோக்கியமும் கிட்டும் என்பதாகும்.
மாசிமகத்தன்று பவுர்ணமி அன்று 10 கி.மீ. தொலை தூரத்தில் உள்ள கடிலம் நதிக்கு ஊர்வலமாகப் புறப்பாடு கண்டருளுகின்றார் ஸ்ரீநரசிம்மர். பங்குனி உத்திரத் தன்று ஸ்ரீநரசிம்மர் ஊர்வலமாக ஓரத்தூர் கிராமத்திற்கு எழுந்தருளுகின்றார். எல்லா மாதங்களிலும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு திருமுஞ்சனம் நடைபெறும். மாலை வேளையில் திருக்கோவில் உட்பிரகாரத்தில் ஸ்ரீநரசிம்மர் புறப்பாடு கண்டருளுவார்.
ஸ்ரீபரிக்கல் கோவிலுள்ள சுவர்களில் கல்வெட்டுக்கள் :
சரித்திர புகழ் பெற்ற கல்வெட்டுக்கள் பரிக்கல் கோவிலின் வெளிச்சுவர்களில் உள்ளன. பல்லாயிரக்கணக்கான புகழ் பெற்ற மீன் வடிவக் குறியீடுகள் உள்ள கல்வெட்டுக்கள், (பாண்டிய அரசர்களின் சின்னம் மீன் சின்னம்) இங்கே காணப்படுகின்றன.
13ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோப்பெருஞ்சிங்கம் என்ற பாண்டிய அரசனுடைய பெரும் பங்களிப்பை இது குறிக்கிறது. 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருபுவனம் சக்கரவர்த்தி கோனிர்மாய் கொண்டானுடைய பங்களிப்பைப் பற்றியும் நாம் அறிகிறோம்.
மற்றொரு கல்வெட்டின் மூலம் அருகிலுள்ள கிராமங்களான திருவெண்ணை நல்லூர், அனத்தூர், சித்தனூர் முதலிய கிராம மக்களுக்கு வரி தள்ளுபடியை வழங்கியதாகவும், அக்கிராம மக்கள் அந்த தொகையை இத்திருக்கோவிலைப் பராமரிக்கவும், விளக்கு ஏற்றவும் மற்றும் கோவில் திருப்பணிக்காகவும் பயன்படுத்தியதாகச் சாசனம் இங்கே உள்ளது.
முதலாம் ராஜராஜ சோழன் பரிக்கல் கோவிலின் திருக்குளத்தை வெட்டி இத்தலத்தில் திருப்பணி செய்துள்ளான். இத்திருக்கோவிலின் குடமுழுக்கை பல்லவ அரசர்கள் நாயக்க மன்னர்கள் நிறைவேற்றியதாகவும் கல்வெட்டில் குறிப்புகள் உள்ளன.
வியாசர் நிறுவிய ஆஞ்சநேயர் :
பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் இரண்டு நதிகளுக்கு இடையில் (தென்பெண்ணை, கடிலம் ஆறுகளுக்கு) அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் போல் இந்த இடமும் சிறப்பு மிகுந்தது. இதனுடைய சரித்திரப் பெயர் பரிக்கல். கிராமத்தின் நடுவில் இக்கோவிலுள்ளது. விமானத்தின் மேற்கூரை அஷ்டாங்க விமானம் எனப்படும்.
பக்தர்கள் நுழைவயிலில் ஆஞ்ச நேயரையும், விநாய கரையும், நாகர்களையும் பிரகாரத்திலும் சேவிக்கலாம். கருடனை சேவித்த பிறகு மூலவர் சந்நிதியில் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடலாம்.
ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார். ஸ்ரீகனகவல்லி தாயாரைத் தம்முடைய மடியில் இருத்திக் கொண்டுள்ளார். இவர் சுயம்பு மூர்த்தியாவார். ஸ்ரீவியாசராயர் ஆஞ்சநேயரின், 732 சிலை களை தென் இந்தியாவில் நிறுவினார். அவற்றில் இங்குள்ள ஆஞ்சநேயரும் ஒருவராவார்.
ராஜகோபுரம் கட்ட உதவுங்கள் :
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். எந்த ஒரு ஆலயத்துக்கும் அழகையும், கம்பீரத்தையும் கொடுப்பது கோபுரங்கள்தான்.
அதிலும் ராஜகோபுரத்துக்கு தனித்துவமும், ஆற்றலும் உண்டு. ஆலயத்துக்கு சென்று வழிபட இயலாதவர்கள், தூரத்தில் இருந்து ராஜகோபுரத்தை பார்த்து கைக்கூப்பி தரிசனம் செய்தாலே போதும், ஆலயத்துக்குள் சென்று வழிபட்ட முழுப் புண்ணியமும் கிடைத்து விடும்.
இதைக் கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் ஆலய ராஜகோபுரத்தை மிகவும் உயரமாக பல அடுக்குகளாக கட்டினார்கள். சில ஆலயங்களின் ராஜகோபுரம் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும். இறைவனின் ஸ்தூல வடிவமான கோபுரம் முன்பு நாம் மிகவும் சிறியவர்கள் என்ற எண்ணம் வர வேண்டும். அப்படி வந்தால்தான் “நான்” என்ற அகந்தை அகன்று பணிவு தோன்றும். இப்படி மனப் பக்குவத்தையும் ராஜகோபுரம் தரவல்லது.
எனவேதான் ஒவ்வொரு ஆலயத்திலும் ராஜகோபுரம் முக்கியமானதாக கருதப்படுகிறது. சிங்கிரிக்குடி, பூவரசன் குப்பம் இரு தலங்களிலும் அழகான ராஜ கோபுரம் உள்ளது. அதிலும் பூவரசன் குப்பம் தலத்து ராஜகோபுரம் வர்ணங்கள் பூசப் பட்டு கண்ணுக்கு குளுமையாக ஜொலிக்கிறது.
ஆனால் பரிக்கல் தலத்தில் தற்போதுதான் ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. பல தடவை அனுமதி கேட்டும் சமீபத்தில்தான் ராஜகோபுரம் கட்டுவதற்கு உரிய உத்தரவை இத்தலத்து லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு வழங்கினார். இதையடுத்து உரிய விதிப்படி பூஜைகள் போடப்பட்டு ராஜகோபுரம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மொத்தம் 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரமாக கட்டும் திட்டத்துடன் திருப்பணி தொடங்கியுள்ளது.
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை, இங்கு ராஜகோபுரம் கட்டும் திட்டத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கியுள்ளது. ஆனால் 5 நிலைகளையும் கட்டி முடிக்க இத்தொகை போதுமானதாக இல்லை. எனவே பக்தர்கள் அளித்து வரும் நன் கொடையைக் கொண்டே இத்தலத்து ராஜகோபுரம் கட்டும் பணி அந்த லட்சுமி நரசிம்மரின் அருள் பார்வையால் தங்கு தடையின்றி நடந்து வருகிறது. பக்தர்கள் அன்பளிப்பை கொடுக்க, கொடுக்க கோபுரம் உயர்ந்து வருகிறது. இந்த ஆலயத்திருப்பணியில் உங்களையும் இணைத்துக் கொள்வது மிகப்பெரும் புண்ணியத்தைத் தரும்.
நீங்கள் கொடுக்கும் தொகை சிறியதோ, பெரியதோ... அது பற்றி எதுவும் நினைக்காதீர்கள். முதலில் கோபுரம் கட்ட நாம் உதவ வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். நான் கொடுக்கும் இந்த சிறு தொகையா.... அங்கு போய் நிறையப் போகிறது என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். சிறுதுளி பெரு வெள்ளம் என்பார்கள்.
ஆகையால் பரிக்கல் ஆலய ராஜகோபுரம் கட்டுவதற்கு உங்களால் முடிந்த தொகையை கொடுங்கள். ராஜகோபுரம் கட்டுவதற்கு நாமும் உதவி செய்தோம் என்ற ஆத்மதிருப்தி உண்டாகும்.
நம்மால் தனிநபராக ஒரு ஆலயத் திருப்பணியை நிச்சயம் செய்ய இயலாது. இந்த நிலையில் நம்மால் முடிந்த உதவியை செய்யும்போது அதற்கான புண்ணிய பலன்கள் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் சந்ததிகளுக்கும் கிடைக்கும். லட்சுமி நரசிம்மரே இந்த வாய்ப்பை உங்களுக்கு தந்து இருப்பதாக கருதி ராஜகோபுர திருப்பணிக்கு உதவுங்கள். உங்கள் அன்பளிப்பை அனுப்ப வேண்டிய
முகவரி :
செயல் அலுவலர்,
அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில்,
பரிக்கல் - 607 204
உளுந்தூர் பேட்டை தாலுகா, விழுப்புரம் மாவட்டம்.
தொடர்புக்கு: 9943530122 (மணி, செயல் அலுவலர்).
நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த கோவிலுக்கு வந்து ராகு காலத்தில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் என்ற திருத்தலத்தில் உள்ளது நாகேஸ்வரர் திருக்கோவில். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள மூலவரை பிரதிஷ்டை செய்தவர், பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழார் ஆவார். இந்த ஆலயத்தின் வரலாற்றைப் பார்க்கலாம்.
சோழ மன்னன் அனபாயன் இந்தப் பகுதியை ஆட்சி செய்தபோது, அவரது அரசவையில் சிறந்த சிவ பக்தரான ஒரு அமைச்சர் பணியாற்றினார். அவரது மகன் அருண்மொழிராமதேவர். குலத்தின் பெயரால் சேக்கிழார் என்று அழைக்கப்பட்டார்.
சிறு வயதிலேயே மிகந்த புலமையுடன் இருந்த சேக் கிழாரை, மன்னன் தனது அரசவையில் அமைச்சராக பணியமர்த்தினான். சேக்கிழாரின் சிறந்த பணியைக் கண்டு மகிழ்ச்சியடைந்த மன்னன், அவருக்கு ‘உத்தமசோழ பல்லவர்’ என்ற சிறப்பு பெயரிட்டு அழைத்தான். தந்தையைப் போலவே சிறந்த சிவ பக்தரான சேக்கிழார், சிவனருள் பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை ‘பெரிய புராணம்’ என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார்.
ஒரு முறை சேக்கிழார் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்றார். அங்கு ராகு பரிகார தலமான நாகேஸ்வர பெருமானை வழிபட்டார். அதன்பிறகு சேக் கிழாருக்கு, நாகேஸ்வர சுவாமியின் மீது அதீத அன்பு ஊற்றெடுத்தது. அந்த இறைவனை தினமும் தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார்.
அதே சமயம் திருநாகேஸ்வரத்திற்கு அடிக்கடி செல்ல முடியாது என்பதால், நாகேஸ்வரருக்கு, தனது ஊரிலேயே கோவில் கட்ட வேண்டும் என்று விருப்பம் கொண்டார். அதன்படியே நாகேஸ்வரரின் அமைப்பில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, இங்கு ஒரு கோவிலை எழுப்பினார். இத்தல ஈசனுக்கும் ‘நாகேஸ்வரர்’ என்றே பெயரிட்டு, தினமும் வழிபாடு செய்து வந்தார். இந்த ஆலயம் வட நாகேஸ்வரம் என்று அழைக்கப்படலாயிற்று.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவரான நாகேஸ்வரர், ராகுவின் அம்சமாகவே காட்சி தருகிறார். இவருக்கு தினமும் காலை 6.30 மணி, 10 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய வேளைகளில் பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அபிஷேகத்தில் கலந்துகொண்டும், ராகு காலத்தில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தும், உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் போன்றவற்றை நைவேத்தியமாக வைத்தும் வழிபாடு செய்யலாம். இதனால் நாகதோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஆலயத்தில் சேக்கிழார் பிரதிஷ்டை செய்த நாகேஸ்வரர் லிங்கம் சேதமடைந்தது. இதையடுத்து மூலவரான அந்த லிங்கத்தை, இந்த ஆலயத்தில் உள்ள சூரிய தீர்த்தத்தில் போட்டு விட்டு, புதியதாக ஒரு லிங்கம் செய்து மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தார்கள். ஆனால் அன்றைய தினம் இரவு, கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய சிவபெருமான், பழைய லிங்கத்தையே கருவறையில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினார்.
அதன்பின்பு, சூரிய தீர்த்தத்தில் போடப்பட்ட லிங்கம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை, ஈசன் சன்னிதியின் பின்புறம் வழிபாட்டிற்காக வைத்துள்ளனர். இந்த லிங்கத்திற்கு, ‘அருணாசலேஸ்வரர்’ என்று பெயர். பக்தர்கள் அனைவரும், இந்த லிங்கத்தையும் மூலவராக பாவித்தே வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோவில் சோழர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இங்குள்ள அம்பாள், காமாட்சி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். தெற்கு நோக்கிய சன்னிதியில் எதிரில் சிம்ம வாகனத்துடன் தனிச் சன்னிதியில் அம்பாள் இருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. விழாவின் 8-ம் நாளில் சிவன், அடியாருக்கு காட்சி தரும் வைபவம் நடைபெறும். அப்போது சுவாமிக்கு முன்புறம் செல்லும் ஒரு சப்பரத்தில், அவரைப் பார்த்தபடி சமயக்குரவர்கள் நால்வர் மற்றும் சேக்கிழார் ஆகியோர் உலா வருவார்கள். சித்ரா பவுர்ணமி அன்று அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவின் ஒரு நாள், இத்தல இறைவன் நாக வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலிப்பார்.
ஆலயத்தின் பிரகாரத்தில் சேக்கிழாருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. இவர் மூலவரான சிவ பெருமானை தரிசித்தபடி மேற்கு நோக்கி நின்றபடி அருள்புரிகிறார். வலது கையில் சின் முத்திரை, இடது கையில் ஏடு வைத்திருக்கிறார். பூசம் நட்சத்திரம் அன்று இவருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறும்.
வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தை ஒட்டி, சேக்கிழாருக்கு 10 நாட்கள் குருபூஜை நடைபெறுகிறது. குரு பூஜை தினத்தன்று, காலையில் சேக்கிழார் உற்சவமூர்த்தி, இங்கிருந்து தேரடி வீதிக்குச் செல்வார். அவரை பொதுமக்கள் சிவபெருமான் சார்பில் வரவேற்று, கோவிலுக்குள் அழைத்துச் செல்வார்கள். அதன் பிறகு சேக்கிழார், கருவறைக்குள் சென்று மூலவரை தரிசிக்கும் நிகழ்வு நடைபெறும். அன்றிரவு சேக்கிழார் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா செல்வார். பின்னர் மறுநாள் காலையில் கோவிலுக்குத் திரும்புவார். அப்போது இரவு முழுவதும் கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
இந்த ஆலயத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள சேக்கிழார் பிறந்த ஊரிலும், அவருக்கு தனிக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் 11 நாட்களுக்கு சேக்கிழார் குருபூஜை நடைபெறும். அவ்விழாவின் நான்காம் நாள் அன்று சேக்கிழார், இந்த ஆலயத்திற்கு எழுந்தருளி, நாகேஸ்வரரை தரிசித்துச் செல்வார்.
இங்குள்ள விநாயகர், ‘அனுக்ஞை விநாயகர்’ என்று பெயர் பெற்று விளங்குகிறார். 5 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆலய முகப்பு. கோவில் பிரகாரத்தில் பரவை நாச்சியாருடன் சுந்தரர் வீற்றிருக்கிறார். மேலும் நாகத்தின் வடிவில் சத்தியநாராயணர், நாகேந்திரர் மற்றும் நாகநாதேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். இந்த மூன்று நாகங்களுக்கு மத்தியிலும் லிங்க வடிவம் இருக்கிறது. காசி விஸ்வநாதர், லட்சுமி, சரஸ்வதி, வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான், கற்பக விநாயகர், சனீஸ்வரர் சன்னிதிகளும் உள்ளன. ஆலயத்தின் தல விருட்சம் செண்பக மரம் ஆகும். தல தீர்த்தம் சூரிய புஷ்கரணி.
சென்னை தாம்பரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், பல்லாவரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது குன்றத்தூர். பஸ்நிலையத்தின் அருகிலேயே கோவில் இருக்கிறது. தென் மாவட்டங்களில் இருந்து செல்பவர்கள், தாம்பரம் அல்லது பல்லாவரத்தில் இறங்கி, அங்கிருந்து வேறு பஸ்களில் ஆலயத்திற்குச் செல்லலாம்.
சோழ மன்னன் அனபாயன் இந்தப் பகுதியை ஆட்சி செய்தபோது, அவரது அரசவையில் சிறந்த சிவ பக்தரான ஒரு அமைச்சர் பணியாற்றினார். அவரது மகன் அருண்மொழிராமதேவர். குலத்தின் பெயரால் சேக்கிழார் என்று அழைக்கப்பட்டார்.
சிறு வயதிலேயே மிகந்த புலமையுடன் இருந்த சேக் கிழாரை, மன்னன் தனது அரசவையில் அமைச்சராக பணியமர்த்தினான். சேக்கிழாரின் சிறந்த பணியைக் கண்டு மகிழ்ச்சியடைந்த மன்னன், அவருக்கு ‘உத்தமசோழ பல்லவர்’ என்ற சிறப்பு பெயரிட்டு அழைத்தான். தந்தையைப் போலவே சிறந்த சிவ பக்தரான சேக்கிழார், சிவனருள் பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை ‘பெரிய புராணம்’ என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார்.
ஒரு முறை சேக்கிழார் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்றார். அங்கு ராகு பரிகார தலமான நாகேஸ்வர பெருமானை வழிபட்டார். அதன்பிறகு சேக் கிழாருக்கு, நாகேஸ்வர சுவாமியின் மீது அதீத அன்பு ஊற்றெடுத்தது. அந்த இறைவனை தினமும் தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார்.
அதே சமயம் திருநாகேஸ்வரத்திற்கு அடிக்கடி செல்ல முடியாது என்பதால், நாகேஸ்வரருக்கு, தனது ஊரிலேயே கோவில் கட்ட வேண்டும் என்று விருப்பம் கொண்டார். அதன்படியே நாகேஸ்வரரின் அமைப்பில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, இங்கு ஒரு கோவிலை எழுப்பினார். இத்தல ஈசனுக்கும் ‘நாகேஸ்வரர்’ என்றே பெயரிட்டு, தினமும் வழிபாடு செய்து வந்தார். இந்த ஆலயம் வட நாகேஸ்வரம் என்று அழைக்கப்படலாயிற்று.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவரான நாகேஸ்வரர், ராகுவின் அம்சமாகவே காட்சி தருகிறார். இவருக்கு தினமும் காலை 6.30 மணி, 10 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய வேளைகளில் பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அபிஷேகத்தில் கலந்துகொண்டும், ராகு காலத்தில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தும், உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் போன்றவற்றை நைவேத்தியமாக வைத்தும் வழிபாடு செய்யலாம். இதனால் நாகதோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஆலயத்தில் சேக்கிழார் பிரதிஷ்டை செய்த நாகேஸ்வரர் லிங்கம் சேதமடைந்தது. இதையடுத்து மூலவரான அந்த லிங்கத்தை, இந்த ஆலயத்தில் உள்ள சூரிய தீர்த்தத்தில் போட்டு விட்டு, புதியதாக ஒரு லிங்கம் செய்து மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தார்கள். ஆனால் அன்றைய தினம் இரவு, கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய சிவபெருமான், பழைய லிங்கத்தையே கருவறையில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினார்.
அதன்பின்பு, சூரிய தீர்த்தத்தில் போடப்பட்ட லிங்கம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை, ஈசன் சன்னிதியின் பின்புறம் வழிபாட்டிற்காக வைத்துள்ளனர். இந்த லிங்கத்திற்கு, ‘அருணாசலேஸ்வரர்’ என்று பெயர். பக்தர்கள் அனைவரும், இந்த லிங்கத்தையும் மூலவராக பாவித்தே வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோவில் சோழர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இங்குள்ள அம்பாள், காமாட்சி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். தெற்கு நோக்கிய சன்னிதியில் எதிரில் சிம்ம வாகனத்துடன் தனிச் சன்னிதியில் அம்பாள் இருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. விழாவின் 8-ம் நாளில் சிவன், அடியாருக்கு காட்சி தரும் வைபவம் நடைபெறும். அப்போது சுவாமிக்கு முன்புறம் செல்லும் ஒரு சப்பரத்தில், அவரைப் பார்த்தபடி சமயக்குரவர்கள் நால்வர் மற்றும் சேக்கிழார் ஆகியோர் உலா வருவார்கள். சித்ரா பவுர்ணமி அன்று அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவின் ஒரு நாள், இத்தல இறைவன் நாக வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலிப்பார்.
ஆலயத்தின் பிரகாரத்தில் சேக்கிழாருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. இவர் மூலவரான சிவ பெருமானை தரிசித்தபடி மேற்கு நோக்கி நின்றபடி அருள்புரிகிறார். வலது கையில் சின் முத்திரை, இடது கையில் ஏடு வைத்திருக்கிறார். பூசம் நட்சத்திரம் அன்று இவருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறும்.
வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தை ஒட்டி, சேக்கிழாருக்கு 10 நாட்கள் குருபூஜை நடைபெறுகிறது. குரு பூஜை தினத்தன்று, காலையில் சேக்கிழார் உற்சவமூர்த்தி, இங்கிருந்து தேரடி வீதிக்குச் செல்வார். அவரை பொதுமக்கள் சிவபெருமான் சார்பில் வரவேற்று, கோவிலுக்குள் அழைத்துச் செல்வார்கள். அதன் பிறகு சேக்கிழார், கருவறைக்குள் சென்று மூலவரை தரிசிக்கும் நிகழ்வு நடைபெறும். அன்றிரவு சேக்கிழார் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா செல்வார். பின்னர் மறுநாள் காலையில் கோவிலுக்குத் திரும்புவார். அப்போது இரவு முழுவதும் கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
இந்த ஆலயத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள சேக்கிழார் பிறந்த ஊரிலும், அவருக்கு தனிக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் 11 நாட்களுக்கு சேக்கிழார் குருபூஜை நடைபெறும். அவ்விழாவின் நான்காம் நாள் அன்று சேக்கிழார், இந்த ஆலயத்திற்கு எழுந்தருளி, நாகேஸ்வரரை தரிசித்துச் செல்வார்.
இங்குள்ள விநாயகர், ‘அனுக்ஞை விநாயகர்’ என்று பெயர் பெற்று விளங்குகிறார். 5 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆலய முகப்பு. கோவில் பிரகாரத்தில் பரவை நாச்சியாருடன் சுந்தரர் வீற்றிருக்கிறார். மேலும் நாகத்தின் வடிவில் சத்தியநாராயணர், நாகேந்திரர் மற்றும் நாகநாதேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். இந்த மூன்று நாகங்களுக்கு மத்தியிலும் லிங்க வடிவம் இருக்கிறது. காசி விஸ்வநாதர், லட்சுமி, சரஸ்வதி, வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான், கற்பக விநாயகர், சனீஸ்வரர் சன்னிதிகளும் உள்ளன. ஆலயத்தின் தல விருட்சம் செண்பக மரம் ஆகும். தல தீர்த்தம் சூரிய புஷ்கரணி.
சென்னை தாம்பரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், பல்லாவரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது குன்றத்தூர். பஸ்நிலையத்தின் அருகிலேயே கோவில் இருக்கிறது. தென் மாவட்டங்களில் இருந்து செல்பவர்கள், தாம்பரம் அல்லது பல்லாவரத்தில் இறங்கி, அங்கிருந்து வேறு பஸ்களில் ஆலயத்திற்குச் செல்லலாம்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள குச்சனூர் தலத்தில் சனீஸ்வர பகவான் சுயம்பு வடிவில் எழுந்தருளியுள்ளார்.
எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் நவகோள்கள் வையகத்தை இயக்குகின்றன. இதில் சனி கிரகத்தின் பங்கு முக்கியமானதாகும். வாழ்விலே இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். முற்பிறவியில் செய்த கர்மத்திற்கு ஏற்ப இப்பிறவியில் பலனை சனீஸ்வரன் கொடுக்கிறார்.
சனி பகவானுக்கு தமிழகத்தில் திருநள்ளாருக்கு அடுத்த புகழ்பெற்ற தலமாக குச்சனூர் விளங்குகிறது. இங்கு சனி பகவான் சுயம்பு வடிவில் மூலவராக இருப்பது தனிச்சிறப்பு.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அமைந்துள்ளது குச்சனூர் தலம். இங்கு சனீஸ்வர பகவான் சுயம்பு வடிவில் எழுந்தருளியுள்ளார். லிங்க உருவில் உள்ள இந்த சுயம்பு வளர்ந்து கொண்டே இருப்பதால் அதனை கட்டுப்படுத்த மஞ்சள் காப்பு பூசப்பட்டுள்ளது.
கால வரம்பிற்கு அப்பாற்பட்ட குச்சனூர் சனீஸ்வரனைப் பற்றி அகஸ்திய கவுசிக, சிவ நாடி ஜோதிடங்களில் குறிப்பிட்டுள்ளது. சுயம்பு மூலவர் நெற்றியில் நாமம் இடப்பட்டிருப்பது சூரிய நாராயண புத்திரன் என்பதை உணர்த்துவதற்கே. ஈஸ்வர பட்டம் பெற்றிருப்பதால் கிரீடத்தில் விபூதி பட்டம் அணியப்பட்டுள்ளது.
சனி பகவானுக்கு இத்தலத்தில் பிரம்மஹத்தி தோஷம் விலகியதாக தல வரலாறு கூறுகிறது. இதனால் குச்சனூர் சனீஸ்வரரை வழிபட்டால் நம்மை பிடித்திருக்கும் செவ்வாய் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகும். சனி தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் சோதனை விலகி சுபிட்சம் உண்டாகும்.
குடும்பத்தில் மங்கலம் ஏற்படும். தொழில், வியாபார விருத்தி உண்டாகும். இதனால் தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். கோவில் அருகே சுரபி நதி ஓடுகிறது. வற்றாத இந்த ஜீவ நதியில் பக்தர்கள் புனித நீராடி சனீஸ்வர பகவானை வழிபாடு செய்கிறார்கள். தோசம் உள்ளவர்கள் எள் விளக்கேற்றி காக்கைக்கு உணவளித்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகிறார்கள். இதன் மூலம் அவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் சூரியனைக் கண்ட பனி போல் விலகுகின்றன.
ஆண்டுதோறும் ஆடி மாதம் 5 சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். சனி பெயர்ச்சி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பிரம்மா, விஷ்ணு, சிவன் இவருள் அடக்கம் என்பதால் 3 ஜோடி கண்களும், சக்தி ஆயுதம், வில் ஆயுதம், அபய ஹஸ்தம், சிம்ம கர்ணம் என்ற தாத்பரியத்தில் நான்கு கரங்களும், இரண்டு பாதமும் உள்ளன.
சனி பகவான் நீதிதேவனாக செயல்படுகிறார். முற்பிறவியில் செய்த கர்மாவிற்கு, இப்பிறவியில் கோச்சாரம் பார்த்து கஷ்டத்தை சனீஸ்வரன் தண்டனையாக கொடுக்கிறார்.
அதேபோல் முன்னோர்கள் செய்த பாவத்திற்கு வம்சாவளியினர் பாதிக்கும் வகையில் கஷ்டத்தை கொடுக்கிறார். கஷ்டத்தை தாங்க முடியவில்லை என்று சனீஸ்வரனை வழிபட்டால் தாங்கும் மனோதிடம் தருவார். குறிப்பிட்ட காலம் ஆனதும் சுபிட்சத்தை வாரி வழங்குவார். அதனால்தான் சனியைப்போல் கெடுப்பாரும் இல்லை, சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்ற பழமொழிகள் வழக்கத்தில் உள்ளன.
நடை திறப்பு நேரம் :
குச்சனூர் தேனி மாவட்டத்தில் உள்ளது. தேனியில் இருந்து உப்புக்கோட்டை விலக்கு வழியாக வந்தால் 20 கிலோ மீட்டர் தூரம் பஸ் வசதியும் உண்டு. தேனியில் இருந்து கம்பம் குமுளி செல்லும் பஸ்களில் ஏறி சின்னமனூர் நகரத்தில் இறங்கி 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குச்சனூரை அடையலாம்.
பஸ், ஆட்டோ வசதிகளுண்டு. கோவில் நடை திறக்கும் நேரம் காலை 7.30 மணி, நடை அடைக்கும் நேரம் பிற்பகல் 1 மணி. மறுபடியும் மாலை 4.30 மணிக்கு நடைதிறந்து இரவு 8 மணிக்கு அடைக்கப்படும். சனிக்கிழமைகளில் காலை 6 மணியில் இருந்து 8.30 மணிவரையிலும், திருவிழா காலங்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறந்து இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
குச்சனூர் சுயம்பு சனீஸ்வரபகவான் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கல்தூண் வடிவில் பூமியில் இருந்து தோன்றினார். இந்த தகவல் மதுராந்தகம் அருகிலுள்ள அச்சிறுப்பாக்கம் சுகர் நாடி ஜோதிடம் மூலம் தெரியவந்தது. ஆனால் 17-ம் நூற்றாண்டில்தான் இனம் காண முடிந்தது.
சனி பகவானுக்கு தமிழகத்தில் திருநள்ளாருக்கு அடுத்த புகழ்பெற்ற தலமாக குச்சனூர் விளங்குகிறது. இங்கு சனி பகவான் சுயம்பு வடிவில் மூலவராக இருப்பது தனிச்சிறப்பு.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அமைந்துள்ளது குச்சனூர் தலம். இங்கு சனீஸ்வர பகவான் சுயம்பு வடிவில் எழுந்தருளியுள்ளார். லிங்க உருவில் உள்ள இந்த சுயம்பு வளர்ந்து கொண்டே இருப்பதால் அதனை கட்டுப்படுத்த மஞ்சள் காப்பு பூசப்பட்டுள்ளது.
கால வரம்பிற்கு அப்பாற்பட்ட குச்சனூர் சனீஸ்வரனைப் பற்றி அகஸ்திய கவுசிக, சிவ நாடி ஜோதிடங்களில் குறிப்பிட்டுள்ளது. சுயம்பு மூலவர் நெற்றியில் நாமம் இடப்பட்டிருப்பது சூரிய நாராயண புத்திரன் என்பதை உணர்த்துவதற்கே. ஈஸ்வர பட்டம் பெற்றிருப்பதால் கிரீடத்தில் விபூதி பட்டம் அணியப்பட்டுள்ளது.
சனி பகவானுக்கு இத்தலத்தில் பிரம்மஹத்தி தோஷம் விலகியதாக தல வரலாறு கூறுகிறது. இதனால் குச்சனூர் சனீஸ்வரரை வழிபட்டால் நம்மை பிடித்திருக்கும் செவ்வாய் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகும். சனி தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் சோதனை விலகி சுபிட்சம் உண்டாகும்.
குடும்பத்தில் மங்கலம் ஏற்படும். தொழில், வியாபார விருத்தி உண்டாகும். இதனால் தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். கோவில் அருகே சுரபி நதி ஓடுகிறது. வற்றாத இந்த ஜீவ நதியில் பக்தர்கள் புனித நீராடி சனீஸ்வர பகவானை வழிபாடு செய்கிறார்கள். தோசம் உள்ளவர்கள் எள் விளக்கேற்றி காக்கைக்கு உணவளித்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகிறார்கள். இதன் மூலம் அவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் சூரியனைக் கண்ட பனி போல் விலகுகின்றன.
ஆண்டுதோறும் ஆடி மாதம் 5 சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். சனி பெயர்ச்சி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பிரம்மா, விஷ்ணு, சிவன் இவருள் அடக்கம் என்பதால் 3 ஜோடி கண்களும், சக்தி ஆயுதம், வில் ஆயுதம், அபய ஹஸ்தம், சிம்ம கர்ணம் என்ற தாத்பரியத்தில் நான்கு கரங்களும், இரண்டு பாதமும் உள்ளன.
சனி பகவான் நீதிதேவனாக செயல்படுகிறார். முற்பிறவியில் செய்த கர்மாவிற்கு, இப்பிறவியில் கோச்சாரம் பார்த்து கஷ்டத்தை சனீஸ்வரன் தண்டனையாக கொடுக்கிறார்.
அதேபோல் முன்னோர்கள் செய்த பாவத்திற்கு வம்சாவளியினர் பாதிக்கும் வகையில் கஷ்டத்தை கொடுக்கிறார். கஷ்டத்தை தாங்க முடியவில்லை என்று சனீஸ்வரனை வழிபட்டால் தாங்கும் மனோதிடம் தருவார். குறிப்பிட்ட காலம் ஆனதும் சுபிட்சத்தை வாரி வழங்குவார். அதனால்தான் சனியைப்போல் கெடுப்பாரும் இல்லை, சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்ற பழமொழிகள் வழக்கத்தில் உள்ளன.
நடை திறப்பு நேரம் :
குச்சனூர் தேனி மாவட்டத்தில் உள்ளது. தேனியில் இருந்து உப்புக்கோட்டை விலக்கு வழியாக வந்தால் 20 கிலோ மீட்டர் தூரம் பஸ் வசதியும் உண்டு. தேனியில் இருந்து கம்பம் குமுளி செல்லும் பஸ்களில் ஏறி சின்னமனூர் நகரத்தில் இறங்கி 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குச்சனூரை அடையலாம்.
பஸ், ஆட்டோ வசதிகளுண்டு. கோவில் நடை திறக்கும் நேரம் காலை 7.30 மணி, நடை அடைக்கும் நேரம் பிற்பகல் 1 மணி. மறுபடியும் மாலை 4.30 மணிக்கு நடைதிறந்து இரவு 8 மணிக்கு அடைக்கப்படும். சனிக்கிழமைகளில் காலை 6 மணியில் இருந்து 8.30 மணிவரையிலும், திருவிழா காலங்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறந்து இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
குச்சனூர் சுயம்பு சனீஸ்வரபகவான் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கல்தூண் வடிவில் பூமியில் இருந்து தோன்றினார். இந்த தகவல் மதுராந்தகம் அருகிலுள்ள அச்சிறுப்பாக்கம் சுகர் நாடி ஜோதிடம் மூலம் தெரியவந்தது. ஆனால் 17-ம் நூற்றாண்டில்தான் இனம் காண முடிந்தது.
பைரவருக்கு பல கோவில்களில் பரிவார சன்னிதிகள் இருந்தாலும், அவருக்கென்று தனிக்கோவில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள ஷேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ளது.
வீரச்செயல்களை செய்யும் காலத்தில் சிவபெருமான், பைரவர் வடிவம் எடுப்பதாக புராணங்கள் கூறுகின்றன. பைரவர் நீலநிற மேனி, சிலம்பொலிக்கும் திருவடி, மாலை அணிந்த திருமார்பு, சூலம், மழு, பாசம், உடுக்கை ஏந்திய திருக் கரங்கள், மூன்று கண்கள், இரண்டு கோரைப்பற்கள், செஞ்சடை, கோபச்சிரிப்பு, பாம்பைப் பூணூலாகக் கொண்டும், சந்திரனை சிரசில் வைத்தும் உக்கிரவடிவத்துடன் காட்சியளிப்பார். காவல் தெய்வமான இவரின் சன்னிதியில் நாய் வாகனமாக இருப்பதை காணலாம்.
பைரவருக்கு பல கோவில்களில் பரிவார சன்னிதிகள் இருந்தாலும், அவருக்கென்று தனிக்கோவில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள ஷேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆனந்த கால பைரவராக வீற்றிருக்கும் பைரவர் முற்றிலும் மாறுபட்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு அவருக்கு நாய் வாகனம் இல்லை. கரத்தில் சூலத்தை ஏந்தி, சிரித்த முகத்துடன் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில் ஆனந்தமாக காட்சி தருகிறார்.
பைரவருக்கு ஷேத்திரபாலர் என்ற பெயரும் உண்டு. அவருடைய பெயரால் இவ்வூர் ஷேத்திரபாலபுரம் என்று அழைக்கப்படுகிறது. பைரவருக்கு, தொலைந்து போன ஆனந்தம் இத்தலத்தில் கிடைக்கப்பெற்றதால் ‘ஆனந்தகால பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் காசியில் உள்ள காலபைரவருக்கு மேலானவர் என்று கூறுகிறார்கள்.
தல வரலாறு :
ஆதிகாலத்தில் சிவபெருமானுக்கு ஐந்து தலைகள் இருந்தன. அதே போன்று பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் சிவனை விட தானே சிறந்தவர் என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. அதனால் தேவர்களும், முனிவர்களும் தன்னையே வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டார். பிரம்மனின் ஆணவத்தை அடக்க எண்ணிய பரமேஸ்வரன் பைரவரை தோற்றுவித்தார். பைரவர் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டார்.
இதனால் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. அதில் இருந்து விடுபட என்ன செய்வது என்று சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு சிவன், ‘நீ பூலோகம் சென்று பிச்சை எடுத்து எம்மை வழிபடு. உரிய காலத்தில் உன்னை பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகும்’ என்று கூறினார். இதை அருகில் இருந்து கவனித்த மகாவிஷ்ணு தென்னாட்டில் காவிரி பாயும் திருத்தலத்தில் உமது பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று குறிப்பால் உணர்த்தினார்.
பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததால் ஆனந்தம் தொலைந்த மனதுடன் பூமிக்கு வந்த பைரவர், உலகம் முழுவதும் பிச்சை எடுத்த வண்ணம் சுற்றித் திரிந்தார். காசி, காஞ்சீபுரம், சீர்காழி, சிதம்பரம், திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவையாறு உள்ளிட்ட பல தலங்களுக்கு சென்று பரமனை வணங்கினார்.
திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தில் வந்து ஸ்வேத விநாயகரை வணங்கினார். அவரது அருளால் பல ஆண்டுகளாக பைரவரை தொல்லைப்படுத்தி வந்த பிரம்மஹத்தி அவரை விட்டு விலகியது. தொலைந்து போன ஆனந்தம் திரும்ப கிடைக்கப்பெற்ற பைரவர், அத்தலத்து ஸ்வேத விநாயகரை வணங்கினார். அப்போது வானில் ஒரு அசரீரி கேட்டது. பைரவரை அத்தலத்தில் குறிப்பிட்ட காலம் தவம் செய்யும் படியும், பின்னர் அவர் கரத்தில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி எறியும் படியும், அது எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தில் ஆனந்த கால பைரவர் என்ற நாமத்தை ஏற்று தனிக்கோவில் கொண்டு அருள்புரியும்படியும் கூறியது.
அசரீரி கூறியபடி திருவலஞ்சுழியில் குறிப்பிட்ட காலம் தவம் செய்த பைரவர், தன் சூலாயுதத்தை கிழக்கு நோக்கி செலுத்தினார். அது சென்று விழுந்த இடமே இன்றைய ஷேத்திரபாலபுரம் ஆகும். தொலைந்து போன ஆனந்தம் திரும்ப கிடைக்கப்பெற்றதால் பைரவர் மகிழ்ச்சி அடைந்தார். அவரை அந்த திருத்தலத்தில் ஸ்வேத விநாயகரும், இந்திரனும் பிரதிஷ்டை செய்தனர். அன்று முதல் ஆனந்தகால பைரவர் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு ஆனந்தத்தை வழங்கி, மனக்குறையை அகற்றி அருள்புரிந்து வருகிறார்.
இந்த தலத்தில் பைரவரே பிரதான தெய்வம். அவருக்கு மட்டுமே அனைத்து முக்கிய பூஜைகளும் நடைபெறுகின்றன. கணபதி, முருகன், சூலினி (செல்லியம்மன்), சாஸ்தா (ஐயப்பன்) ஆகிய தெய்வங்களுக்கும் சிறு சன்னிதிகள் உண்டு.
ஷேத்திரபாலபுரத்தில் சூலதீர்த்தம், கணேச தீர்த்தம், காவிரி தீர்த்தம் (சங்குமுகம்), சக்கர தீர்த்தம், ஸ்கந்ததீர்த்தம் என்று ஐந்து புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் காவிரி மற்றும் சூல தீர்த்தத்தில் நீராடினால் அளப்பரிய புண்ணியம் சேரும். காவிரி தீர்த்தத்தில் ஒருநாள் நீராடினால், காசி தீர்த்தத்தில் மூன்று நாள் நீராடிய பலன் கிட்டும் என்று தலபுராணம் கூறுகிறது. காலை 8 மணிக்குள் காவிரியில் நீராடி விட்டு, 10.30 மணிக்குள் சூல தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிக்குள் கால பைரவரை வழிபடுதல் நலம் அளிக்கும்.
விழாக்கள் :
வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை விசேஷ தினமாகும். தினந்தோறும் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, ஒருகால பூஜை நடக்கிறது. சித்ரா பவுர்ணமியில் காவடி உற்சவமும், கார்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தனக்காப்பு வைபவமும் நடைபெறும். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இந்தத் தலத்தில் உள்ள காலபைரவரை வணங்கினால் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும்.
தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும். தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி தினங்களில் காலை 8 மணிமுதல் இரவு 10 மணி வரை நடை திறந்து இருக்கும்.
கோவில் அமைவிடம் :
ஷேத்திரபாலபுரம் ஆனந்த காலபைரவர் கோவில் நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 9 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த கோவில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நகர பஸ் வசதியும் உண்டு.
கோமல் ரோடு பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 100 மீட்டர் தூரம் நடந்து சென்றால் கோவிலை சென்று அடையலாம். கும்பகோணத்தில் இருந்து செல்பவர்கள் மயிலாடுதுறை செல்லும் பஸ்சில் ஏறி 28 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை சென்று அடையலாம்.
பைரவருக்கு பல கோவில்களில் பரிவார சன்னிதிகள் இருந்தாலும், அவருக்கென்று தனிக்கோவில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள ஷேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆனந்த கால பைரவராக வீற்றிருக்கும் பைரவர் முற்றிலும் மாறுபட்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு அவருக்கு நாய் வாகனம் இல்லை. கரத்தில் சூலத்தை ஏந்தி, சிரித்த முகத்துடன் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில் ஆனந்தமாக காட்சி தருகிறார்.
பைரவருக்கு ஷேத்திரபாலர் என்ற பெயரும் உண்டு. அவருடைய பெயரால் இவ்வூர் ஷேத்திரபாலபுரம் என்று அழைக்கப்படுகிறது. பைரவருக்கு, தொலைந்து போன ஆனந்தம் இத்தலத்தில் கிடைக்கப்பெற்றதால் ‘ஆனந்தகால பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் காசியில் உள்ள காலபைரவருக்கு மேலானவர் என்று கூறுகிறார்கள்.
தல வரலாறு :
ஆதிகாலத்தில் சிவபெருமானுக்கு ஐந்து தலைகள் இருந்தன. அதே போன்று பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் சிவனை விட தானே சிறந்தவர் என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. அதனால் தேவர்களும், முனிவர்களும் தன்னையே வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டார். பிரம்மனின் ஆணவத்தை அடக்க எண்ணிய பரமேஸ்வரன் பைரவரை தோற்றுவித்தார். பைரவர் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டார்.
இதனால் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. அதில் இருந்து விடுபட என்ன செய்வது என்று சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு சிவன், ‘நீ பூலோகம் சென்று பிச்சை எடுத்து எம்மை வழிபடு. உரிய காலத்தில் உன்னை பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகும்’ என்று கூறினார். இதை அருகில் இருந்து கவனித்த மகாவிஷ்ணு தென்னாட்டில் காவிரி பாயும் திருத்தலத்தில் உமது பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று குறிப்பால் உணர்த்தினார்.
பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததால் ஆனந்தம் தொலைந்த மனதுடன் பூமிக்கு வந்த பைரவர், உலகம் முழுவதும் பிச்சை எடுத்த வண்ணம் சுற்றித் திரிந்தார். காசி, காஞ்சீபுரம், சீர்காழி, சிதம்பரம், திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவையாறு உள்ளிட்ட பல தலங்களுக்கு சென்று பரமனை வணங்கினார்.
திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தில் வந்து ஸ்வேத விநாயகரை வணங்கினார். அவரது அருளால் பல ஆண்டுகளாக பைரவரை தொல்லைப்படுத்தி வந்த பிரம்மஹத்தி அவரை விட்டு விலகியது. தொலைந்து போன ஆனந்தம் திரும்ப கிடைக்கப்பெற்ற பைரவர், அத்தலத்து ஸ்வேத விநாயகரை வணங்கினார். அப்போது வானில் ஒரு அசரீரி கேட்டது. பைரவரை அத்தலத்தில் குறிப்பிட்ட காலம் தவம் செய்யும் படியும், பின்னர் அவர் கரத்தில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி எறியும் படியும், அது எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தில் ஆனந்த கால பைரவர் என்ற நாமத்தை ஏற்று தனிக்கோவில் கொண்டு அருள்புரியும்படியும் கூறியது.
அசரீரி கூறியபடி திருவலஞ்சுழியில் குறிப்பிட்ட காலம் தவம் செய்த பைரவர், தன் சூலாயுதத்தை கிழக்கு நோக்கி செலுத்தினார். அது சென்று விழுந்த இடமே இன்றைய ஷேத்திரபாலபுரம் ஆகும். தொலைந்து போன ஆனந்தம் திரும்ப கிடைக்கப்பெற்றதால் பைரவர் மகிழ்ச்சி அடைந்தார். அவரை அந்த திருத்தலத்தில் ஸ்வேத விநாயகரும், இந்திரனும் பிரதிஷ்டை செய்தனர். அன்று முதல் ஆனந்தகால பைரவர் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு ஆனந்தத்தை வழங்கி, மனக்குறையை அகற்றி அருள்புரிந்து வருகிறார்.
இந்த தலத்தில் பைரவரே பிரதான தெய்வம். அவருக்கு மட்டுமே அனைத்து முக்கிய பூஜைகளும் நடைபெறுகின்றன. கணபதி, முருகன், சூலினி (செல்லியம்மன்), சாஸ்தா (ஐயப்பன்) ஆகிய தெய்வங்களுக்கும் சிறு சன்னிதிகள் உண்டு.
ஷேத்திரபாலபுரத்தில் சூலதீர்த்தம், கணேச தீர்த்தம், காவிரி தீர்த்தம் (சங்குமுகம்), சக்கர தீர்த்தம், ஸ்கந்ததீர்த்தம் என்று ஐந்து புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் காவிரி மற்றும் சூல தீர்த்தத்தில் நீராடினால் அளப்பரிய புண்ணியம் சேரும். காவிரி தீர்த்தத்தில் ஒருநாள் நீராடினால், காசி தீர்த்தத்தில் மூன்று நாள் நீராடிய பலன் கிட்டும் என்று தலபுராணம் கூறுகிறது. காலை 8 மணிக்குள் காவிரியில் நீராடி விட்டு, 10.30 மணிக்குள் சூல தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிக்குள் கால பைரவரை வழிபடுதல் நலம் அளிக்கும்.
விழாக்கள் :
வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை விசேஷ தினமாகும். தினந்தோறும் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, ஒருகால பூஜை நடக்கிறது. சித்ரா பவுர்ணமியில் காவடி உற்சவமும், கார்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தனக்காப்பு வைபவமும் நடைபெறும். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இந்தத் தலத்தில் உள்ள காலபைரவரை வணங்கினால் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும்.
தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும். தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி தினங்களில் காலை 8 மணிமுதல் இரவு 10 மணி வரை நடை திறந்து இருக்கும்.
கோவில் அமைவிடம் :
ஷேத்திரபாலபுரம் ஆனந்த காலபைரவர் கோவில் நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 9 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த கோவில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நகர பஸ் வசதியும் உண்டு.
கோமல் ரோடு பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 100 மீட்டர் தூரம் நடந்து சென்றால் கோவிலை சென்று அடையலாம். கும்பகோணத்தில் இருந்து செல்பவர்கள் மயிலாடுதுறை செல்லும் பஸ்சில் ஏறி 28 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை சென்று அடையலாம்.
எறும்புகள் பூஜித்த இத்தல சுவாமியை வழிபடுபவர்கள், சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு பெறுவார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
நாளெல்லாம் உழைத்த மனிதனுக்கு, சோர்வு ஏற்படுவதும் அதன் காரணமாக ஓய்வும், உறக்கஉண்டு விட்டு, இரவில் தங்கள் கூடுகளில் தங்கி இளைப்பாறும். பின்னர் மீண்டும் அதிகாலையில் சுறுசுறுப்பாகப் பறப்பது வழக்கம். சில மனிதர்கள் எப்போதும் மந்தமாக இருப்பதும், வேலை எதுவும் செய்யாமல் சோம்பிக் கிடப்பதும் அவர்களுக்கு நல்லதல்ல. இதனால் அவர்கள் மனதளவில் மட்டுமல்லாது உடலளவிலும் நோய்வாய்ப்பட்டு போகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.
உள்ளத்தையும், உடலையும் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொண்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு வரும். தேனீக்களையும், எறும்புகளையும் அதற்கு உதாரணமாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட எறும்புகள் வழிபட்ட திருஎறும்பியூர் ஈசன் கோவிலைப் பற்றி பார்க்கலாம்.
எறும்பீசர் :
மலைக்கோட்டை மாநகரமான திருச்சிராப்பள்ளிக்கு கிழக்கே 10 கி.மீ தொலைவில் உள்ளது, திருவெறும்பூர் என்று அழைக்கப்படும் திருஎறும்பியூர். நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதே வடபுறத்தில் கிரீடம் வைத்தாற்போல கோவில் ஒன்று குன்றின் மீது அமைந்திருக்கிறது. நெடுஞ்சாலையில் இருந்து தோரணவாயில் வழியாக சில அடிகள் சென்றால், மலையின் படிக்கட்டுகள் தொடங்கும். 125 படிக்கட்டுகளில் ஏறி உச்சியை அடைந்தால், கோட்டைச் சுவரில் கோபுரம் இருக்கும். கிழக்கு நோக்கிய சன்னிதியில் வீற்றிருக்கும் இறைவனை எறும்பீசர், பிப்பிலீ ஈசர் என்றும் சொல்கிறார்கள். ‘பிப்பிலீ’ என்றால் எறும்பு என்று பொருள்.
மேலும் மதுவனேசுவரர், மாணிக்கநாதர், மணிக்கூடாசலபதி போன்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு. மணல் லிங்கமாக இருப்பதால், இங்குள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. சிவபெருமானின் சுயம்பு வடிவான லிங்கத் திருமேனி இத்திருக்கோவிலில் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறது. சில கோவில் களைப் போல வழுவழுப்பாக இல்லாமல், சொரசொரப்பாகவும், இரண்டாகப் பிளவுபட்ட தோற்றத்திலும் இத்தல சிவலிங்கம் காணப்படுகிறது. சிவலிங்கத்தின் வலதுபுறத்தை சிவனாகவும், இடதுபுறத்தை சக்தியாகவும் பாவித்து, சிவசக்தியாகவே பக்தர்கள் தரிசிக்கிறார்கள். சற்று சாய்ந்த நிலையில் இருக்கும் இந்த லிங்கத்திற்கென ஒரு புராணக் கதை உலவுகிறது.
எறும்புகள் பூசித்த சிவன் :
தேவர்களின் தலைவனான இந்திரனையும், மற்ற தேவர்களையும் தாரகாசுரன் என்ற அசுரன் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் அனைவரும் இதுபற்றி பிரம்மதேவரிடம் சென்று முறையிட்டனர். பிரம்மாவோ, மண்ணுலகில் இத்தலத்தின் மலை மீது இருக்கும் சிவனை பூக்கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், அசுரனின் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்று துன்பத்தில் இருந்து தப்பிக்கும் வழியைக் கூறினார்.
இதையடுத்து தேவர்கள் அனைவரும் அசுரனுக்கு பயந்து, சிறிய உருவான எறும்பாக வடிவெடுத்து இத்தலத்திற்கு வந்தனர். மேலும் எறும்பு வடிவத்திலேயே, சிவனது சிரம் மீது ஏறி பூக்களைக் கொண்டு அர்ச்சித்து வழிபட்டனர். எறும்பு வடிவில் இருந்த தேவர்களுக்கு அருள்செய்ய நினைத்த சிவபெருமான், எறும்புகள் ஏறுவதற்கு வசதியாக வழுவழுப்பான தனது லிங்க உருவத்தை சொரசொரப்பாக மாற்றிக்கொண்டாராம்.
எறும்புகளின் வழிபாட்டில் மகிழ்வுற்ற எம்பெருமான் அசுரனை அழித்து, தேவர்களுக்கு வாழ்வு கொடுத்தார். எறும்புகள் வழிபட்டதன் காரணமாக இத்தல இறைவனுக்கு ‘எறும்பீசர்’ என்று பெயர் வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இன்றும் சிவ பூஜை நடக்கும் நேரத்தில் கருவறையில் எறும்புகள் ஊர்ந்து செல்லுவதைக் காணலாம். தேவர்கள் வந்து தினமும் எறும்பு வடிவில் இத்தல இறைவனை வழிபடுவதாக நம்பப்படுகிறது.
தத்துவம் சொல்லும் துவாரபாலகர் :
இத்திருத்தல நாயகி தெற்கு நோக்கிய சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். இத்தல அம்பாள், சவுந்தரநாயகி, மதுவனேஸ்வரி, நறுங்குழல் நாயகி, சுகந்தகுழல் ஈஸ்வரி, ரத்தினாம்பாள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறாள். மலையின் கீழ் இருந்த அம்பாள் கோவில் சிதிலமடைந்ததால், புதிய சிலையுடன் சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்பு மலைமீது தற்போது இருக்கும் சன்னிதியை அமைத்திருக்கிறார்கள்.
சிவன் சன்னிதி செல்லும் முன்பு உள்ள துவாரபாலகர் களில் ஒருவர் கோபமான முகத்துடனும், மற்றொருவர் சாந்தமான முகத்துடனும் இருக்கிறார்கள். கோபத்துடன் வந்தாலும் கடவுளை வழிபட்டபின் சாந்தம் கிடைக்கும் என்ற தத்துவத்தை இந்த சிலைகள் போதிப்பதாகச் சொல்கிறார்கள்.
இத்தல விநாயகர் ‘செல்வ விநாயகர்’ என்பதால், அவர் தன்னை வழிபடுபவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களையும் வழங்குகிறார். மூலஸ்தானத்தின் பின்புறம் வள்ளி- தெய்வானையுடன் விளங்கும் சுப்ரமணிய சுவாமி இருக்கிறார். இவரது பீடத்தில் அறுங்கோண (ஆறு) சக்கரம் இருக்கிறது. இந்த வடிவேலனை வழிபடுபவர்கள் எதிரிகள் பயம் நீங்கி வாழ்வார்கள். நவக்கிரகங்களின் சன்னிதியில் சூரியனின் மனைவியான உஷா, பிரத்யுஷா ஆகிய இருவரும், ஒருவரை ஒருவர் நோக்கியவாறு காட்சி தருகின்றனர். இந்தச் சிவ மலைக்கு எதிரே அடிவாரத்தில், பிரம்ம தீர்த்தம் உள்ளது. தல விருட்சமான வில்வமரம் மலை மேல் இருக்கிறது.
அப்பர் பாடல் :
‘அல்லல் தீர்க்கும் அருமருந்தை ஆமாறறிந்தென் உள்ளந் தெளிந்து எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை செழுஞ்சுடரை சென்றடையப் பெற்றேன் நானே’ என்று அப்பர் பெருமான் திருத்தாண்டகத்திலும், பத்து திருக்குறுந்தொகையிலும் பதிகங்களாகப் பாமாலை சூட்டியுள்ளார். தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில், இந்த ஆலயம் 70-வது திருத்தலமாகத் திகழ்கிறது. தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
எறும்புகள் பூஜித்த இத்தல சுவாமியை வழிபடுபவர்கள், சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு பெறுவார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். காலாற நடந்து 125 படிகள் கடந்து, அங்கு வீசும் மலைக் காற்றை அனுபவித்தாலே நமக்கு உற்சாகம் பிறக்கும். இன்னும் என்ன தாமதம்? நீங்களும் சுறுசுறுப்புடன் திகழ இன்றே எறும்பீசரை வழிபட கிளம்புங்கள்.
உள்ளத்தையும், உடலையும் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொண்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு வரும். தேனீக்களையும், எறும்புகளையும் அதற்கு உதாரணமாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட எறும்புகள் வழிபட்ட திருஎறும்பியூர் ஈசன் கோவிலைப் பற்றி பார்க்கலாம்.
எறும்பீசர் :
மலைக்கோட்டை மாநகரமான திருச்சிராப்பள்ளிக்கு கிழக்கே 10 கி.மீ தொலைவில் உள்ளது, திருவெறும்பூர் என்று அழைக்கப்படும் திருஎறும்பியூர். நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதே வடபுறத்தில் கிரீடம் வைத்தாற்போல கோவில் ஒன்று குன்றின் மீது அமைந்திருக்கிறது. நெடுஞ்சாலையில் இருந்து தோரணவாயில் வழியாக சில அடிகள் சென்றால், மலையின் படிக்கட்டுகள் தொடங்கும். 125 படிக்கட்டுகளில் ஏறி உச்சியை அடைந்தால், கோட்டைச் சுவரில் கோபுரம் இருக்கும். கிழக்கு நோக்கிய சன்னிதியில் வீற்றிருக்கும் இறைவனை எறும்பீசர், பிப்பிலீ ஈசர் என்றும் சொல்கிறார்கள். ‘பிப்பிலீ’ என்றால் எறும்பு என்று பொருள்.
மேலும் மதுவனேசுவரர், மாணிக்கநாதர், மணிக்கூடாசலபதி போன்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு. மணல் லிங்கமாக இருப்பதால், இங்குள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. சிவபெருமானின் சுயம்பு வடிவான லிங்கத் திருமேனி இத்திருக்கோவிலில் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறது. சில கோவில் களைப் போல வழுவழுப்பாக இல்லாமல், சொரசொரப்பாகவும், இரண்டாகப் பிளவுபட்ட தோற்றத்திலும் இத்தல சிவலிங்கம் காணப்படுகிறது. சிவலிங்கத்தின் வலதுபுறத்தை சிவனாகவும், இடதுபுறத்தை சக்தியாகவும் பாவித்து, சிவசக்தியாகவே பக்தர்கள் தரிசிக்கிறார்கள். சற்று சாய்ந்த நிலையில் இருக்கும் இந்த லிங்கத்திற்கென ஒரு புராணக் கதை உலவுகிறது.
எறும்புகள் பூசித்த சிவன் :
தேவர்களின் தலைவனான இந்திரனையும், மற்ற தேவர்களையும் தாரகாசுரன் என்ற அசுரன் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் அனைவரும் இதுபற்றி பிரம்மதேவரிடம் சென்று முறையிட்டனர். பிரம்மாவோ, மண்ணுலகில் இத்தலத்தின் மலை மீது இருக்கும் சிவனை பூக்கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், அசுரனின் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்று துன்பத்தில் இருந்து தப்பிக்கும் வழியைக் கூறினார்.
இதையடுத்து தேவர்கள் அனைவரும் அசுரனுக்கு பயந்து, சிறிய உருவான எறும்பாக வடிவெடுத்து இத்தலத்திற்கு வந்தனர். மேலும் எறும்பு வடிவத்திலேயே, சிவனது சிரம் மீது ஏறி பூக்களைக் கொண்டு அர்ச்சித்து வழிபட்டனர். எறும்பு வடிவில் இருந்த தேவர்களுக்கு அருள்செய்ய நினைத்த சிவபெருமான், எறும்புகள் ஏறுவதற்கு வசதியாக வழுவழுப்பான தனது லிங்க உருவத்தை சொரசொரப்பாக மாற்றிக்கொண்டாராம்.
எறும்புகளின் வழிபாட்டில் மகிழ்வுற்ற எம்பெருமான் அசுரனை அழித்து, தேவர்களுக்கு வாழ்வு கொடுத்தார். எறும்புகள் வழிபட்டதன் காரணமாக இத்தல இறைவனுக்கு ‘எறும்பீசர்’ என்று பெயர் வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இன்றும் சிவ பூஜை நடக்கும் நேரத்தில் கருவறையில் எறும்புகள் ஊர்ந்து செல்லுவதைக் காணலாம். தேவர்கள் வந்து தினமும் எறும்பு வடிவில் இத்தல இறைவனை வழிபடுவதாக நம்பப்படுகிறது.
தத்துவம் சொல்லும் துவாரபாலகர் :
இத்திருத்தல நாயகி தெற்கு நோக்கிய சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். இத்தல அம்பாள், சவுந்தரநாயகி, மதுவனேஸ்வரி, நறுங்குழல் நாயகி, சுகந்தகுழல் ஈஸ்வரி, ரத்தினாம்பாள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறாள். மலையின் கீழ் இருந்த அம்பாள் கோவில் சிதிலமடைந்ததால், புதிய சிலையுடன் சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்பு மலைமீது தற்போது இருக்கும் சன்னிதியை அமைத்திருக்கிறார்கள்.
சிவன் சன்னிதி செல்லும் முன்பு உள்ள துவாரபாலகர் களில் ஒருவர் கோபமான முகத்துடனும், மற்றொருவர் சாந்தமான முகத்துடனும் இருக்கிறார்கள். கோபத்துடன் வந்தாலும் கடவுளை வழிபட்டபின் சாந்தம் கிடைக்கும் என்ற தத்துவத்தை இந்த சிலைகள் போதிப்பதாகச் சொல்கிறார்கள்.
இத்தல விநாயகர் ‘செல்வ விநாயகர்’ என்பதால், அவர் தன்னை வழிபடுபவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களையும் வழங்குகிறார். மூலஸ்தானத்தின் பின்புறம் வள்ளி- தெய்வானையுடன் விளங்கும் சுப்ரமணிய சுவாமி இருக்கிறார். இவரது பீடத்தில் அறுங்கோண (ஆறு) சக்கரம் இருக்கிறது. இந்த வடிவேலனை வழிபடுபவர்கள் எதிரிகள் பயம் நீங்கி வாழ்வார்கள். நவக்கிரகங்களின் சன்னிதியில் சூரியனின் மனைவியான உஷா, பிரத்யுஷா ஆகிய இருவரும், ஒருவரை ஒருவர் நோக்கியவாறு காட்சி தருகின்றனர். இந்தச் சிவ மலைக்கு எதிரே அடிவாரத்தில், பிரம்ம தீர்த்தம் உள்ளது. தல விருட்சமான வில்வமரம் மலை மேல் இருக்கிறது.
அப்பர் பாடல் :
‘அல்லல் தீர்க்கும் அருமருந்தை ஆமாறறிந்தென் உள்ளந் தெளிந்து எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை செழுஞ்சுடரை சென்றடையப் பெற்றேன் நானே’ என்று அப்பர் பெருமான் திருத்தாண்டகத்திலும், பத்து திருக்குறுந்தொகையிலும் பதிகங்களாகப் பாமாலை சூட்டியுள்ளார். தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில், இந்த ஆலயம் 70-வது திருத்தலமாகத் திகழ்கிறது. தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
எறும்புகள் பூஜித்த இத்தல சுவாமியை வழிபடுபவர்கள், சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு பெறுவார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். காலாற நடந்து 125 படிகள் கடந்து, அங்கு வீசும் மலைக் காற்றை அனுபவித்தாலே நமக்கு உற்சாகம் பிறக்கும். இன்னும் என்ன தாமதம்? நீங்களும் சுறுசுறுப்புடன் திகழ இன்றே எறும்பீசரை வழிபட கிளம்புங்கள்.
`அன்னை ஆதிபராசக்தி பல்வேறு இடங்களில் அருள்பாலித்து வருகிறாள். அவ்வகையில் அருள்மாரியாக ஊத்துக்காடு எல்லையம்மன் திகழ்கின்றாள்.
அன்னை ஆதிபராசக்தி பல்வேறு இடங்களில் அருள்பாலித்து வருகிறாள். அவ்வகையில் அருள்மாரியாக ஊத்துக்காடு எல்லையம்மன் திகழ்கின்றாள்.
தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியை விஜயநகர மன்னர்கள் ஆண்டு வந்தனர். அவர்களில் தலைசிறந்தவர் கிருஷ்ண தேவராயர். இவர் காட்டுக்குச் சென்று வேட்டையாடுவது வழக்கம். அவருடன் பாதுகாவலர்களோ படை வீரர்களோ செல்வது இல்லை. அவர் வளர்த்த நாய் ஒன்று மட்டுமே உடன் செல்லும்.
அதன்படி கிருஷ்ண தேவராயர் காட்டுக்குச் சென்றபோது வேட்டையாடும் ஆர்வத்தில் காட்டில் வெகு தொலைவுக்கு வந்துவிட்டார். வழி தெரியவில்லை. மிகுந்த களைப்பால் தாகமும் ஏற்பட்டது. சுற்றுமுற்றும் தேடியும் தடாகத்தைக் காணவில்லை. ஒருவித மயக்கத்துடன் மரத்தில் சாய்ந்து அமர்ந்தார் மன்னர்.
இதைக் கண்ட நாய் அரசரின் நிலையறிந்து வருந்தியது. நீண்ட தொலைவு அலைந்து ஒரு தடாகத்தைக் கண்டுபிடித்தது. பிறகு மன்னரை எழுப்பி அவருக்கு வழிகாட்டியது. தடாகத்தைக் கண்ட மன்னர் அகமகிழ்ந்து நீரைக் குடிக்க முயன்றார். அப்போது அவருக்கு அருகில் எலுமிச்சம் பழம் ஒன்று மிதந்து வந்தது. அதை நோக்கியபோது தடாகத்தில் சிலை ஒன்று எழுவதைக் கண்டு அதிசயித்தார் மன்னர்.
இதே நேரத்தில் மன்னரைத் தேடி பரிவாரங்கள் காட்டுக்குள் வந்தன. மன்னரின் உத்திரவுப்படி அவர்கள் சிலையை நீரிலிருந்து வெளியே எடுத்து வந்தனர். இதன்பின் அம்மனுக்கு அங்கேயே கோயில் எழுப்பினார் மன்னர். காட்டு எல்லைப்பகுதியின் ஊற்று நீர் தடாகத்தில் கிடைத்ததால் அம்மனும் ஊற்றுக்காடு எல்லையம்மன் என்று அழைக்கப்பட்டாள். அதுவே மருவி தற்போது ஊத்துக்காடு என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் மன்னரின் மெய்க்காப்பாளரின் கனவில் தோன்றிய எல்லையம்மன், ""ஊருக்கு கிழக்குப் பகுதியில் என்னை வைத்து வழிபடுங்கள்'' என்றாள். அதன்படி ஊரின் கிழக்குப் பகுதியில் திருக்கோயில் கட்டி எல்லையம்மனை பிரதிஷ்டை செய்தார் மன்னர்.
எல்லையம்மன் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறாள். இடது மேல் கையில் சூலத்துடனும் வலது மேல் கையில் உடுக்கையுடனும் மற்ற இரு கைகளில் அபயம் மற்றும் வரத கரத்துடனும் வலது காலை மடித்து இடது காலினை மகிஷன் தலை மீது வைத்தபடியும் பக்தர்களுக்கு அருள்புரிகிறாள்.
கருவறைக்கு முன்புறம் துவாரபாலகர்களும், ஏழரை அடி உயரம் உள்ள காளிகாம்பாளும் உள்ளனர்.
கருவறையின் வெளிப்புறச் சுவரில் வாராகி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, பிராமி, துர்கை, ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு ஆகியோர் அருள்புரிகின்றனர்.
மேலும் காலபைரவர் சந்நிதி, நவகிரகங்களின் சந்நிதி, சிவன், பார்வதி மற்றும் விநாயகர் சந்நிதிகளும் உள்ளன.
விசேஷங்கள்: இந்தக் கோயிலில் தினமும் 3 கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
சித்திரை மூல நட்சத்திரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்ததால் அதை பத்து நாட்கள் பிரம்மோற்ஸவ விழாவாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர். அதில் ஒன்றாக தெப்போற்ஸவம் நடக்கிறது. இங்கே அம்மனுக்குப் படைத்த உப்பில்லாத வெண்பொங்கல் பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு.
பிரார்த்தனை:
இந்தக் கோயில் திருக்குளத்தில் நீராடி வேப்பிலையை உடலில் அணிந்து பொங்கல் வைத்து வழிபட்டால் திருமணம் கைகூடும். தீராத நோய் தீரும். தொழில் வளர்ச்சியடையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கோயில் அருகில் உள்ள அலரி மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் அந்த பாக்கியம் கிடைக்கும். பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கோயில் அருகில் உள்ள ஆகாஷ தேவதையை வழிபட்டால் பிரச்சனை தீரும்.
அமைவிடம்:
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தாலுக்காவில் உள்ளது ஊத்துக்காடு. வாலாஜாபாத் நகரிலிருந்து 4 கி.மீ. தொலைவு.
தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியை விஜயநகர மன்னர்கள் ஆண்டு வந்தனர். அவர்களில் தலைசிறந்தவர் கிருஷ்ண தேவராயர். இவர் காட்டுக்குச் சென்று வேட்டையாடுவது வழக்கம். அவருடன் பாதுகாவலர்களோ படை வீரர்களோ செல்வது இல்லை. அவர் வளர்த்த நாய் ஒன்று மட்டுமே உடன் செல்லும்.
அதன்படி கிருஷ்ண தேவராயர் காட்டுக்குச் சென்றபோது வேட்டையாடும் ஆர்வத்தில் காட்டில் வெகு தொலைவுக்கு வந்துவிட்டார். வழி தெரியவில்லை. மிகுந்த களைப்பால் தாகமும் ஏற்பட்டது. சுற்றுமுற்றும் தேடியும் தடாகத்தைக் காணவில்லை. ஒருவித மயக்கத்துடன் மரத்தில் சாய்ந்து அமர்ந்தார் மன்னர்.
இதைக் கண்ட நாய் அரசரின் நிலையறிந்து வருந்தியது. நீண்ட தொலைவு அலைந்து ஒரு தடாகத்தைக் கண்டுபிடித்தது. பிறகு மன்னரை எழுப்பி அவருக்கு வழிகாட்டியது. தடாகத்தைக் கண்ட மன்னர் அகமகிழ்ந்து நீரைக் குடிக்க முயன்றார். அப்போது அவருக்கு அருகில் எலுமிச்சம் பழம் ஒன்று மிதந்து வந்தது. அதை நோக்கியபோது தடாகத்தில் சிலை ஒன்று எழுவதைக் கண்டு அதிசயித்தார் மன்னர்.
இதே நேரத்தில் மன்னரைத் தேடி பரிவாரங்கள் காட்டுக்குள் வந்தன. மன்னரின் உத்திரவுப்படி அவர்கள் சிலையை நீரிலிருந்து வெளியே எடுத்து வந்தனர். இதன்பின் அம்மனுக்கு அங்கேயே கோயில் எழுப்பினார் மன்னர். காட்டு எல்லைப்பகுதியின் ஊற்று நீர் தடாகத்தில் கிடைத்ததால் அம்மனும் ஊற்றுக்காடு எல்லையம்மன் என்று அழைக்கப்பட்டாள். அதுவே மருவி தற்போது ஊத்துக்காடு என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் மன்னரின் மெய்க்காப்பாளரின் கனவில் தோன்றிய எல்லையம்மன், ""ஊருக்கு கிழக்குப் பகுதியில் என்னை வைத்து வழிபடுங்கள்'' என்றாள். அதன்படி ஊரின் கிழக்குப் பகுதியில் திருக்கோயில் கட்டி எல்லையம்மனை பிரதிஷ்டை செய்தார் மன்னர்.
எல்லையம்மன் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறாள். இடது மேல் கையில் சூலத்துடனும் வலது மேல் கையில் உடுக்கையுடனும் மற்ற இரு கைகளில் அபயம் மற்றும் வரத கரத்துடனும் வலது காலை மடித்து இடது காலினை மகிஷன் தலை மீது வைத்தபடியும் பக்தர்களுக்கு அருள்புரிகிறாள்.
கருவறைக்கு முன்புறம் துவாரபாலகர்களும், ஏழரை அடி உயரம் உள்ள காளிகாம்பாளும் உள்ளனர்.
கருவறையின் வெளிப்புறச் சுவரில் வாராகி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, பிராமி, துர்கை, ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு ஆகியோர் அருள்புரிகின்றனர்.
மேலும் காலபைரவர் சந்நிதி, நவகிரகங்களின் சந்நிதி, சிவன், பார்வதி மற்றும் விநாயகர் சந்நிதிகளும் உள்ளன.
விசேஷங்கள்: இந்தக் கோயிலில் தினமும் 3 கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
சித்திரை மூல நட்சத்திரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்ததால் அதை பத்து நாட்கள் பிரம்மோற்ஸவ விழாவாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர். அதில் ஒன்றாக தெப்போற்ஸவம் நடக்கிறது. இங்கே அம்மனுக்குப் படைத்த உப்பில்லாத வெண்பொங்கல் பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு.
பிரார்த்தனை:
இந்தக் கோயில் திருக்குளத்தில் நீராடி வேப்பிலையை உடலில் அணிந்து பொங்கல் வைத்து வழிபட்டால் திருமணம் கைகூடும். தீராத நோய் தீரும். தொழில் வளர்ச்சியடையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கோயில் அருகில் உள்ள அலரி மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் அந்த பாக்கியம் கிடைக்கும். பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கோயில் அருகில் உள்ள ஆகாஷ தேவதையை வழிபட்டால் பிரச்சனை தீரும்.
அமைவிடம்:
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தாலுக்காவில் உள்ளது ஊத்துக்காடு. வாலாஜாபாத் நகரிலிருந்து 4 கி.மீ. தொலைவு.
சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில்.
சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக காற்று வாங்கிக் கொண்டு நிம்மதியாக குடியிருந்தாள்.
ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. பின்னர் 1640இல் ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்துவிட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
காளிகாம்பாள் கோவில் :
ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்புசெட்டித் தெருவிற்கு இடம்மாறினாள் இந்த அம்மன். தம்புசெட்டித் தெருவில் உள்ள கோவிலை முத்துமாரி ஆச்சாரி என்பவர் நிர்மாணித்தார். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டே இருந்தனர். அப்படி வந்த ஒரு விஐபி பக்தர்தான் சத்ரபதி சிவாஜி.
1677இல் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தார் சத்ரபதி சிவாஜி. அப்போது சென்னையின் ஆளுநராக இருந்தவர் ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர் (Streynsham Master). இவர் ஏற்கனவே சிவாஜியின் வீரத்தைப் பார்த்திருக்கிறார். 1670இல் சிவாஜி சூரத் நகரில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையைத் தாக்கியபோது அதனை எதிர்கொண்டவர் இதே ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர்தான்.
தனது தென்னகப் படையெடுப்பால் வேலூர், செஞ்சி, ஆற்காடு ஆகியப் பகுதிகளை கைப்பற்றிய சிவாஜியின் அடுத்த குறி சென்னைதான் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் மெட்ராஸ்வாசிகள் அடுத்து என்ன எனத் தெரியாமல் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர். இப்படி நிமிடங்கள் திக்..திக்.. என கடந்து கொண்டிருந்த நிலையில், 1677, மே 14ஆம் தேதி சிவாஜியின் தூதர் ஒருவர் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்தார்.
சத்ரபதி சிவாஜி சில விலை உயர்ந்த கற்களையும், விஷமுறிவு மருந்துகளையும் கேட்பதாகவும், அதற்குரிய பணத்தை அளித்து விடுவதாகவும் அந்த தூதர் தெரிவித்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் பணம் எதையும் பெறாமல் சிவாஜி கேட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். சிவாஜி சென்னையைத் தாக்காமல் இருக்க என்ன விலையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர்.
சில நாட்கள் கழித்து மீண்டும் சில கோரிக்கைகளோடு திரும்பி வந்தார் சிவாஜியின் தூதர். இம்முறை வாங்கும் பொருட்களுக்கு உரிய விலையை கண்டிப்பாக கொடுக்கும்படி சிவாஜி வலியுறுத்தியதாக கூறினார். ஆனால் இரண்டாம் முறையும் விலையில்லா பொருட்களே அவருக்கு வழங்கப்பட்டன. மூன்றாவது முறையாக மீண்டும் வந்த தூதர், இம்முறை சில ஆங்கிலேய பொறியாளர்களை சிவாஜி அழைத்து வரச் சொன்னதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாதென மிகவும் பணிவாக மறுத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். இதனால் ஆத்திரமுற்று சிவாஜி சென்னை மீது படையெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே சில அரசியல் மாற்றங்கள் காரணமாக சிவாஜி மீண்டும் தனது ராஜ்ஜியத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டி இருந்தது.
இந்த இடத்தில்தான் வரலாற்றில் ஒரு புதிர் அவிழ்க்கப்படாமல் நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. சிவாஜி சென்னைக்குள்ளேயே வரவில்லை என்கிறார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால் காளியின் பக்தரான சிவாஜி, யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வந்து தம்புசெட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாளை தரிசித்துவிட்டுச் சென்றார் என்கிறார்கள் சிலர். அக்டோபர் 3, 1677இல் சிவாஜி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு உறுதியான வரலாற்று ஆவணங்கள் எதுவும் இல்லை.
மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில், பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிராட்வேயில் தங்கியிருந்தார். அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவாராம். ‘‘யாதுமாகி நின்றாய் காளி’’ என்ற அவரது பாடலில் வருவது காளிகாம்பாள்தான்.
சத்ரபதி சிவாஜி, பாரதியார் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரையும் ஆசிர்வதித்த காளிகாம்பாள், 3 நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தனது அன்பால் சென்னையை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள்.
* கடற்கரைக் கோவிலில் காளி உருவம் உக்கிரமாக இருந்ததாகவும், தம்புசெட்டித் தெருவிற்கு மாறியபோது காளியின் உருவம் சாந்த சொரூபியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
* கோவிலின் வாசலில் இருக்கும் கிழக்கு ராஜகோபுரம் 1983இல் கட்டப்பட்டது.
ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. பின்னர் 1640இல் ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்துவிட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
காளிகாம்பாள் கோவில் :
ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்புசெட்டித் தெருவிற்கு இடம்மாறினாள் இந்த அம்மன். தம்புசெட்டித் தெருவில் உள்ள கோவிலை முத்துமாரி ஆச்சாரி என்பவர் நிர்மாணித்தார். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டே இருந்தனர். அப்படி வந்த ஒரு விஐபி பக்தர்தான் சத்ரபதி சிவாஜி.
1677இல் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தார் சத்ரபதி சிவாஜி. அப்போது சென்னையின் ஆளுநராக இருந்தவர் ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர் (Streynsham Master). இவர் ஏற்கனவே சிவாஜியின் வீரத்தைப் பார்த்திருக்கிறார். 1670இல் சிவாஜி சூரத் நகரில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையைத் தாக்கியபோது அதனை எதிர்கொண்டவர் இதே ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர்தான்.
தனது தென்னகப் படையெடுப்பால் வேலூர், செஞ்சி, ஆற்காடு ஆகியப் பகுதிகளை கைப்பற்றிய சிவாஜியின் அடுத்த குறி சென்னைதான் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் மெட்ராஸ்வாசிகள் அடுத்து என்ன எனத் தெரியாமல் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர். இப்படி நிமிடங்கள் திக்..திக்.. என கடந்து கொண்டிருந்த நிலையில், 1677, மே 14ஆம் தேதி சிவாஜியின் தூதர் ஒருவர் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்தார்.
சத்ரபதி சிவாஜி சில விலை உயர்ந்த கற்களையும், விஷமுறிவு மருந்துகளையும் கேட்பதாகவும், அதற்குரிய பணத்தை அளித்து விடுவதாகவும் அந்த தூதர் தெரிவித்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் பணம் எதையும் பெறாமல் சிவாஜி கேட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். சிவாஜி சென்னையைத் தாக்காமல் இருக்க என்ன விலையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர்.
சில நாட்கள் கழித்து மீண்டும் சில கோரிக்கைகளோடு திரும்பி வந்தார் சிவாஜியின் தூதர். இம்முறை வாங்கும் பொருட்களுக்கு உரிய விலையை கண்டிப்பாக கொடுக்கும்படி சிவாஜி வலியுறுத்தியதாக கூறினார். ஆனால் இரண்டாம் முறையும் விலையில்லா பொருட்களே அவருக்கு வழங்கப்பட்டன. மூன்றாவது முறையாக மீண்டும் வந்த தூதர், இம்முறை சில ஆங்கிலேய பொறியாளர்களை சிவாஜி அழைத்து வரச் சொன்னதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாதென மிகவும் பணிவாக மறுத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். இதனால் ஆத்திரமுற்று சிவாஜி சென்னை மீது படையெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே சில அரசியல் மாற்றங்கள் காரணமாக சிவாஜி மீண்டும் தனது ராஜ்ஜியத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டி இருந்தது.
இந்த இடத்தில்தான் வரலாற்றில் ஒரு புதிர் அவிழ்க்கப்படாமல் நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. சிவாஜி சென்னைக்குள்ளேயே வரவில்லை என்கிறார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால் காளியின் பக்தரான சிவாஜி, யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வந்து தம்புசெட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாளை தரிசித்துவிட்டுச் சென்றார் என்கிறார்கள் சிலர். அக்டோபர் 3, 1677இல் சிவாஜி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு உறுதியான வரலாற்று ஆவணங்கள் எதுவும் இல்லை.
மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில், பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிராட்வேயில் தங்கியிருந்தார். அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவாராம். ‘‘யாதுமாகி நின்றாய் காளி’’ என்ற அவரது பாடலில் வருவது காளிகாம்பாள்தான்.
சத்ரபதி சிவாஜி, பாரதியார் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரையும் ஆசிர்வதித்த காளிகாம்பாள், 3 நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தனது அன்பால் சென்னையை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள்.
* கடற்கரைக் கோவிலில் காளி உருவம் உக்கிரமாக இருந்ததாகவும், தம்புசெட்டித் தெருவிற்கு மாறியபோது காளியின் உருவம் சாந்த சொரூபியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
* கோவிலின் வாசலில் இருக்கும் கிழக்கு ராஜகோபுரம் 1983இல் கட்டப்பட்டது.
திருச்சி மாவட்டம் லால்குடி - அன்பில் பேருந்து சாலையில், லால்குடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆதிகுடி என்ற திருத்தலம்.
திருச்சி மாவட்டம் லால்குடி - அன்பில் பேருந்து சாலையில், லால்குடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆதிகுடி என்ற திருத்தலம். இங்கு அங்குரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
நம் நடப்பு சந்ததியினர் ஊனம் அடைந்திருந்தால், விபத்தால் அங்க வலிமை இழந்திருந்தால், பக்கவாதம் போல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த ஆலயத்தில் இருக்கும் விமல லிங்கத்தின் வலதுபுறம் நன்றாக திரண்ட வெண்ணெய் காப்பும், இடதுபுறம் வெண்ணெய் காப்பின் மேல் நிறைய மாதுளை முத்துகளைப் பதித்தும் வழிபட்டால் குணம் நிச்சயம் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இந்த விமல லிங்கம் அருள்பாலிக்கும் அங்குரேஸ்வரர் ஆலயம் ஆதிகுடியில் உள்ளது.
ஆலய அமைப்பு :
ஆலயம் தென் திசை நோக்கி அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் அங்குரேஸ்வரர். இறைவியின் பெயர் பிரேமாம்பிகை. ஆலய முகப்பை தாண்டியதும் பிரகாரமும், நடுவே நந்தியப் பெருமானின் திருமேனியும் உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தில் நுழைந்தால் எதிரே அன்னையின் சன்னிதியும், இடது புறம் இறைவனின் சன்னிதியும் உள்ளன. இறைவனின் அர்த்த மண்டப நுழைவாசலில் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் முருகப்பெருமானும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
கருவறையில் இறைவன் சுயம்பு மூர்த்தியாய் லிங்கத்திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அன்னை பிரேமாம்பிகை தென் திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இறைவனின் தேவகோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் மகா விஷ்ணுவும், வடக்கில் துர்க்கையும் வீற்றிருக்கின்றனர்.
பிரகாரத்தில் தெற்கில் விமல லிங்கம் உள்ளது. இந்த விமல லிங்கம், மிகப் பெரிய அளவில் இருப்பதுடன் ஆலயத்தில் நுழைந்தவுடன் கண்களைக் கவரும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு திருச்சுற்றில் மகா கணபதி, சண்முக நாதர், வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி ஆகியோரும், வடக்கில் சண்டிகேசுவரரின் சன்னிதியும் உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் இருந்து அருள்பாலிக்கின்றனர். ஆலயத்தின் தலமரமாக வன்னி மரம் உள்ளது.
தென் திசை நோக்கி அமர்ந்திருக்கும் இந்த ஆலயத்தின் எதிர் திசையில் மயானம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வாஞ்சியம் மற்றும் ஆதி குடியான இத்தலம் என இரண்டு ஆலயங்களுக்கு எதிரே மட்டும்தான், மயானம் அமைந்துள்ளதாக இந்தப் பகுதி பக்தர்கள் கூறுகின்றனர்.
தல வரலாறு :
முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த ஆலயம், பல நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாகத் திகழ்கிறது. இந்த ஆலயத்திற்கு ஒரு தல வரலாறும் உண்டு.
பழங்காலத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ள இடம் அடர்ந்த புதர்களும் புல் வெளிகளும் நிறைந்து காணப்பட்டது. ஆதிகுடி என்ற இந்த ஊரில் விமலன் என்ற பெயருடைய மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வசித்து வந்தான். அவன் பிறவியிலேயே ஒரு கை, கால் ஊனம் உள்ளவனாய் இருந்தான். அவன் தினசரி மாடுகளை புல் வெளிக்கு ஓட்டிச் சென்று மேய்த்து விட்டு, மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
ஒருநாள் அவன் ஓட்டிச் சென்ற மாடுகளின் கூட்டத்திலிருந்து பசு ஒன்று தனியாக பிரிந்து ஓரிடத்தில் நின்று தானாக பாலைச் சொரிந்தது. இதைக் கண்ட விமலன், தன் கையில் இருந்த அங்குரத்தால் (மண்வெட்டியால்) அந்த இடத்தை செதுக்கினான். அப்போது அவன் செதுக்கிய இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வெளியானது. ரத்தத்தைக் கண்டதும், விமலன் அச்சமடைந்தான். செய்வது அறியாது திகைத்து நின்றான். பின் பதற்றத்துடன் ஊருக்குள் ஓடி, ஊர் மக்களிடம் தான் கண்ட காட்சியைக் கூறினான்.
ஊர் மக்கள் அவனை வியப்புடன் பார்த்தனர். பிறவி ஊனம் உள்ளவனாக இருந்த அவன், ஊனம் நீங்கி முழு நலத்துடன் தங்கள் முன் அவன் நிற்பதைக் கண்டு வியப்பின் எல்லைக்கேச் சென்றுவிட்டனர். ஆம்! விமலனின் உடல் குறைபாடு முழுமையாக நீங்கியிருந்தது. இதையடுத்து அவன் கூறிய இடத்திற்கு ஊர் மக்கள் அனைவரும் சென்றனர். அவன் சொன்ன இடத்தில் தோண்டிப் பார்த்தபோது, அங்கு ஒரு அழகிய சிவலிங்கம் தென்பட்டது.
அதை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் சோழ மன்னனால் அந்த இடத்தில் ஒரு ஆலயம் கட்டப்பட்டது. அங்குரம் எனச் சொல்லப்படும் மண்வெட்டியால் தோண்டியபோது வந்த லிங்கம் என்பதால், இறைவனுக்கு அங்குரேஸ்வரர் என்ற பெயரே நிலைபெற்றுவிட்டது.
இங்குள்ள வாய்க்காலுக்கு கமல காசி தீர்த்தம் என்று பெயர். காசிக்கு இணையான தலம் இது. நீத்தார் கடன் செய்ய உகந்த இடம் என்றும் கூறப்படுகிறது.
திருவிழாக்கள் :
தினசரி இரண்டு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி வெள்ளியில் சுமார் 200 பெண்கள் பங்கு பெறும் விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடத்தப்படும். மாதப் பிரதோஷ நாட்கள், மாத சிவராத்திரிகள், நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை சோம வாரங்கள், மார்கழி தனுர் மாத பூஜை, தை பொங்கல், சித்திரை மாதப் பிறப்பு போன்ற நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
மாடு மேய்க்கும் சிறுவன் மேல் கருணை கொண்டு, அவனது பிறவி ஊனத்தை குணமாக்கிய இத்தலத்து இறைவன், தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் மன ஊனத்தையும் விலக்கி அருள்புரிவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
நம் நடப்பு சந்ததியினர் ஊனம் அடைந்திருந்தால், விபத்தால் அங்க வலிமை இழந்திருந்தால், பக்கவாதம் போல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த ஆலயத்தில் இருக்கும் விமல லிங்கத்தின் வலதுபுறம் நன்றாக திரண்ட வெண்ணெய் காப்பும், இடதுபுறம் வெண்ணெய் காப்பின் மேல் நிறைய மாதுளை முத்துகளைப் பதித்தும் வழிபட்டால் குணம் நிச்சயம் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இந்த விமல லிங்கம் அருள்பாலிக்கும் அங்குரேஸ்வரர் ஆலயம் ஆதிகுடியில் உள்ளது.
ஆலய அமைப்பு :
ஆலயம் தென் திசை நோக்கி அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் அங்குரேஸ்வரர். இறைவியின் பெயர் பிரேமாம்பிகை. ஆலய முகப்பை தாண்டியதும் பிரகாரமும், நடுவே நந்தியப் பெருமானின் திருமேனியும் உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தில் நுழைந்தால் எதிரே அன்னையின் சன்னிதியும், இடது புறம் இறைவனின் சன்னிதியும் உள்ளன. இறைவனின் அர்த்த மண்டப நுழைவாசலில் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் முருகப்பெருமானும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
கருவறையில் இறைவன் சுயம்பு மூர்த்தியாய் லிங்கத்திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அன்னை பிரேமாம்பிகை தென் திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இறைவனின் தேவகோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் மகா விஷ்ணுவும், வடக்கில் துர்க்கையும் வீற்றிருக்கின்றனர்.
பிரகாரத்தில் தெற்கில் விமல லிங்கம் உள்ளது. இந்த விமல லிங்கம், மிகப் பெரிய அளவில் இருப்பதுடன் ஆலயத்தில் நுழைந்தவுடன் கண்களைக் கவரும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு திருச்சுற்றில் மகா கணபதி, சண்முக நாதர், வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி ஆகியோரும், வடக்கில் சண்டிகேசுவரரின் சன்னிதியும் உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் இருந்து அருள்பாலிக்கின்றனர். ஆலயத்தின் தலமரமாக வன்னி மரம் உள்ளது.
தென் திசை நோக்கி அமர்ந்திருக்கும் இந்த ஆலயத்தின் எதிர் திசையில் மயானம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வாஞ்சியம் மற்றும் ஆதி குடியான இத்தலம் என இரண்டு ஆலயங்களுக்கு எதிரே மட்டும்தான், மயானம் அமைந்துள்ளதாக இந்தப் பகுதி பக்தர்கள் கூறுகின்றனர்.
தல வரலாறு :
முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த ஆலயம், பல நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாகத் திகழ்கிறது. இந்த ஆலயத்திற்கு ஒரு தல வரலாறும் உண்டு.
பழங்காலத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ள இடம் அடர்ந்த புதர்களும் புல் வெளிகளும் நிறைந்து காணப்பட்டது. ஆதிகுடி என்ற இந்த ஊரில் விமலன் என்ற பெயருடைய மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வசித்து வந்தான். அவன் பிறவியிலேயே ஒரு கை, கால் ஊனம் உள்ளவனாய் இருந்தான். அவன் தினசரி மாடுகளை புல் வெளிக்கு ஓட்டிச் சென்று மேய்த்து விட்டு, மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
ஒருநாள் அவன் ஓட்டிச் சென்ற மாடுகளின் கூட்டத்திலிருந்து பசு ஒன்று தனியாக பிரிந்து ஓரிடத்தில் நின்று தானாக பாலைச் சொரிந்தது. இதைக் கண்ட விமலன், தன் கையில் இருந்த அங்குரத்தால் (மண்வெட்டியால்) அந்த இடத்தை செதுக்கினான். அப்போது அவன் செதுக்கிய இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வெளியானது. ரத்தத்தைக் கண்டதும், விமலன் அச்சமடைந்தான். செய்வது அறியாது திகைத்து நின்றான். பின் பதற்றத்துடன் ஊருக்குள் ஓடி, ஊர் மக்களிடம் தான் கண்ட காட்சியைக் கூறினான்.
ஊர் மக்கள் அவனை வியப்புடன் பார்த்தனர். பிறவி ஊனம் உள்ளவனாக இருந்த அவன், ஊனம் நீங்கி முழு நலத்துடன் தங்கள் முன் அவன் நிற்பதைக் கண்டு வியப்பின் எல்லைக்கேச் சென்றுவிட்டனர். ஆம்! விமலனின் உடல் குறைபாடு முழுமையாக நீங்கியிருந்தது. இதையடுத்து அவன் கூறிய இடத்திற்கு ஊர் மக்கள் அனைவரும் சென்றனர். அவன் சொன்ன இடத்தில் தோண்டிப் பார்த்தபோது, அங்கு ஒரு அழகிய சிவலிங்கம் தென்பட்டது.
அதை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் சோழ மன்னனால் அந்த இடத்தில் ஒரு ஆலயம் கட்டப்பட்டது. அங்குரம் எனச் சொல்லப்படும் மண்வெட்டியால் தோண்டியபோது வந்த லிங்கம் என்பதால், இறைவனுக்கு அங்குரேஸ்வரர் என்ற பெயரே நிலைபெற்றுவிட்டது.
இங்குள்ள வாய்க்காலுக்கு கமல காசி தீர்த்தம் என்று பெயர். காசிக்கு இணையான தலம் இது. நீத்தார் கடன் செய்ய உகந்த இடம் என்றும் கூறப்படுகிறது.
திருவிழாக்கள் :
தினசரி இரண்டு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி வெள்ளியில் சுமார் 200 பெண்கள் பங்கு பெறும் விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடத்தப்படும். மாதப் பிரதோஷ நாட்கள், மாத சிவராத்திரிகள், நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை சோம வாரங்கள், மார்கழி தனுர் மாத பூஜை, தை பொங்கல், சித்திரை மாதப் பிறப்பு போன்ற நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
மாடு மேய்க்கும் சிறுவன் மேல் கருணை கொண்டு, அவனது பிறவி ஊனத்தை குணமாக்கிய இத்தலத்து இறைவன், தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் மன ஊனத்தையும் விலக்கி அருள்புரிவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.






