என் மலர்
முக்கிய விரதங்கள்
முன்னோர்களின் ஆசியையும் பெற்றுத் தரும் மாதமான புரட்டாசியில் பெருமாளுக்கு உகந்த மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய சில விரதங்களை கீழே படித்து தெரிந்துகொள்வோம்.
தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர்களின் ஆசியையும் பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி. இம்மாதத்தின் பெயரைக் கேட்டதுமே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனுமே நம் நினைவுக்கு வருவர். ஆமாம், பெருமாள் மாதம் என்று குறிப்பிடும் அளவுக்கு புண்ணியம் பெற்றுவிட்டது புரட்டாசி. இம்மாதத்தில் வரும் சனிக்கிழமை வழிபாடுகள் மட்டுமின்றி, அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிக உகந்தவை.
ஸித்தி விநாயக விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதம் இது. பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல்-உள்ள சுத்தியோடு விரதம் இருந்து, பிள்ளையாரை வழிபட, காரிய ஸித்தி உண்டாகும்.
சஷ்டி - லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்கலங்களையும் அருளும்.
அமுக்தாபரண விரதம்: புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக் கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க அருள்செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.
ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப் படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.
தூர்வாஷ்டமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.
மஹாலட்சுமி விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.
கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. ஸித்திகளைத் தரும்.
அனந்த விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.
ஸித்தி விநாயக விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதம் இது. பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல்-உள்ள சுத்தியோடு விரதம் இருந்து, பிள்ளையாரை வழிபட, காரிய ஸித்தி உண்டாகும்.
சஷ்டி - லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்கலங்களையும் அருளும்.
அமுக்தாபரண விரதம்: புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக் கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க அருள்செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.
ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப் படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.
தூர்வாஷ்டமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.
மஹாலட்சுமி விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.
கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. ஸித்திகளைத் தரும்.
அனந்த விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.
சங்கட ஹர சதுர்த்தி விரதம் நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தரும் விரதமாக போற்றப்படுகிறது.
ஒரு சமயம் விநாயகர் லோக சஞ்சாரம் செய்யும் வேளையில், தன் அழகைப்பற்றி கர்வம் கொண்டிருந்த சந்திரன் அவரைப் பார்த்து சிரிக்க, கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை நோக்கி, "நீ தேய்ந்து மறையக் கடவது" என்று சபித்தார். பின், தவறுக்கு வருந்திய சந்திரன், விநாயகரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, "பாலசந்திரன்' என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையத் தந்தார். அவ்வாறு சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தியாகும். ஆகவே, சதுர்த்தி திதி விநயாகருக்கு உகந்ததாயிற்று.
'சங்கட ஹர' என்றால் சங்கடத்தை நீக்குதல். உலக வாழ்வில் நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் வரும் சங்கட ஹர சதுர்த்தியிலிருந்து விரதம் துவங்கி ஒவ்வொரு மாதமும் விரதமிருந்து பன்னிரண்டு சதுர்த்திகள் நிறைவுறும் தினத்தன்று, கணபதி ஹோமம் செய்து விரதத்தை நிறைவு செய்ய, எப்பேர்ப்பட்ட துன்பமும் விலகும் என்பது நம்பிக்கை.
பொதுவாக, நாலாம் பிறை எனப்படும் சதுர்த்தி தினத்தன்று சந்திரனைப் பார்க்கலாகாது. அவ்வாறு பார்க்க நேர்ந்தால், கீழ்வரும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
"ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:"
'சங்கட ஹர' என்றால் சங்கடத்தை நீக்குதல். உலக வாழ்வில் நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் வரும் சங்கட ஹர சதுர்த்தியிலிருந்து விரதம் துவங்கி ஒவ்வொரு மாதமும் விரதமிருந்து பன்னிரண்டு சதுர்த்திகள் நிறைவுறும் தினத்தன்று, கணபதி ஹோமம் செய்து விரதத்தை நிறைவு செய்ய, எப்பேர்ப்பட்ட துன்பமும் விலகும் என்பது நம்பிக்கை.
பொதுவாக, நாலாம் பிறை எனப்படும் சதுர்த்தி தினத்தன்று சந்திரனைப் பார்க்கலாகாது. அவ்வாறு பார்க்க நேர்ந்தால், கீழ்வரும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
"ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:"
தம்பதிகளுக்குள் ஏற்படும் ஒற்றுமைக் குறைவு, பிரிவு, போன்ற பிரச்சனைகள் நீங்க ஸ்ரீ கௌரி தேவியை விரதமிருந்து பூஜிப்பது மிக அவசியமாகும்.
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர பகவான் நீசமடைந்திருந்தாலோ, தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தாலோ அல்லது அஸ்தமனமாகியிருந்தாலோ ஏற்படும் தோஷங்களுக்கு, ஸ்ரீ கௌரி பூஜை மிகச் சிறந்த பரிகாரமாகும். தம்பதிகளுக்குள் ஏற்படும் ஒற்றுமைக் குறைவு, பிரிவு, கணவன், மனைவியின் உடல் ஆரோக்கியம் பாதித்தல் போன்ற பிரச்சனைகள் நீங்க ஸ்ரீ கௌரி தேவியை விரதமிருந்து பூஜிப்பது மிக அவசியமாகும்.
விரத தினத்திற்கு முன் தினம், இல்லம், பூஜையறையைச் சுத்தம் செய்து, பூஜைக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொள்ளவும்.
பூஜைக்குத் தேவையானவை :
கௌரி தேவியின் பிரதிமை (கலசத்திலும் ஆவாஹனம் செய்து பூஜிக்கலாம். அல்லது கலசத்தில் தேவியின் பிரதிமையை வைத்து அலங்கரிப்பதும் சிறப்பு). சிவனாரும் பார்வதி தேவியும் இணைந்திருக்கும் படத்தை வைத்துப் பூஜிப்பதும் வழக்கத்திலிருக்கிறது.
மாவிலை தோரணங்கள்,
மஞ்சள், குங்குமம், சந்தனம், ஊதுவத்தி, கற்பூரம், அக்ஷதை.
தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மற்ற வகைப் பழங்கள்(இயன்றால்).
பூமாலை, உதிரிப்பூ, கஜவஸ்திரம்,
புடவை, ரவிக்கை அல்லது இரண்டு ரவிக்கைத் துணிகள்,
திருவிளக்குகள், ஒற்றை ஆரத்தி(தீபம்), பஞ்சமுக ஆரத்தி.
தயிர்,பால், தேன், வெல்லம், நெய்(பஞ்சாமிர்த ஸ்நானத்திற்கு).
பஞ்சபாத்திர உத்திரிணி, தீப்பெட்டி முதலியன.
தேவிக்கு நிவேதனமாக, சர்க்கரைப் பொங்கல் செய்வது உசிதம். விரதத்தை காலை அல்லது மாலை வேளையில் அனுஷ்டிக்கலாம். மாலை வரை உபவாசமிருந்து, சூரிய அஸ்தமனமாகும் சமயம், அனுஷ்டிப்பதே சிறப்பு. முழுக்க உபவாசமிருக்க முடியாதவர்கள், பால், பழம் அருந்தலாம்.
மாக்கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், அம்பிகையை கலசத்தில் அலங்கரித்து வைக்க வேண்டும். தங்க ஆபரணங்களால் அழகுற அலங்கரிப்பது விசேஷம். இதனால் குடும்பத்தில் தங்கம் வாங்கும் வசதி பெருகி, ஏராளமான தங்க ஆபரணங்களை அணியும் யோகம் அம்பிகை அருளால் கிடைக்கும். மண்டபம் கிழக்குப் பார்த்து இருக்க வேண்டும்.
வடக்குப் பார்த்து அமர்ந்து பூஜிக்க வேண்டும். அம்பிகையின் திருமுன் இருபுறமும் விளக்குகள் ஏற்ற வேண்டும். வலப்புறம் நெய் தீபமும், இடப்புறம் நல்லெண்ணெய் தீபமும் ஏற்ற வேண்டும்.
முதலில் விக்னேஸ்வர பூஜையைச் செய்து விட்டு, அம்பிகைக்கு (தியான, ஆவாஹனம் முதலிய) ஷோடசோபசார பூஜை செய்ய வேண்டும்.
தேவியின் ஒவ்வொரு அங்கத்தையும்(அங்க பூஜை) பூஜித்து, பின் பதினாறு முடிச்சுக்களிட்ட நோன்புச் சரடுகளுக்கு பூஜை செய்யவும். பின் அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சிக்க வேண்டும்.
நிவேதனம் செய்து, தேங்காய் உடைத்து, பழங்கள் தாம்பூலம் நிவேதித்து, கற்பூரம் காட்டி வணங்கவும். கைநிறையப் பூக்களை எடுத்துச் சமர்ப்பித்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, நோன்புச் சரடைக் கட்டிக் கொள்ளவும். பின் தேவிக்கு, இரு நெய் தீபங்களை ஆரத்தி நீரின் நடுவில் ஏற்றி வைத்து ஆரத்தி காண்பிக்கவும். 16 சிறு மாவிளக்குகள் செய்து, நடுவில் தீபம் ஏற்றி அவற்றை ஒரு தட்டில் வைத்து சுற்றிக் காண்பிப்பது சிறப்பு.
சுமங்கலிகளுக்கு உணவளித்து, பழம், தாம்பூலம் அளித்து சிறப்பிக்க வேண்டும்.
பூஜை முடிந்தபின், அருகிலுள்ள, கோவிலுக்குச் சென்று, உமையம்மை சகிதராக எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைத் தரிசித்தல் சிறப்பு. இரவு பிரசாதம் மட்டும் சாப்பிடுவது சிறப்பு. முடியாதவர்கள், பலகாரம் சாப்பிடலாம்.
மறு நாள், தேவிக்கு சுருக்கமாக, புனர் பூஜை செய்ய வேண்டும். அதாவது, தேவிக்கு, தூப தீபம் காட்டி, இயன்ற நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி, பூக்கள் சமர்ப்பித்து வணங்கவும். பின், தேவியைத் தன் இருப்பிடம் எழுந்தருளப்(யதாஸ்தானம்) பிரார்த்தித்து, பிரதிமை அல்லது கலசத்தை சிறிது வடக்காக நகர்த்தி வைக்கவும். கலசத்தில் அணிவித்த நகைகளை எடுத்து, சிறிது நேரம் அணிந்து விட்டு உள்ளே வைக்கலாம்.
விரத தினத்திற்கு முன் தினம், இல்லம், பூஜையறையைச் சுத்தம் செய்து, பூஜைக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொள்ளவும்.
பூஜைக்குத் தேவையானவை :
கௌரி தேவியின் பிரதிமை (கலசத்திலும் ஆவாஹனம் செய்து பூஜிக்கலாம். அல்லது கலசத்தில் தேவியின் பிரதிமையை வைத்து அலங்கரிப்பதும் சிறப்பு). சிவனாரும் பார்வதி தேவியும் இணைந்திருக்கும் படத்தை வைத்துப் பூஜிப்பதும் வழக்கத்திலிருக்கிறது.
மாவிலை தோரணங்கள்,
மஞ்சள், குங்குமம், சந்தனம், ஊதுவத்தி, கற்பூரம், அக்ஷதை.
தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மற்ற வகைப் பழங்கள்(இயன்றால்).
பூமாலை, உதிரிப்பூ, கஜவஸ்திரம்,
புடவை, ரவிக்கை அல்லது இரண்டு ரவிக்கைத் துணிகள்,
திருவிளக்குகள், ஒற்றை ஆரத்தி(தீபம்), பஞ்சமுக ஆரத்தி.
தயிர்,பால், தேன், வெல்லம், நெய்(பஞ்சாமிர்த ஸ்நானத்திற்கு).
பஞ்சபாத்திர உத்திரிணி, தீப்பெட்டி முதலியன.
தேவிக்கு நிவேதனமாக, சர்க்கரைப் பொங்கல் செய்வது உசிதம். விரதத்தை காலை அல்லது மாலை வேளையில் அனுஷ்டிக்கலாம். மாலை வரை உபவாசமிருந்து, சூரிய அஸ்தமனமாகும் சமயம், அனுஷ்டிப்பதே சிறப்பு. முழுக்க உபவாசமிருக்க முடியாதவர்கள், பால், பழம் அருந்தலாம்.
மாக்கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், அம்பிகையை கலசத்தில் அலங்கரித்து வைக்க வேண்டும். தங்க ஆபரணங்களால் அழகுற அலங்கரிப்பது விசேஷம். இதனால் குடும்பத்தில் தங்கம் வாங்கும் வசதி பெருகி, ஏராளமான தங்க ஆபரணங்களை அணியும் யோகம் அம்பிகை அருளால் கிடைக்கும். மண்டபம் கிழக்குப் பார்த்து இருக்க வேண்டும்.
வடக்குப் பார்த்து அமர்ந்து பூஜிக்க வேண்டும். அம்பிகையின் திருமுன் இருபுறமும் விளக்குகள் ஏற்ற வேண்டும். வலப்புறம் நெய் தீபமும், இடப்புறம் நல்லெண்ணெய் தீபமும் ஏற்ற வேண்டும்.
முதலில் விக்னேஸ்வர பூஜையைச் செய்து விட்டு, அம்பிகைக்கு (தியான, ஆவாஹனம் முதலிய) ஷோடசோபசார பூஜை செய்ய வேண்டும்.
தேவியின் ஒவ்வொரு அங்கத்தையும்(அங்க பூஜை) பூஜித்து, பின் பதினாறு முடிச்சுக்களிட்ட நோன்புச் சரடுகளுக்கு பூஜை செய்யவும். பின் அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சிக்க வேண்டும்.
நிவேதனம் செய்து, தேங்காய் உடைத்து, பழங்கள் தாம்பூலம் நிவேதித்து, கற்பூரம் காட்டி வணங்கவும். கைநிறையப் பூக்களை எடுத்துச் சமர்ப்பித்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, நோன்புச் சரடைக் கட்டிக் கொள்ளவும். பின் தேவிக்கு, இரு நெய் தீபங்களை ஆரத்தி நீரின் நடுவில் ஏற்றி வைத்து ஆரத்தி காண்பிக்கவும். 16 சிறு மாவிளக்குகள் செய்து, நடுவில் தீபம் ஏற்றி அவற்றை ஒரு தட்டில் வைத்து சுற்றிக் காண்பிப்பது சிறப்பு.
சுமங்கலிகளுக்கு உணவளித்து, பழம், தாம்பூலம் அளித்து சிறப்பிக்க வேண்டும்.
பூஜை முடிந்தபின், அருகிலுள்ள, கோவிலுக்குச் சென்று, உமையம்மை சகிதராக எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைத் தரிசித்தல் சிறப்பு. இரவு பிரசாதம் மட்டும் சாப்பிடுவது சிறப்பு. முடியாதவர்கள், பலகாரம் சாப்பிடலாம்.
மறு நாள், தேவிக்கு சுருக்கமாக, புனர் பூஜை செய்ய வேண்டும். அதாவது, தேவிக்கு, தூப தீபம் காட்டி, இயன்ற நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி, பூக்கள் சமர்ப்பித்து வணங்கவும். பின், தேவியைத் தன் இருப்பிடம் எழுந்தருளப்(யதாஸ்தானம்) பிரார்த்தித்து, பிரதிமை அல்லது கலசத்தை சிறிது வடக்காக நகர்த்தி வைக்கவும். கலசத்தில் அணிவித்த நகைகளை எடுத்து, சிறிது நேரம் அணிந்து விட்டு உள்ளே வைக்கலாம்.
தை மாதம் வரும் அமாவாசைக்கும், வெள்ளியும் விரதமிருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால், துயரங்கள் விலகிப்போகும். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
தை மாதம் வரக்கூடிய அமாவாசை திதியில், நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்த நாளும் இன்ப மயமாக வாழலாம். வீட்டில் தடைப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறக்கூடிய வாய்ப்பு உருவாகும். 27.1.2017 (வெள்ளிக்கிழமை) அன்று தை அமாவாசை வருகிறது. அன்றைய தினம்தான் அபிராமிபட்டர், முழு நிலவை வரவழைத்தத் திருநாள். நடக்காததை நடத்திக் காட்டக்கூடிய நாள் அது.
மேலும் தை மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால், துயரங்கள் விலகிப்போகும். அம்பிகை ஆலயங்களில் சந்தனக் காப்பு சாத்தி வழிபட்டால், சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும். இறைவனை அலங்கரித்துப் பார்த்தால் இனிய வாழ்க்கை மலரும். உடலைக் குளிர்ச்சியாக்கும் சந்தனத்தை அம்பிகைக்கு சாத்துவதன் மூலம், அவள் உள்ளம் குளிர்ச்சியாகி நமக்கு வேண்டும் வரத்தை தருவாள்.
மேலும் தை மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால், துயரங்கள் விலகிப்போகும். அம்பிகை ஆலயங்களில் சந்தனக் காப்பு சாத்தி வழிபட்டால், சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும். இறைவனை அலங்கரித்துப் பார்த்தால் இனிய வாழ்க்கை மலரும். உடலைக் குளிர்ச்சியாக்கும் சந்தனத்தை அம்பிகைக்கு சாத்துவதன் மூலம், அவள் உள்ளம் குளிர்ச்சியாகி நமக்கு வேண்டும் வரத்தை தருவாள்.
பொங்கல் திருநாள், பழங்காலத்தில் சூரிய விழா என்றே கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து பொங்கல் இட்டு, வழிபாடு செய்வார்கள்.
பொங்கல் திருநாளான தை மாதத்தின் முதல் நாளில்தான், சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிப்பார். இதனால்தான் பொங்கல் திருநாளை, ‘மகரசங்கராந்தி’ என்றும் அழைப்பதுண்டு. மார்கழி மாதம் வரை தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தை மாதம் முதல் வடக்கு திசையை நோக்கி நகர்வார். இந்த காலத்தை ‘உத்திராயண புண்ணிய காலம்’ என்பார்கள். சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற காலமாக உத்திராயண காலம் உள்ளது. இது தேவர்களின் பகல் பொழுதாகும்.
மருத நிலத்திற்கு உரிய தெய்வம் இந்திரன். வயலும், வயல் சார்ந்த இடத்தையே நாம் மருதநிலம் என்று அழைக்கிறோம். அந்த வயல் சார்ந்த பகுதியில் விளையும் பயிர்கள் செழிப்புற்று வளர தேவையான மழையைத் தருவது சூரியன். நிலத்தை உழுது பண்படுத்துவதற்கு பயன்படுபவை மாடுகள். ஆகையால்தான் இந்திரன், சூரியன், மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தை மாத தொடக்கத்தில் வரும் 3 நாட்களை, தமிழக மக்கள் திருநாளாக கொண்டாடுகிறார்கள்.
பழைய கழிதலும், புதியன புகுதலுமே போகி. அதாவது, பழமையான தீமைகளை உள்ளத்தில் இருந்து அகற்றி விட்டு, புதிய நல்ல எண்ணங்களை மனதில் விதைக்க வேண்டும். இந்திரனுக்கு ‘போகி’ என்று பெயர் உண்டு. இந்திரன் செய்த குற்றத்தை மன்னித்து அவரை பூஜிக்க வேண்டும் என கிருஷ்ணர் அருளினார். எனவேதான் பொங்கலுக்கு முன்தினம் இந்திரன் பெயரால் ‘போகி பண்டிகை’ கொண்டாடப்படுகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் அன்று, சூரிய பகவானை, நாராயணராக கதி விரத வழிபாடு செய்யப்படுகிறது. இதுவே சூரிய நாராயண பூஜையாகும். பொங்கல் திருநாள், பழங்காலத்தில் சூரிய விழா என்றே கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து பொங்கல் இட்டு, வழிபாடு செய்வார்கள்.
பொங்கல் வழிபாடும்.. விரத விதிமுறையும்..
பொங்கல் திருநாளின் போது, சூரியன் உதிப்பதற்கு 5 நாளிகைக்கு முன்பாகவே எழுந்து விட வேண்டும். குளித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து முற்றத்தில் நீர் தெளித்து அரிசி மாவால் கோலம் போட வேண்டும். வீட்டு முற்றத்தில் ஒரு பகுதியை, பசுஞ்சாணத்தால் மெழுகி, வெள்ளையடித்து, காவி பூச வேண்டும். காவி நிறம் துர்க்கை தேவிக்கு உரியது. துன்பங்கள் விலகுவதுடன், மங்கள வாழ்வு மலரவும், வாழ்வில் இன்பம் நிலைத்திருப்பதற்காகவும் காவி பூசப்படுகிறது. பின்னர் அந்த இடத்தை மாவிலை, வாழை, கரும்பு மற்றும் பூக்களைக் கொண்டு அலங்கரிப்பதுடன், மஞ்சள் அல்லது சந்தனத்தில் பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும்.
அதன்பிறகு பூரண கும்பம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் முதலிய மங்கள பொருட்களை வைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும். தொடர்ந்து விநாயகரை மனதில் நினைத்து, பின்னர் இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு புதுப்பானையில் மஞ்சள் இலை, மாவிலை கட்டி, பானையின் மேற்புறத்தில் திருநீறு குழைத்து பூசுவதுடன் சந்தனம், குங்குமத்தை திலகமாக இடுவதும் சிறப்பு தரும்.
அத்துடன் பானைக்குள் பசும்பாலும், நீரும் விட்டு நிரப்பி தூபதீபம் காட்ட வேண்டும். பின்னர் கற்பூர தீபத்தினால் அடுப்பில் நெருப்பை பற்ற வைக்க வேண்டும். பானையில் பால் பொங்கிவரும் போது ‘பொங்கலோ, பொங்கல்’ என்று குரல் எழுப்ப வேண்டும்.
பால் பொங்கியதும், பச்சரிசியை அள்ளி, சூரிய பகவானை வணங்கியபடி, பானையை மூன்று முறை சுற்றி, பானைக்குள் இட வேண்டும். பிறகு வெல்லம், கற்கண்டு, திராட்சை முதலியவற்றை இட வேண்டும். பொங்கல் தயாரானதும், 3 தலை வாழை இலையில் பொங்கலை வைத்து, பழங்கள மற்றும் கரும்பு படைத்து, தீபாராதனை காட்டி சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். கற்பூர தீபம் காட்டும் போது, குலதெய்வத்தையும், நம்முடைய முன்னோர்களையும் மனதில் நினைத்து வழிபடுவது சிறப்பான வாழ்வு தரும்.
தவத்தில் சிறந்தவர்களான காசிப முனிவருக்கும், அவரது மனைவி அதீதிக்கும் விசுவான் முதலான 12 பேர் பிறந்தனர். அதீதி புத்திரர்கள் என்பதால், இவர்கள் பன்னிரண்டு பேரும் ஆதித்யர் என்று அழைக்கப்பட்டார்கள்.
ஒவ்வொரு பூஜைக்கு முன்னரும், விக்னேஸ்வர பூஜை செய்வது அவசியம். புது மஞ்சளை அரைத்து அதனை பிள்ளையாராக பிடித்து வைக்க வேண்டும். மகர சங்கராந்தி அன்று சூரிய பகவானை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.
ராமபிரான், தினமும் சூரிய காயத்ரி மந்திரம், ஆதித்ய ஹிருத்ய ஸ்தோத்திரம் கூறி சூரிய பகவானை வழிபட்டார். அதன் பயனாக அவர் ராவணனை அழிக்கும் வல்லமை பெற்றார். இதே போல் மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் சூரிய வழிபாடு நடத்தியதன் பலனாக, வனவாசத்தின் போது அட்சயபாத்திரத்தை பெற்றனர். சூரிய வழிபாடு அனைத்து செல்வங்களையும் வழங்கும்.
மருத நிலத்திற்கு உரிய தெய்வம் இந்திரன். வயலும், வயல் சார்ந்த இடத்தையே நாம் மருதநிலம் என்று அழைக்கிறோம். அந்த வயல் சார்ந்த பகுதியில் விளையும் பயிர்கள் செழிப்புற்று வளர தேவையான மழையைத் தருவது சூரியன். நிலத்தை உழுது பண்படுத்துவதற்கு பயன்படுபவை மாடுகள். ஆகையால்தான் இந்திரன், சூரியன், மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தை மாத தொடக்கத்தில் வரும் 3 நாட்களை, தமிழக மக்கள் திருநாளாக கொண்டாடுகிறார்கள்.
பழைய கழிதலும், புதியன புகுதலுமே போகி. அதாவது, பழமையான தீமைகளை உள்ளத்தில் இருந்து அகற்றி விட்டு, புதிய நல்ல எண்ணங்களை மனதில் விதைக்க வேண்டும். இந்திரனுக்கு ‘போகி’ என்று பெயர் உண்டு. இந்திரன் செய்த குற்றத்தை மன்னித்து அவரை பூஜிக்க வேண்டும் என கிருஷ்ணர் அருளினார். எனவேதான் பொங்கலுக்கு முன்தினம் இந்திரன் பெயரால் ‘போகி பண்டிகை’ கொண்டாடப்படுகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் அன்று, சூரிய பகவானை, நாராயணராக கதி விரத வழிபாடு செய்யப்படுகிறது. இதுவே சூரிய நாராயண பூஜையாகும். பொங்கல் திருநாள், பழங்காலத்தில் சூரிய விழா என்றே கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து பொங்கல் இட்டு, வழிபாடு செய்வார்கள்.
பொங்கல் வழிபாடும்.. விரத விதிமுறையும்..
பொங்கல் திருநாளின் போது, சூரியன் உதிப்பதற்கு 5 நாளிகைக்கு முன்பாகவே எழுந்து விட வேண்டும். குளித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து முற்றத்தில் நீர் தெளித்து அரிசி மாவால் கோலம் போட வேண்டும். வீட்டு முற்றத்தில் ஒரு பகுதியை, பசுஞ்சாணத்தால் மெழுகி, வெள்ளையடித்து, காவி பூச வேண்டும். காவி நிறம் துர்க்கை தேவிக்கு உரியது. துன்பங்கள் விலகுவதுடன், மங்கள வாழ்வு மலரவும், வாழ்வில் இன்பம் நிலைத்திருப்பதற்காகவும் காவி பூசப்படுகிறது. பின்னர் அந்த இடத்தை மாவிலை, வாழை, கரும்பு மற்றும் பூக்களைக் கொண்டு அலங்கரிப்பதுடன், மஞ்சள் அல்லது சந்தனத்தில் பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும்.
அதன்பிறகு பூரண கும்பம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் முதலிய மங்கள பொருட்களை வைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும். தொடர்ந்து விநாயகரை மனதில் நினைத்து, பின்னர் இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு புதுப்பானையில் மஞ்சள் இலை, மாவிலை கட்டி, பானையின் மேற்புறத்தில் திருநீறு குழைத்து பூசுவதுடன் சந்தனம், குங்குமத்தை திலகமாக இடுவதும் சிறப்பு தரும்.
அத்துடன் பானைக்குள் பசும்பாலும், நீரும் விட்டு நிரப்பி தூபதீபம் காட்ட வேண்டும். பின்னர் கற்பூர தீபத்தினால் அடுப்பில் நெருப்பை பற்ற வைக்க வேண்டும். பானையில் பால் பொங்கிவரும் போது ‘பொங்கலோ, பொங்கல்’ என்று குரல் எழுப்ப வேண்டும்.
பால் பொங்கியதும், பச்சரிசியை அள்ளி, சூரிய பகவானை வணங்கியபடி, பானையை மூன்று முறை சுற்றி, பானைக்குள் இட வேண்டும். பிறகு வெல்லம், கற்கண்டு, திராட்சை முதலியவற்றை இட வேண்டும். பொங்கல் தயாரானதும், 3 தலை வாழை இலையில் பொங்கலை வைத்து, பழங்கள மற்றும் கரும்பு படைத்து, தீபாராதனை காட்டி சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். கற்பூர தீபம் காட்டும் போது, குலதெய்வத்தையும், நம்முடைய முன்னோர்களையும் மனதில் நினைத்து வழிபடுவது சிறப்பான வாழ்வு தரும்.
தவத்தில் சிறந்தவர்களான காசிப முனிவருக்கும், அவரது மனைவி அதீதிக்கும் விசுவான் முதலான 12 பேர் பிறந்தனர். அதீதி புத்திரர்கள் என்பதால், இவர்கள் பன்னிரண்டு பேரும் ஆதித்யர் என்று அழைக்கப்பட்டார்கள்.
ஒவ்வொரு பூஜைக்கு முன்னரும், விக்னேஸ்வர பூஜை செய்வது அவசியம். புது மஞ்சளை அரைத்து அதனை பிள்ளையாராக பிடித்து வைக்க வேண்டும். மகர சங்கராந்தி அன்று சூரிய பகவானை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.
ராமபிரான், தினமும் சூரிய காயத்ரி மந்திரம், ஆதித்ய ஹிருத்ய ஸ்தோத்திரம் கூறி சூரிய பகவானை வழிபட்டார். அதன் பயனாக அவர் ராவணனை அழிக்கும் வல்லமை பெற்றார். இதே போல் மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் சூரிய வழிபாடு நடத்தியதன் பலனாக, வனவாசத்தின் போது அட்சயபாத்திரத்தை பெற்றனர். சூரிய வழிபாடு அனைத்து செல்வங்களையும் வழங்கும்.
ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று, தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது.
ஆனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி. பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர் ஒரு முறை வியாசரை தரிசித்தபோது அவரை வணங்கி "குருதேவா, துன்பங்கள் பலப்பல. அவை எப்போது எப்படி மனிதர்களை பாதிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. கலியுகத்திலோ, கேட்கவே வேண்டாம். அடை மழை போல, நேரம் காலம் பாராமல் அனைவரையும் படுத்தும். இந்த துன்பங்கள் நீங்கும்படியான ஒரு சுலபமான வழியைச் சொல்லுங்கள்'' என வேண்டினார்.
"தர்மபுத்திரா, எல்லாத் துன்பங்களையும் நீக்கக் கூடியது ஏகாதசி விரதம் மட்டுமே. ஏகாதசியன்று, உபவாசம் இருந்து பெருமானை பூஜிப்பதைத் தவிர சுலபமான வழி வேறெதுவும் இல்லை. சகல விதமான சாஸ்திரங்களும் இதைத் தான் சொல்கின்றன'' என்று பதில் சொன்னார் வியாசர்.
அருகில் இருந்து இதைக் கேட்ட பீமன், "உத்தமரான முனிவரே, என்னுடன் பிறந்தவர்கள் எல்லாம் ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். என் தாயும் மனைவியும்கூட ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் என்னையும் ஏகாதசி விரதம் இருக்க சொல்கிறார்கள் என்னால் செய்ய கூடியதா அது?
ஒரு வேளை சாப்பிட்டுவிட்டு, அடுத்த வேளை சாப்பிடாமல் இருப்பதே என்னால் முடியாது. என்னைப் போய் முறையாக உபவாசம் இருந்து ஏகாதசி விரதம் இரு என்றால் நடக்கக் கூடியதா இது. விருகம் என்னும் ஒரு தீ என் வயிற்றில் இருக்கிறது. (பீமனின் வயிற்றில் அதிகமான பசியைத் தூண்டும் இந்தத் தீ இருந்ததால் தான் அவன் விருகோதரன் என அழைக்கப்பட்டான்).
ஏராளமான உணவைப் போட்டால் ஒழிய, என் வயிற்றில் இருக்கும் நெருப்பு அடங்காது. வருடத்துக்கு ஒரே ஒரு நாள் என்னால் உபவாசம் இருக்க முடியும். எனவே எனக்குத் தகுந்தாற்போல நான் எல்லா விதமான ஏகாதசிகளின் பலனையும் பெரும் விதம் ஓர் ஏகாதசியை எனக்குச் சொல்லுங்கள்'' என வேண்டினான்.
"கவலைப்படாதே பீமா. உனக்காகவே அமைந்ததைப் போல ஒரு ஏகாதசி இருக்கிறது.
ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று, தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது. அந்த ஏகாதசி விரதத்தை நீ கடைப்பிடி'' என வழிகாட்டினார் வியாசர். வியாசரை வணங்கிய பீமன் நிர்ஜல ஏகாதசி அன்று தண்ணீர் கூடக் குடிக்காமல் விரதம் இருந்தான். மறுநாள் துவாதசி அன்று உணவு உண்டான்.
அன்று முதல் அந்த துவாதசி "பாண்டவ துவாதசி'' என்றும், பீமன் விரதம் இருந்த அந்த ஏகாதசி "பீம ஏகாதசி'' என்றும் அழைக்கப்படலாயிற்று. துன்பங்கள் அனைத்தையும் போக்கும் ஏகாதசி இது.
"தர்மபுத்திரா, எல்லாத் துன்பங்களையும் நீக்கக் கூடியது ஏகாதசி விரதம் மட்டுமே. ஏகாதசியன்று, உபவாசம் இருந்து பெருமானை பூஜிப்பதைத் தவிர சுலபமான வழி வேறெதுவும் இல்லை. சகல விதமான சாஸ்திரங்களும் இதைத் தான் சொல்கின்றன'' என்று பதில் சொன்னார் வியாசர்.
அருகில் இருந்து இதைக் கேட்ட பீமன், "உத்தமரான முனிவரே, என்னுடன் பிறந்தவர்கள் எல்லாம் ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். என் தாயும் மனைவியும்கூட ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் என்னையும் ஏகாதசி விரதம் இருக்க சொல்கிறார்கள் என்னால் செய்ய கூடியதா அது?
ஒரு வேளை சாப்பிட்டுவிட்டு, அடுத்த வேளை சாப்பிடாமல் இருப்பதே என்னால் முடியாது. என்னைப் போய் முறையாக உபவாசம் இருந்து ஏகாதசி விரதம் இரு என்றால் நடக்கக் கூடியதா இது. விருகம் என்னும் ஒரு தீ என் வயிற்றில் இருக்கிறது. (பீமனின் வயிற்றில் அதிகமான பசியைத் தூண்டும் இந்தத் தீ இருந்ததால் தான் அவன் விருகோதரன் என அழைக்கப்பட்டான்).
ஏராளமான உணவைப் போட்டால் ஒழிய, என் வயிற்றில் இருக்கும் நெருப்பு அடங்காது. வருடத்துக்கு ஒரே ஒரு நாள் என்னால் உபவாசம் இருக்க முடியும். எனவே எனக்குத் தகுந்தாற்போல நான் எல்லா விதமான ஏகாதசிகளின் பலனையும் பெரும் விதம் ஓர் ஏகாதசியை எனக்குச் சொல்லுங்கள்'' என வேண்டினான்.
"கவலைப்படாதே பீமா. உனக்காகவே அமைந்ததைப் போல ஒரு ஏகாதசி இருக்கிறது.
ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று, தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது. அந்த ஏகாதசி விரதத்தை நீ கடைப்பிடி'' என வழிகாட்டினார் வியாசர். வியாசரை வணங்கிய பீமன் நிர்ஜல ஏகாதசி அன்று தண்ணீர் கூடக் குடிக்காமல் விரதம் இருந்தான். மறுநாள் துவாதசி அன்று உணவு உண்டான்.
அன்று முதல் அந்த துவாதசி "பாண்டவ துவாதசி'' என்றும், பீமன் விரதம் இருந்த அந்த ஏகாதசி "பீம ஏகாதசி'' என்றும் அழைக்கப்படலாயிற்று. துன்பங்கள் அனைத்தையும் போக்கும் ஏகாதசி இது.
உணவு உண்ணாமலிருத்தலும் மிதமாக உணவை உண்பதும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை உண்பதுமாகிய உணவு நியமமே ‘விரதம்’ என அழைக்கப்படுகிறது.
விரதம் என்பதற்கு ஒன்றையே எண்ணி அதில் மனம் இலயித்திருத்தல் என்பது பொருள். வரித்தல் என்பதிலிருந்தே விரதம் என்ற சொல் பிறந்தது என்று கூறலாம். வரித்தல் என்பதற்கு கை கொள்ளுதல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்பது பொருள்.
உணவு உண்ணாமலிருத்தலும் மிதமாக உணவை உண்பதும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை உண்பதுமாகிய உணவு நியமமே ‘விரதம்’ என அழைக்கப்படுகிறது. ஆனால் இது விரதத்தின் முதற் நிலை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு இருத்தலே முழுமையான விரதம் என்று கூற முடியாது. மனம் அடங்கக் கற்பதே விரதத்தின் முதற்படியாகும்.
உணவை ஒழித்து இருப்பது விரதம் அல்ல. எண்ணங்களை ஒடுக்கி, சிந்தைகள் ஏதும் இல்லாமல் இருப்பதே ‘விரதம்’ என்கிறார் ரமணர். குரங்கு போல் அலைந்து திரியும் மனத்தை அடக்கி நிறுத்தி இறைவன் திருவடியில் நிலைத்திருத்தலே சிறப்பான விரதத்தின் முதற்படி என்று கூறலாம்.
உணவு உண்ணாமலிருத்தலும் மிதமாக உணவை உண்பதும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை உண்பதுமாகிய உணவு நியமமே ‘விரதம்’ என அழைக்கப்படுகிறது. ஆனால் இது விரதத்தின் முதற் நிலை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு இருத்தலே முழுமையான விரதம் என்று கூற முடியாது. மனம் அடங்கக் கற்பதே விரதத்தின் முதற்படியாகும்.
உணவை ஒழித்து இருப்பது விரதம் அல்ல. எண்ணங்களை ஒடுக்கி, சிந்தைகள் ஏதும் இல்லாமல் இருப்பதே ‘விரதம்’ என்கிறார் ரமணர். குரங்கு போல் அலைந்து திரியும் மனத்தை அடக்கி நிறுத்தி இறைவன் திருவடியில் நிலைத்திருத்தலே சிறப்பான விரதத்தின் முதற்படி என்று கூறலாம்.
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவன் கோவில்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும், நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாகும்.
திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, ‘நட்சத்திரங்களில் நான் திருவாதிரை’ என்று கூறியிருப்பதில் இருந்தே, அந்த நட்சத்திரத்திற்கான சிறப்பை அறியலாம். மார்கழி மாதம் என்பதே சிறப்பான மாதம் தான். அந்த மாதத்தில் வரும் திருவாதிரை மேலும் சிறப்பு சேர்ப்பதாகும். ஒரு சிறப்பு, மற்றொரு சிறப்புடன் சேரும்போது, அதன் மதிப்பு பன்மடங்காகும்.
ஆகவே மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவன் கோவில்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும், நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாகும். நடராஜரின் ஆருத்ரா தரிசனம், அவரது ஐந்தொழில்களான ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே நடத்தப்பட்டு வருகிறது.
ஒரு நாள் மகாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருந்தார். விஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்து தனது சேவையை செய்து கொண்டிருந்தாள் லட்சுமிதேவி. கண்களை மூடியபடி இருந்த திருமால் திடீரென்று, ‘ஆகா! அற்புதம்! அற்புதமான காட்சி!’ என்று மனமுருகி சத்தம் போட்டார். அவரது இந்த நிலையைக் கண்டு ஆதிசேஷனும், மகாலட்சுமி தேவியும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர்.
கண்விழித்து பார்த்த மகாவிஷ்ணுவிடம், தங்களின் சந்தேகத்தை ஆதிசேஷனும், மகாலட்சுமியும் கேட்டனர். ‘சுவாமி! என்றும் இல்லாத திருநாளாக இன்று நீங்கள் மனமுருக அற்புதம் என்று கூறியதன் பொருள் என்ன?’ என்றனர்.
‘திருவாதிரை நாளான இன்று சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை என்னுடைய ஞானக் கண்ணால் பார்த்தேன். அதைக் கண்டு மெய்சிலிர்த்ததால்தான் அவ்வாறு கூறினேன்’ என்றார் மகாவிஷ்ணு. மேலும் அவர், சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றி சொல்லச் சொல்ல ஆதிசேஷனுக்கும் கூட உடல் சிலிர்த்தது. ஆதிசேஷனின் பரவசத்தை கண்ணுற்ற மகாவிஷ்ணு, ‘ஆதிசேஷா! உனது ஆசை எனக்குப் புரிகிறது. நீயும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை பார்க்க வேண்டும் என்றால், பூவுலகில் பிறந்து, தவம் இருக்க வேண்டும். அப்போது அந்த அற்புத நடனத்தை நீ காணலாம். இப்போதே புறப்பட்டு போய் வா!’ என்று கூறி விடை கொடுத்தார் மகாவிஷ்ணு.
ஆதிசேஷனும் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார். அவருடைய உடல் அமைப்பு, இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக இருந்தது. பதஞ்சலி முனிவர் பலகாலம் தவம் இருந்து வந்ததன் காரணமாக, ஒரு நாள் திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். அன்றைய தினமே ஆருத்ரா தரிசனம் ஆகும்.
திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நிவேதனமாக களி செய்து படைப்பார்கள். ‘களி’ என்பது ஆனந்தம் என்று பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனம் ஆகும்.
மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது. விபூலன், வியாக்ரபாதர் போன்றவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து பலன் பெற்றுள்ளனர்.
ஆகவே மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவன் கோவில்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும், நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாகும். நடராஜரின் ஆருத்ரா தரிசனம், அவரது ஐந்தொழில்களான ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே நடத்தப்பட்டு வருகிறது.
ஒரு நாள் மகாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருந்தார். விஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்து தனது சேவையை செய்து கொண்டிருந்தாள் லட்சுமிதேவி. கண்களை மூடியபடி இருந்த திருமால் திடீரென்று, ‘ஆகா! அற்புதம்! அற்புதமான காட்சி!’ என்று மனமுருகி சத்தம் போட்டார். அவரது இந்த நிலையைக் கண்டு ஆதிசேஷனும், மகாலட்சுமி தேவியும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர்.
கண்விழித்து பார்த்த மகாவிஷ்ணுவிடம், தங்களின் சந்தேகத்தை ஆதிசேஷனும், மகாலட்சுமியும் கேட்டனர். ‘சுவாமி! என்றும் இல்லாத திருநாளாக இன்று நீங்கள் மனமுருக அற்புதம் என்று கூறியதன் பொருள் என்ன?’ என்றனர்.
‘திருவாதிரை நாளான இன்று சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை என்னுடைய ஞானக் கண்ணால் பார்த்தேன். அதைக் கண்டு மெய்சிலிர்த்ததால்தான் அவ்வாறு கூறினேன்’ என்றார் மகாவிஷ்ணு. மேலும் அவர், சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றி சொல்லச் சொல்ல ஆதிசேஷனுக்கும் கூட உடல் சிலிர்த்தது. ஆதிசேஷனின் பரவசத்தை கண்ணுற்ற மகாவிஷ்ணு, ‘ஆதிசேஷா! உனது ஆசை எனக்குப் புரிகிறது. நீயும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை பார்க்க வேண்டும் என்றால், பூவுலகில் பிறந்து, தவம் இருக்க வேண்டும். அப்போது அந்த அற்புத நடனத்தை நீ காணலாம். இப்போதே புறப்பட்டு போய் வா!’ என்று கூறி விடை கொடுத்தார் மகாவிஷ்ணு.
ஆதிசேஷனும் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார். அவருடைய உடல் அமைப்பு, இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக இருந்தது. பதஞ்சலி முனிவர் பலகாலம் தவம் இருந்து வந்ததன் காரணமாக, ஒரு நாள் திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். அன்றைய தினமே ஆருத்ரா தரிசனம் ஆகும்.
திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நிவேதனமாக களி செய்து படைப்பார்கள். ‘களி’ என்பது ஆனந்தம் என்று பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனம் ஆகும்.
மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது. விபூலன், வியாக்ரபாதர் போன்றவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து பலன் பெற்றுள்ளனர்.
பிறவா நிலை அருளும் வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.
தாயிற் சிறந்ததோர் கோவில் இல்லை; காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை; கங்கையை விட சிறந்த தீர்த்தம் இல்லை; ஏகாதசியை விட சிறந்த விரதம் இல்லை; என புராணங்கள் கூறுகின்றன.
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவத் கீதையில் கண்ணபிரான் கூறி உள்ளார். இதனால் மார்கழி மாதம் பெருமைக்குரிய மாதமாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் (சுக்ல-கிருஷ்ண) வருகின்றன. வருடத்திற்கு 24 ஏகாதசிகள். இதில் தனுர் மாதத்தில் (மார்கழி) வளர் பிறையில் 11-வது நாளன்று வரும் ஏகாதசி தான் வைகுண்ட ஏகாதசி. இதனை பெரிய ஏகாதசி, மோட்ச ஏகாதசி என்றும் அழைப்பர்.
மனிதன் பிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதையே விரும்புகிறான். அந்த நோக்கத்தை அடைய செய்யக்கூடியது இந்த ஏகாதசி விரதம்.
“வைகுந்தம் புகுவது மன்னவர் விதியே” என்பதற்கேற்ப ஜீவாத்மா, பரமாத்மாவோடு சேர்வது என்பது தான் ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடைபெறுவது தான் பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறப்பும், வைகுண்ட ஏகாதசி திருநாளும்.
வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும். சொர்க்கவாசலின் கீழ் விரஜா நதி ஓடுவதாக ஐதீகம். பகவான் சொர்க்க வாசலை கடந்து செல்லும்போது அவரை தொடர்ந்து செல்லும் பக்தர்கள் விரஜா நதியில் நீராடிய பலனை அடைவதாகவும், அதன்மூலம் பாவங்கள் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்து சொர்க்க வாசல் வழியாக சென்று மகா விஷ்ணுவை துதிப்போருக்கு இந்த பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு ஆகியவற்றை பகவான் வழங்குவதோடு மறு பிறவியில் வைகுண்டபேறு (சொர்க்கம்) வழங்குவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
ஏகாதசி மரணம், துவாதசி தகனம் என்ற சொல் வழக்குக்கேற்ப ஏகாதசி திதியில் ஒருவர் காலமாவதும், அடுத்த திதியாகிய துவாதசியில் உடல் தகனம் செய்வதும் வெகு புண்ணியம் என புராண நூல்கள் கூறுகின்றன. 6 வயது முதல் 60 வயது வரை உள்ளஆண், பெண்கள் அனைவரும் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கலாம். ஏகாதசியன்று உபவாசமிருந்து மகா விஷ்ணுவை வழிபட்டு துவாதசியன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு ஒருவருக்கு ஆடை தானம், அன்னதானம், தாம்பூலம், தட்சணை வழங்குவது மிகச்சிறந்த பலனை அளிக்கும்.
ராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர். சுவாமியும் பிரம்மா மற்றும் தேவர்களுக்கு தரிசனம் அளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெறவேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது. துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்கு திருக்காட்சி கொடுத்து அவர்களுக்கு அருளாசி புரிந்தாள். அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை துதிப்போருக்கு அனைத்து நலன்களையும் பகவான் வழங்கி வருகிறார். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புடையது. அங்கு வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படும். ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்து நாட்கள் பகல் பத்து என்றும் அடுத்த பத்து நாட்களை இராப்பத்து என்றும் கொண்டாடுகிறார்கள்.
கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி பாடல்களை பெருமாள் முன் பாடி காட்டினார். இதனால் ஆனந்தம் அடைந்த பெருமாள், திருமங்கை ஆழ்வாரிடம் வேண்டிய வரத்தை கேள் என்றார். அதற்கு அவர் ஏகாதசி விழாவில் வேதங்களைக் கேட்டு மகிழ்வது போல் தமிழ் மொழியில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி பாடல்களை கேட்டருள வேண்டும் என்றார். அப்படியே ஆகட்டும் என்று பெருமாளும் வரமளித்தார்.
திருமங்கை ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் பாடிய திருமொழி பாடல்களையும் மற்ற ஆழ்வார்கள் பாடிச் சென்ற பாடல்களையும் பெருமாள் கேட்டருளும் விதமாக வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடக்கமாக பகல் பத்து உற்சவம் கொண்டாடப்படுகிறது.
பகல் பத்தில் நம்மாழ்வாரின் பாசுரங்களை தவிர திருமங்கையாழ்வாரின் திருமொழிப்பாசுரங்களும் ஓதப்படும். இதனால் பகல்பத்து திருவிழா திருமொழித்திருவிழா என்றும் பெயர் பெற்றது. இராப்பத்து காலங்களில் நம்மாழ்வரின் திருவாய்மொழி பாசுரங்கள் ஓதப்படுவதால் திருவாய்மொழித்திருவிழா என அழைக்கப்படுகிறது. இந்த உற்சவத்திற்கு திரு அத்யயன உற்சவம் என்று பெயர். திருமங்கையாழ்வார், நாதமுனிவர், ராமானுஜர் ஆகியோரால் ஆகமவிதிப்படி நடைபெறும் இந்த திருவிழாவில் 20-ம் நாள் நம்மாழ்வார் மோட்சமடைவதாகவும், பின்னர் பக்தர்கள் வேண்டுகோளின் படி நம்மாழ்வாரை பெருமாள் நமக்கே தந்தருள்வதாகவும் தத்ரூபமாக பாவனை மூலம் நடத்தி காட்டப்படும்.
இந்த திருவிழா நாட்களில் விலை உயர்ந்த திரு ஆபரணங்கள் உள்பட பல்வேறு அலங்காரங்களுடன் தினமும் காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் அபிநயத்துடன் பாடும் பாடல்களை கேட்டருள்வார். பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாள் காலை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருள்வார்.
இராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். பெருமாள் வடக்குவாசல் வழியாக எழுந்தருள்வார். அதை தரிசிப்பவர்களுக்கும் அதன் வழியாக வருபவர்களுக்கும் பெருமாள் பிறவி பிணியில் இருந்து விடுவித்து மோட்ச நிலையை தந்தருள்வார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவத் கீதையில் கண்ணபிரான் கூறி உள்ளார். இதனால் மார்கழி மாதம் பெருமைக்குரிய மாதமாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் (சுக்ல-கிருஷ்ண) வருகின்றன. வருடத்திற்கு 24 ஏகாதசிகள். இதில் தனுர் மாதத்தில் (மார்கழி) வளர் பிறையில் 11-வது நாளன்று வரும் ஏகாதசி தான் வைகுண்ட ஏகாதசி. இதனை பெரிய ஏகாதசி, மோட்ச ஏகாதசி என்றும் அழைப்பர்.
மனிதன் பிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதையே விரும்புகிறான். அந்த நோக்கத்தை அடைய செய்யக்கூடியது இந்த ஏகாதசி விரதம்.
“வைகுந்தம் புகுவது மன்னவர் விதியே” என்பதற்கேற்ப ஜீவாத்மா, பரமாத்மாவோடு சேர்வது என்பது தான் ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடைபெறுவது தான் பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறப்பும், வைகுண்ட ஏகாதசி திருநாளும்.
வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும். சொர்க்கவாசலின் கீழ் விரஜா நதி ஓடுவதாக ஐதீகம். பகவான் சொர்க்க வாசலை கடந்து செல்லும்போது அவரை தொடர்ந்து செல்லும் பக்தர்கள் விரஜா நதியில் நீராடிய பலனை அடைவதாகவும், அதன்மூலம் பாவங்கள் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்து சொர்க்க வாசல் வழியாக சென்று மகா விஷ்ணுவை துதிப்போருக்கு இந்த பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு ஆகியவற்றை பகவான் வழங்குவதோடு மறு பிறவியில் வைகுண்டபேறு (சொர்க்கம்) வழங்குவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
ஏகாதசி மரணம், துவாதசி தகனம் என்ற சொல் வழக்குக்கேற்ப ஏகாதசி திதியில் ஒருவர் காலமாவதும், அடுத்த திதியாகிய துவாதசியில் உடல் தகனம் செய்வதும் வெகு புண்ணியம் என புராண நூல்கள் கூறுகின்றன. 6 வயது முதல் 60 வயது வரை உள்ளஆண், பெண்கள் அனைவரும் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கலாம். ஏகாதசியன்று உபவாசமிருந்து மகா விஷ்ணுவை வழிபட்டு துவாதசியன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு ஒருவருக்கு ஆடை தானம், அன்னதானம், தாம்பூலம், தட்சணை வழங்குவது மிகச்சிறந்த பலனை அளிக்கும்.
ராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர். சுவாமியும் பிரம்மா மற்றும் தேவர்களுக்கு தரிசனம் அளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெறவேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது. துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்கு திருக்காட்சி கொடுத்து அவர்களுக்கு அருளாசி புரிந்தாள். அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை துதிப்போருக்கு அனைத்து நலன்களையும் பகவான் வழங்கி வருகிறார். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புடையது. அங்கு வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படும். ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்து நாட்கள் பகல் பத்து என்றும் அடுத்த பத்து நாட்களை இராப்பத்து என்றும் கொண்டாடுகிறார்கள்.
கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி பாடல்களை பெருமாள் முன் பாடி காட்டினார். இதனால் ஆனந்தம் அடைந்த பெருமாள், திருமங்கை ஆழ்வாரிடம் வேண்டிய வரத்தை கேள் என்றார். அதற்கு அவர் ஏகாதசி விழாவில் வேதங்களைக் கேட்டு மகிழ்வது போல் தமிழ் மொழியில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி பாடல்களை கேட்டருள வேண்டும் என்றார். அப்படியே ஆகட்டும் என்று பெருமாளும் வரமளித்தார்.
திருமங்கை ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் பாடிய திருமொழி பாடல்களையும் மற்ற ஆழ்வார்கள் பாடிச் சென்ற பாடல்களையும் பெருமாள் கேட்டருளும் விதமாக வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடக்கமாக பகல் பத்து உற்சவம் கொண்டாடப்படுகிறது.
பகல் பத்தில் நம்மாழ்வாரின் பாசுரங்களை தவிர திருமங்கையாழ்வாரின் திருமொழிப்பாசுரங்களும் ஓதப்படும். இதனால் பகல்பத்து திருவிழா திருமொழித்திருவிழா என்றும் பெயர் பெற்றது. இராப்பத்து காலங்களில் நம்மாழ்வரின் திருவாய்மொழி பாசுரங்கள் ஓதப்படுவதால் திருவாய்மொழித்திருவிழா என அழைக்கப்படுகிறது. இந்த உற்சவத்திற்கு திரு அத்யயன உற்சவம் என்று பெயர். திருமங்கையாழ்வார், நாதமுனிவர், ராமானுஜர் ஆகியோரால் ஆகமவிதிப்படி நடைபெறும் இந்த திருவிழாவில் 20-ம் நாள் நம்மாழ்வார் மோட்சமடைவதாகவும், பின்னர் பக்தர்கள் வேண்டுகோளின் படி நம்மாழ்வாரை பெருமாள் நமக்கே தந்தருள்வதாகவும் தத்ரூபமாக பாவனை மூலம் நடத்தி காட்டப்படும்.
இந்த திருவிழா நாட்களில் விலை உயர்ந்த திரு ஆபரணங்கள் உள்பட பல்வேறு அலங்காரங்களுடன் தினமும் காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் அபிநயத்துடன் பாடும் பாடல்களை கேட்டருள்வார். பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாள் காலை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருள்வார்.
இராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். பெருமாள் வடக்குவாசல் வழியாக எழுந்தருள்வார். அதை தரிசிப்பவர்களுக்கும் அதன் வழியாக வருபவர்களுக்கும் பெருமாள் பிறவி பிணியில் இருந்து விடுவித்து மோட்ச நிலையை தந்தருள்வார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ‘ஏகாதசி விரதம்’. நாளை எப்படி விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட வேண்டும் என்பதை பார்க்கலாம்.
வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று, ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும். அடுத்த நாள் ஏகாதசி அன்று முழு நாளும் உபவாசம் இருந்து விஷ்ணுவை நினைத்து தியானிக்க வேண்டும். அவர் புகழ்பாடும் கீர்த்தனைகளை பாராயணம் செய்ய வேண்டும்.
அன்றைய தினம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து இறைவனை துதி செய்ய வேண்டும். பிறகு மறுநாள் காலை துவாதசி அன்று, பகவானின் நாமத்தைச் சொல்லியபடி துளசி தீர்த்தத்தை அருந்தி, உபவாசத்தை முடித்துக் கொள்ளலாம். தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய மூன்று நாட்களும் விரதம் இருப்ப வர்களின் சிந்தனையில், இறைவனின் நினைப்பு மட்டுமே இருக்க வேண்டும்.
விரதம் இருப்பவர்கள் தங்கள் பணி களைச் செய்யும் வேளைத் தவிர மற்ற நேரங்களில் இறைவனின் புகழை பாடியபடியே இருக்க வேண்டும். ஏகாதசி அன்று விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபடலாம். அல்லது வீட்டில் இருந்தபடியே இறைவனின் திருவுருவ படத்திற்கு மலர் அலங்காரம் செய்து வழிபாடு செய்யலாம்.
இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். மேலும் முக்திக்கான வழியை அடைவீர்கள்.
அன்றைய தினம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து இறைவனை துதி செய்ய வேண்டும். பிறகு மறுநாள் காலை துவாதசி அன்று, பகவானின் நாமத்தைச் சொல்லியபடி துளசி தீர்த்தத்தை அருந்தி, உபவாசத்தை முடித்துக் கொள்ளலாம். தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய மூன்று நாட்களும் விரதம் இருப்ப வர்களின் சிந்தனையில், இறைவனின் நினைப்பு மட்டுமே இருக்க வேண்டும்.
விரதம் இருப்பவர்கள் தங்கள் பணி களைச் செய்யும் வேளைத் தவிர மற்ற நேரங்களில் இறைவனின் புகழை பாடியபடியே இருக்க வேண்டும். ஏகாதசி அன்று விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபடலாம். அல்லது வீட்டில் இருந்தபடியே இறைவனின் திருவுருவ படத்திற்கு மலர் அலங்காரம் செய்து வழிபாடு செய்யலாம்.
இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். மேலும் முக்திக்கான வழியை அடைவீர்கள்.
இந்துமதத்தில் இருக்கும் பல்வேறு கடவுள்களுக்கும் பல விரதங்களும், வழிபாடுகளும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம்.
இந்துமதத்தில் இருக்கும் பல்வேறு கடவுள்களுக்கும் பல விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவை கடவுள் வழிபாட்டிற்கேற்ப மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.
விநாயக விரதங்கள் :
விநாயக சதுர்த்தி
ஆவணி சதுர்த்தி
சங்கடஹர சதுர்த்தி விரதம்
விநாயக சட்டி விரதம்
சிவ விரதங்கள் :
ஆனி உத்தரம்
திருவாதிரை
சிவராத்திரி
பிரதோஷ விரதம்
கேதாரகௌரி விரதம்
சக்தி விரதங்கள் :
நவராத்திரி
வரலட்சுமி நோன்பு
ஆடிப்பூரம்
ஆடிச் செவ்வாய்
பங்குனித் திங்கள்
மாசி மகம்
கந்த விரதங்கள் :
கந்த சஷ்டி
ஆடிக்கிருத்திகை
வைகாசி விசாகம்
தைப்பூசம்
விஷ்ணு விரதங்கள் :
ஏகாதசி விரதம்
விநாயக விரதங்கள் :
விநாயக சதுர்த்தி
ஆவணி சதுர்த்தி
சங்கடஹர சதுர்த்தி விரதம்
விநாயக சட்டி விரதம்
சிவ விரதங்கள் :
ஆனி உத்தரம்
திருவாதிரை
சிவராத்திரி
பிரதோஷ விரதம்
கேதாரகௌரி விரதம்
சக்தி விரதங்கள் :
நவராத்திரி
வரலட்சுமி நோன்பு
ஆடிப்பூரம்
ஆடிச் செவ்வாய்
பங்குனித் திங்கள்
மாசி மகம்
கந்த விரதங்கள் :
கந்த சஷ்டி
ஆடிக்கிருத்திகை
வைகாசி விசாகம்
தைப்பூசம்
விஷ்ணு விரதங்கள் :
ஏகாதசி விரதம்
அஷ்டமி விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும். இந்த விரதம் பற்றி விரிவாக பார்க்கலாம்.
அஷ்டமி என்பது, எட்டாவது திதி நாள். அதிலும் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. அஷ்டமி விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும்.
கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் நிகழ்ந்ததாக சத்ருத்ர சம்ஹிதாவின் 8-வது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. துன்பங்களும், துயரங்களும் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையில் நமக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகவே பைரவர் வழிபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நமது வழிபாடு களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகிறார்.
ஸ்ரீ கால பைரவர் என்றால் பரபிரம்மம் என்று பொருளாகும். பாவங்களிலிருந்து விடுபடுவதே பைரவம் என்ற பிரம்ம நிலையாகும். நாம் அதனிடம் இருந்தே பிறக்கிறோம். கடைசியில் அதனிடமே சென்று மறைகிறோம். பைரவர் என்றால் பயமில்லாதவர், மற்றும் பக்தர்களின் பாவத்தை நீக்குபவர் என்றும் பொருள். ஜனன ஜாதகத்தில் அமைந்துள்ள அனைத்து கிரக தோஷங்களையும் நிவர்த்தி செய்ய வல்லது பைரவர் வழிபாடாகும்.
ஏனெனில் பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடங்கியுள்ளது. அந்தக் காலச்சக்கரத்தினை இயக்கி நவகிரகங்களை ஆட்சி செய்பவர் பைரவரே. பைரவர் மும்மூர்த்தி ஸ்வரூபமானவர் என்று வேதங்கள் கூறுகின்றன. இறைவனின் அருவ வழிபாட்டு முறை- சிவலிங்கம், இறைவனின் திருஉருவம் வழிபாட்டு முறை- ஸ்ரீ கால பைரவ ஸ்வரூபம், இதுவே பரப்பிரம்மம் தத்துவம், ஸ்ரீ சுவர்ணாகர்ஷண பைரவர், சிவபெருமானின் பிரதி பிம்பம், சிவனுடைய தியான ஸ்வரூபம் சிவலிங்கம், இறைவன் கண்விழி திறந்தால் கால பைரவர் ஸ்வரூபம், இதுவே ஓங்காரம் தத்துவம்.
பைரவரை காலையில் வழிபட அனைத்து நோய்களும் நீங்கும், பகலில் வழிபட விரும்பியது எல்லாம் கிடைக்கும்.மாலையில் வழிப்பட செய்த பாவங்கள் விலகும், இரவில் வழிபட முக்தி நிலை கிட்டும். அகந்தை கொண்டு தவறு செய்பவர்கள் தேவர்களாகவே இருப்பினும் இறை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளில் இருந்தும் நல்லவர்கள் போற்றிக் காப்பாற்றப்படுவார்கள் என்பதே பைரவர் திருக்கோலம் உணர்த்தும் தத்துவம் ஆகும்.
ஆதி காலத்தில் நம் முன்னோர்கள் செய்த வழிபாட்டில் திருக்கோவில்களிலும் அனைத்து வீடுகளிலும் பைரவர் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இப்பொழுது குறைந்து விட்டது. ஸ்ரீபைரவரை போல பாசமும் - நேசமும் உடையவர் வேறுயாருமில்லை, பைரவரை உபாசனை செய்தால் அடுத்த பிறவி இல்லை. ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டால் வாழ்க்கையில் மேன்மை பெறலாம்.
கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் நிகழ்ந்ததாக சத்ருத்ர சம்ஹிதாவின் 8-வது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. துன்பங்களும், துயரங்களும் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையில் நமக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகவே பைரவர் வழிபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நமது வழிபாடு களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகிறார்.
ஸ்ரீ கால பைரவர் என்றால் பரபிரம்மம் என்று பொருளாகும். பாவங்களிலிருந்து விடுபடுவதே பைரவம் என்ற பிரம்ம நிலையாகும். நாம் அதனிடம் இருந்தே பிறக்கிறோம். கடைசியில் அதனிடமே சென்று மறைகிறோம். பைரவர் என்றால் பயமில்லாதவர், மற்றும் பக்தர்களின் பாவத்தை நீக்குபவர் என்றும் பொருள். ஜனன ஜாதகத்தில் அமைந்துள்ள அனைத்து கிரக தோஷங்களையும் நிவர்த்தி செய்ய வல்லது பைரவர் வழிபாடாகும்.
ஏனெனில் பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடங்கியுள்ளது. அந்தக் காலச்சக்கரத்தினை இயக்கி நவகிரகங்களை ஆட்சி செய்பவர் பைரவரே. பைரவர் மும்மூர்த்தி ஸ்வரூபமானவர் என்று வேதங்கள் கூறுகின்றன. இறைவனின் அருவ வழிபாட்டு முறை- சிவலிங்கம், இறைவனின் திருஉருவம் வழிபாட்டு முறை- ஸ்ரீ கால பைரவ ஸ்வரூபம், இதுவே பரப்பிரம்மம் தத்துவம், ஸ்ரீ சுவர்ணாகர்ஷண பைரவர், சிவபெருமானின் பிரதி பிம்பம், சிவனுடைய தியான ஸ்வரூபம் சிவலிங்கம், இறைவன் கண்விழி திறந்தால் கால பைரவர் ஸ்வரூபம், இதுவே ஓங்காரம் தத்துவம்.
பைரவரை காலையில் வழிபட அனைத்து நோய்களும் நீங்கும், பகலில் வழிபட விரும்பியது எல்லாம் கிடைக்கும்.மாலையில் வழிப்பட செய்த பாவங்கள் விலகும், இரவில் வழிபட முக்தி நிலை கிட்டும். அகந்தை கொண்டு தவறு செய்பவர்கள் தேவர்களாகவே இருப்பினும் இறை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளில் இருந்தும் நல்லவர்கள் போற்றிக் காப்பாற்றப்படுவார்கள் என்பதே பைரவர் திருக்கோலம் உணர்த்தும் தத்துவம் ஆகும்.
ஆதி காலத்தில் நம் முன்னோர்கள் செய்த வழிபாட்டில் திருக்கோவில்களிலும் அனைத்து வீடுகளிலும் பைரவர் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இப்பொழுது குறைந்து விட்டது. ஸ்ரீபைரவரை போல பாசமும் - நேசமும் உடையவர் வேறுயாருமில்லை, பைரவரை உபாசனை செய்தால் அடுத்த பிறவி இல்லை. ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டால் வாழ்க்கையில் மேன்மை பெறலாம்.






