என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- முதல் பன்னிரண்டு அடிகளில் அர்ச்சனை திருப்புகழில் முருகப் பெருமானின் பராக்கிரமம், அழகு, உறவு கூறப்படுகின்றன.
- பின் பன்னிரண்டு அடிகளில் சிறுவாபுரியின் செல்வ சிறப்பு அழகு, பெருமை ஆகியவையும் கூறப்படுகின்றன.
அருணகிரிநாதர் சிறுவாபுரி முருகனைப் போற்றிப் பாடி இருக்கும் நான்கு திருப்புகழையும், அதில் மறை பொருளாகச் சொல்லி இருக்கும் பிரார்த்தனைகளையும் அதன்மூலம் நாம் பயன்பெறும் முறைகளையும் இங்கே காணலாம்.
சீதள வாரிஜ பாதா! நமோநம
நாரத கீத விநோதா நமோநம
சேவல மாமயில் ப்ரீதா! நமோநம - மறைதேடுஞ்
சேகரமான ப்ரதாபா! நமோநம
ஆகமசார சொரூப நமோநம
தேவர்கள் சேனைமகீபா! நமோநம- கதிதோயப்
பாதக நீவுகுடாரா! நமோநம
மாவசு ரேசர்கடோரா நமோநம
பாரினி லேஜய வீரா! நமோநம- மலைமாது
பார்வதி யாள்தரு பாலா! நமோநம
நாவல ஞான மனோலா நமோநம
பால குமார சுவாமி! நமோநம- அருள்தாராய்
போதக மாமுகன் நேரான சோதர
நீறணி வேணியர் நேயா! நமோநம
பூமக ளார்மரு கேசா மகோததி- இகல்சூரா
ேபாதக மாமறை ஞான! தயாகரா!
தேனவிழ் நிபநறா வாரு மார்பக
பூரணி மாமதி போல் ஆறு மாமுக!- முருகேசா
மாதவர் தேவர்களோடேமுராரியும்
மாமலர் மீதுறை வேதாயு மேபுகழ்
மாநிலம் ஏழினும் மேலான நாயக!- வடிவேலா
வானவர் ஊரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வே! சுராதிபர்- பெருமாளே
இந்த அர்ச்சனை திருப்புகழை பாடும் போது பொருளை உணர்ந்து நமோ நம என முடியும் போது, மலர்களை சிறுவை பால சுப்பிரமணியனின் திருவடிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
முதல் பன்னிரண்டு அடிகளில் அர்ச்சனை திருப்புகழில் முருகப் பெருமானின் பராக்கிரமம், அழகு, உறவு கூறப்படுகின்றன.
பின் பன்னிரண்டு அடிகளில் சிறுவாபுரியின் செல்வ சிறப்பு அழகு, பெருமை ஆகியவையும் கூறப்படுகின்றன.
இந்த வரிகளை பாடும் போது முருகனை உணர்ந்து வேண்டி, அவனருளால் எல்லா செல்வங்களையும் பெற பிரார்த்தனை செய்ய வேண்டும்.
- மூன்றாவது திருப்புகழில் மானிடப்பிறப்பின் துன்பம் எல்லாம் நீங்குவதற்கு வழிகூறுகிறார் அருணகிரி நாதர்.
- நான்காவது திருப்புகழில் ‘ஜெயமதான நகர்’ என்று சிறுவையே வெற்றி கொண்ட நகரம் என்கிறார்.
இரண்டாவது திருப்புகழ் அர்ச்சனை திருப்புகழாக இருப்பது சிறப்பு.
பழனிக்கு 'நாதவிந்து கலாதி நமோ நம' என்றும் திருப்புகழைப்போல் சிறுவைக்கு 'சீதள வாரிஜ பாதா! நமோ நம' எனும் திருப்புகழை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
அர்ச்சனை திருப்புகழ் 6-ல் சரணாகதியின் மேன்மையான முருகனின் பாத சரணத்தைக் குறித்து சிறுவைக்கு எழுதி இருப்பது சிறப்பு.
'வானவர் ஊரினும் வீறாகில் அளகாபுரி வாழ்வினும் மேலாக திருவாழ் சிறுவாபுரி வாழ்வே சுதாரிபர் பெருமாளே எனப்பாடி இங்கு வருபவர்கள் தேவேந்திர பட்டணத்தை காட்டிலும் வளமாக வாழ்வர் என அழுத்தம் திருத்தமாக எடுத்துச்சொல்கிறார்.
மூன்றாவது திருப்புகழில் மானிடப்பிறப்பின் துன்பம் எல்லாம் நீங்குவதற்கு வழிகூறுகிறார் அருணகிரி நாதர்.
நான்காவது திருப்புகழில் 'ஜெயமதான நகர்' என்று சிறுவையே வெற்றி கொண்ட நகரம் என்கிறார்.
ஜெயமதான நகர் அளகை போல வளமிகுந்த சிறுவைமேலி வரமிருந்த பெருமாளே என வெற்றியை தன்னிடம் அமைத்துக் கொண்ட சிறுவை நகரம்.
குபேரப்பட்டணம் என அழைக்கப்பட்ட அளகாபுரி போல் எல்லா வளங்களும் அதிகமாகக் குடிகொண்டுள்ள சிறுவாபுரியில் குடிகொண்டு உள்ள சிறுவை முருகன் வரம் அதிகம் தன்னிடம் இருப்பு உள்ளவன் என அருணகிரிநாதர் சொல்வது, வரமிகுந்தவனை அடிக்கடி நாடி வந்து அவனிடம் இருப்புள்ள வரங்களைப் பெற்று செல்ல வாருங்கள், வாருங்கள்! என அழைப்பது இ.ஃபோல உள்ளது.
- அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ்களினால் இந்த தலத்தைப் பாடியுள்ளார்.
- அருணகிரிநாதர் பாடிய 10000 திருப்புகழ்களில் நம் கைக்கு கிடைத்து இருப்பவை 1330 திருப்புகழ்தான்.
இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை.
முருகன் சிலை கூட முன்பு மரகதபச்சை கல்லில் இருந்து காலப்போக்கில் பின் நிறுவப்பட்டபோது கருங்கல்லில் செய்யப்பட்டிருக்கலாம்.
இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரகதப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.
அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ்களினால் இந்த தலத்தைப் பாடியுள்ளார்.
அருணகிரிநாதர் பாடிய 10000 திருப்புகழ்களில் நம் கைக்கு கிடைத்து இருப்பவை 1330 திருப்புகழ்தாம்.
அவற்றுள் 224 ஸ்தலங்களை பாடியுள்ளார். திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களில் 9 இடங்கள் இதுவரை கண்டறியப்படாமல் இருக்கின்றன.
கண்டறியப்பட்ட 215 தலங்களில் 35 தலங்களை சிறப்பாக பாடியுள்ளார்.
8 தலங்களில் 4 திருப்புகழ் பாடி இருக்கிறார். 6 தலங்களுக்கு அர்ச்சனை திருப்புகழ் பாடியுள்ளார்.
திருப்புகழில் பாடப்படும் நாயகனாக முருகன் இல்லாமல் 6 பாடல்களில் பாடும் நாயகனாக விநாயகப் பெருமானை பாடியுள்ளார்.
மேற்கண்ட திருப்புகழ் ஆய்வின்படி 6 அர்ச்சனைத் திருப்புகழில் ஒன்றாக சிறுவைக்கு 'சீதளவாரிஜ பாதா நமோ நம:' என ஒரு பாடலுடன் நான்கு திருப்புகழ் பாடிய 8 தலங்களில் ஒன்றாக சிறுவாபுரியும், அமைந்து இருப்பது சிறப்பு.
- மிக நேர்த்தியான வேலைப்பாடு. இதுபோன்ற சிலை வடிவம் வேறு எங்கும் இல்லை.
- ஓவியமாக வள்ளி மலையில் இருக்கும் கோலத்தை, சிலை வடிவமாக இங்கு அமைத்து இருப்பது மிகச்சிறப்பு.
அருணாசலேசுவரர், அபிதகுஜலாம்பிகை (உண்ணாமுலை) இருவருக்கும் நடுவே அற்புதத் தோற்றமாய், அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் கூடிய வள்ளி நங்கை தம் மணவாளப் பெருமான் முருகனை கைத்தலம் பற்றும் திருமண காட்சியாய் எழுந்தருளி இருக்கிறார்.
கைத்தலம் பற்றுகின்ற பொழுது இயற்கையாய் பெண்ணுக்கு ஏற்படும் கூச்சம், நாணம், பயிர்ப்பு காரணமாக வள்ளி ஒய்யாரமாக லேசாக முன் சாய்ந்து, ஒரு கண்மூடிய நிலையில் நிற்கின்ற கோலத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.
பின்புறத்தில் இருந்து நோக்கும் பொழுது வள்ளி கள்ளத்தனமாக அரைக்கண் பார்வையாக முருகனை நோக்குவது போல் சிற்பி சிலையை வடித்திருக்கிறார்.
மிக நேர்த்தியான வேலைப்பாடு. இதுபோன்ற சிலை வடிவம் வேறு எங்கும் இல்லை.
ஓவியமாக வள்ளி மலையில் இருக்கும் கோலத்தை, சிலை வடிவமாக இங்கு அமைத்து இருப்பது மிகச்சிறப்பு.
வள்ளி மணவாளப்பெருமானின் அழகைக்காண கண்கோடி வேண்டும்.
- அண்ணாமலையார் மரகதப்பச்சையில் கரும்பச்சை வைரம் போல் பிரகாச ஜோதியாகக் காட்சி அளிக்கிறார்.
- இத்துணை பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை.
சிறுவாபுரியில் முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் மரகதப்பச்சையில் கரும்பச்சை வைரம் போல் பிரகாச ஜோதியாகக் காட்சி அளிக்கிறார்.
இத்துணை பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை.
அருணகிரிநாதர் திருவண்ணாமலைக்கு 'மயிலுமாடி நீயுமாடி வரவேணும்' என்று பாடியதற்கு இணையாக, இங்கு 'மைந்துமயில் உடன் ஆடிவர வேணும்' என பாடி உள்ளதால் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மையும் இங்கு எழுந்தருளி இருக்கிறார்கள்.
அருணாசலேசுவரர், அபிதகுஜலாம்பிகை (உண்ணாமுலை) இருவருக்கும் நடுவே அற்புதத் தோற்றமாய், அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் கூடிய வள்ளி நங்கை தம் மணவாளப் பெருமான் முருகனை கைத்தலம் பற்றும் திருமண காட்சியாய் எழுந்தருளி இருக்கிறார்.
- இந்த திருப்புகழின் ஈற்றடியில் கடைசியில் சொற்கள் ஒரு வாக்கியமாக பொருள்பட அமைந்து இருப்பதும் ஓர் அரிய சிறப்பாகும்.
- இவரை ‘ நினைத்தாலே போதும் அடியவர்க்கு எளிமையாக முருகன் எழுந்தருளி வருவார்’ என்கிறார்.
'அண்டர்பதி குடியேற' என்ற முதல் திருப்புகழில் 'மகிமீற, மகிழ்கூற, மகிழ்வாக, மகிகூற, இன்பமுற' என ஐந்து இடங்களில் மகிழ்ச்சிப் பெருக்கு கூறப்பட்டது போல் வேறு எந்த திருப்புகழிலும் சிறப்பாக ஐந்து முறை சொல்லப்படவில்லை என்பது இன்னும் ஒரு சிறப்பு.
இந்த திருப்புகழின் ஈற்றடியில் கடைசியில் சொற்கள் ஒரு வாக்கியமாக பொருள்பட அமைந்து இருப்பதும் ஓர் அரிய சிறப்பாகும்.
'அருளாலே, மகிழ்வாக, எதிர்காண, வரவேணும், உயர்தோளா, வடிவேலா, முருகேசா, பெருமாளே!' என ஒரு வாக்கியமாக அமைவதுபோல் வேறு எந்த ஒரு திருப்புகழிலும் அமையவில்லை.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக சிறுவாபுரி தலத்துக்கு வருபவர் கடுமையான விரதமாக பசி பட்டினி இருந்து நோன்பு நோற்று இறைவனை அடைய வேண்டியதில்லை.
'சந்தமும் அடியார்கள் சிந்தையது குடியான தன் சிறுவைதனில் மேவு பெருமாளே!' என்று இவரை 'எப்போதும் நினைத்தாலே போதும் அடியவர்க்கு எளிமையாக முருகன் எழுந்தருளி வருவார்' எனக்கூறுகிறார் அருணகிரிநாதர்.
- இக்கோவிலை வழிபடுதன் மூலம் திருமணத் தடை நீங்குவதாகவும் புத்திர பாக்கியம் கிடைப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
- மேலும் இக்கோவிலில் வைத்து பல்வேறு தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது.
தமிழர்கள் சங்க காலம் தொட்டே முருக வழிபாட்டை மேற்கொண்டு வருவதாக பல்வேறு சான்றுகள் தெரிவிக்கின்றன.
பல்வேறு இடங்களில் மலைகளில் முருகப் பெருமானுக்கு கோவில்கள் அமைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குகிறது.
தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
பல்வேறு மாவட்டத்திலிருந்து பக்தர்கள் தினந்தோறும் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
தோரணமலையின் உச்சியில் அமைந்துள்ள முருகப் பெருமானை அகத்தியர், தேரையர் பல ஆண்டுகளுக்கு முன்பு வழிபட்டடதாக கூறப்படுகிறது.
அவர்கள் மலைகளில் பரந்து காணப்பட்ட பல்வேறு மூலிகைகளை கொண்டு மருத்துவம் செய்ததாக கூறப்படுகிறது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த தலத்தில் தினந்தோறும் பூஜை நடைபெறுகிறது.
மேலும் தமிழ் மாத கடைசி வெள்ளியன்று காலையில் சிறப்பு பூஜை, மதியம் அன்னதானம் நடைபெற்று வருகிறது.
கோவிலின் சிகர நிகழ்ச்சியாக தைப்பூச விழா ஓவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இக்கோவிலை வழிபடுதன் மூலம் திருமணத் தடை நீங்குவதாகவும் புத்திர பாக்கியம் கிடைப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
மேலும் இக்கோவிலில் வைத்து பல்வேறு தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது.
- தோரணமலையில் மூலிகைகள் நிறைந்து காணப்படுகிறது.
- அதனால்தான் சித்தர்கள் இந்த மலையை நாடி வந்துள்ளனர்.
தோரணமலையில் மூலிகைகள் நிறைந்து காணப்படுகிறது.
அதனால்தான் சித்தர்கள் இந்த மலையை நாடி வந்துள்ளனர்.
பாறைகள் அதிகமாகவும், மண் குறைவாகவும் நிறைந்துள்ள இந்த இடத்தில் இவ்வளவு மூலிகைகளா என்ற அதிசயிக்கும் வண்ணம் உள்ளது, இம்மலை.
பொதுவாகவே மலைப்பகுதியில் வளரும் மூலிகைகளுக்கு தனிச்சிறப்பு உண்டு.
காரணம் இங்கு மூலிகைகள் இயற்கையாகவே வளர்கின்றன.
யாரும் உரமிடுவது கிடையாது. தண்ணீர் ஊற்றுவது இல்லை.
இயற்கையாக உள்ள கல்லும், மண்ணும், மழையும், ஒளியும்தான் அதற்கு உணவு.
அதோடு இரண்டுக்கும் மேலான மூலிகைகள் ஒட்டாக வளர்ந்தால் அதற்கு தனிச் சிறப்பு. இவைகள் எல்லாம் மலைப்பகுதியில்தான் இருக்கும்.
தோரணமலை மூலிகையின் தனிச்சிறப்பு என்னவென்றால் இங்கு கோடையிலும் வற்றாத சுனைகள் பல உள்ளன.
அந்த சுனை நீர் ஊற்று மூலம் பல மூலிகைள் கோடை காலத்தில் தண்ணீரை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும்.
இதனால் மூலிகை வனமாக விளங்கும் தோரணமலையை நாடி பல சித்தர்கள் வந்துள்ளனர்.
வழிபாட்டு நேரம்
சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்கும் தோரணமலை முருகன் கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமை தோறும் உச்சிகால பூஜையின் போது (11 மணி முதல் 1.30 மணி வரை) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானமும் நடக்கின்றன.
திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும் நோய் குணமாகவும் சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர்.
மருத்துவ படிப்பு, விரும்பிய வேலை, தொழில் அமையவும் உயர்பதவி கிடைக்கவும் அருள்பாலிக்கிறான் முருகன்.
செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும்.
மலை அடிவாரத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
- தோரண மலையில் குகையில் முருகப்பெருமான் தரிசனம் தருகிறார்.
- இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
தோரண மலையில் குகையில் முருகப்பெருமான் தரிசனம் தருகிறார்.
இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.
இதனால் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் தோரண மலைக்கும் வந்து செல்கிறார்கள்.
'குகைக்குள் வாழும் குகனே'
பாரதியார் பெண் எடுத்த ஊர் கடையம்.
அவரது மனைவி செல்லம்மா பிறந்த ஊர் என்பதால் பாரதியார் கடையம் வரும்போதெல்லாம் தோரண மலை சென்றதாக கூறுகின்றனர்.
பாரதி 'குகைக்குள் வாழும் குகனே' என்று போற்றிப் பாடியதும் இந்த தோரணமலை முருகனைத்தான்.
- மலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து வருகிறது.
- எந்த ஒரு மலையிலும் கிடைக்காத மனஅமைதியை அங்கு நீங்கள் பெற முடியும்.
கடையம், பாவூர்சத்திரம், ஆவுடையானூர் உள்பட சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பலர் தவறாமல் தினமும் மலை ஏறி முருகனை வழி படுவதை கடமையாக வைத்துள்ளனர்.
தோரணமலையில் உள்ள ஒவ்வொரு படிக்கட்டிலிலும் ஏற, ஏற முருகன் வாழ்வில் நம்மை உயர்த்துவார்.
மலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து வருகிறது.
எந்த ஒரு மலையிலும் கிடைக்காத மனஅமைதியை அங்கு நீங்கள் பெற முடியும்.
உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் தேரையர் உள்ளிட்ட சித்தர்களின் ஆசியும் சேர்ந்து கிடைக்கும்.
முருகனின் அருளையும், சித்தர்களின் ஆசியையும் ஒருங்கேப் பெறவே முக்கிய நாட்களில் இங்கு விமரிசையாக விழா நடத்தப்படுகிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோரணமலையில் இந்தத்திருப்பணிகள் செய்பவர்களின் குடும்பமும் நிச்சயம் வாழையடி வாழையாக தழைக்கும்.
- இதனால் மலை ஏறும் போதே நம்மை அறியாமலே நம் உடல் சிலிப்பாறுவதை உணர முடியும்.
- 1000 படிகள் என்பதால் மலை ஏற சிரமமாக இருக்குமோ என்று சிலர் நினைக்கலாம். 1000 படிகள் என்பதால் மலை ஏற சிரமமாக இருக்குமோ என்று சிலர் நினைக்கலாம்.
இத்தலத்து முருகன் கிழக்கு நோக்கி திருச்செந்தூர் முருகனை பணித்தபடி உள்ளார்.
எனவே இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் திருச்செந்தூரில் வழிபட்ட அதே பலன்கள் கிடைக்கிறது.
பொதுவாக இருநதிகளுக்கு இடையில் உள்ள தலம் சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும்.
தோரணமலையை சுற்றி ராமநதி, ஜம்புநதி ஒடுகின்றன.
இதுதவிர இப்போதும் இந்த மலையில் தேரையரும், மற்ற சித்தர்களும் அபே நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதனால் மலை ஏறும் போதே நம்மை அறியாமலே நம் உடல் சிலிப்பாறுவதை உணர முடியும்.
1000 படிகள் என்பதால் மலை ஏற சிரமமாக இருக்குமோ என்று சிலர் நினைக்கலாம்.
நீங்கள் முதல் படியில் காலை எடுத்து வைத்தால் போதும், அதன்பிறகு அப்பன் முருகன் நம்மை மலை உச்சிவரை வரவழைத்து விடுவான்.
எப்படி ஏறினோம். எப்படி இறங்கினோம் என்பதே தெரியாது.
அதிலும் மலையில் உள்ள சுனைத்தீர்த்தம் ஏதாவது ஒன்றில் சற்று நீராடினால் போதும், மலை ஏறி வந்த அலுப்பு தெரியவே தெரியாது.
புனித நீராடி விட்டு முருகனை நெருங்கும் போது நிச்சயம் இரட்டிப்பு பலன்களைப் பெறலாம்.
- முருகன் எத்தனை நாட்களுக்குத்தான் அந்த சுனைக்குள் இருப்பார்?
- மீண்டும் மக்கள் வந்து தன்னை தரிசித்து பயன்பெறட்டும் என்று முருகப்பெருமான் திருவுள்ளம் கொண்டார்.
முருகன் எத்தனை நாட்களுக்குத்தான் அந்த சுனைக்குள் இருப்பார்?
மீண்டும் மக்கள் வந்து தன்னை தரிசித்து பயன்பெறட்டும் என்று முருகப்பெருமான் திருவுள்ளம் கொண்டார்.
தோரணமலை அருகில் உள்ள முத்துமாலைபுரம் என்ற ஊரை சேர்ந்த நா.பெருமாள் என்பவர் கனவில் முருகர் தோன்றினார்.
"நான் தோரணமலை உச்சியில் உள்ள சுனைக்குள் கிடக்கிறேன். என்னை வெளியில் எடுத்து வைத்து வணங்குங்கள்" என்றான்.
மறுநாள் விடிந்ததும் பெருமாள் ஆட்களை அழைத்து கொண்டு மலை உச்சிக்கு சென்றார்.
சுனையில் உள்ள தண்ணீரை இறைத்து வெளியேற்றினார்கள். சொன்னபடி தோரணமலைமுருகன் அங்கே இருந்தார்.
அந்த சிலையை எடுத்து மலை அடி வார குகையில் வைத்து வழிபட்டனர்.
இன்றும் அந்த சிலையே தோரணமலை சன்னிதானத்தில் மூலவராக உள்ளார்.
பெருமாளின் மகனும் ஆசிரியருமான ஆதிநாராயணன், தோரணமலை முருகன் பற்றிய சிறப்புகளை பரப்பச் செய்தார்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சுமார் 150 சினிமா தியேட்டர்களில் சிலைடு மூலம் தோரணமலை முருகன் பற்றிய தகவலை பரப்பினார்.
இதையடுத்து மக்கள் சாரை, சாரையாக தோரணமலைக்கு வரத்தொடங்கினார்கள்.
பக்தர்கள் வசதிக்காக அவர் தோரணமலை உச்சிக்கு செல்ல சுமார் 1000 படிகள் கொண்ட படியை ஏற்படுத்தினார்.
சுனைகளையும் மேம்படுத்தினார்.
தற்போது அவரது குமாரர் செண்பகராமன், தோரணமலை சைன் சிறப்புகளை உலகம் முழுமைக்கும் பரவச்செய்யும் தச்லைமற்ற பணியில் "தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இதனால் தோரணமலை முருகனை வழிபட வருபவர்கள் எண்ணிக்கை உயர்ந்தபடி உள்ளது.






