என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- அவர்கள் அந்த மலையில் இருந்த போது, தங்கள் இஷ்ட தெய்வமான இந்த முருகரை வழிபட்டனர்.
- சில ஆண்டுகளுக்கு பிறகு அகத்தியர் தோரணமலையில் இருந்து பொதிகை மலைக்கு சென்று விட்டார்.
அகத்தியரின் சீடராக வந்து சேர்ந்த தேரையரும் மருத்துவத்தில் நிறைய புதுமைகளை செய்தார்.
அவர்கள் இருவராலும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோரணமலை மிகப்பெரும் மருத்துவ தொழிற்சாலை போல செயல்பட்டது.
தோரணமலையின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே குழிகள் உள்ளன.
மிக அழகாக வட்ட வடிவத்தில் இருக்கும் அந்த குழிகள் எல்லாம் அகத்தியர், தேரையர் கண்காணிப்பில் சித்தர்கள் மூலிகைகளை இடித்து மருந்து தயாரித்த இடங்கள் என்று சொல்கிறார்கள்.
அவர்கள் அந்த மலையில் இருந்த போது, தங்கள் இஷ்ட தெய்வமான இந்த முருகரை வழிபட்டனர்.
சில ஆண்டுகளுக்கு பிறகு அகத்தியர் தோரணமலையில் இருந்து பொதிகை மலைக்கு சென்று விட்டார்.
அவரது சீடர் தேரையரோ, அந்த தோரணமலையின் ஒரு பகுதியில் ஜீவசமாதி ஆகிப்போனார்.
இதனால் மற்ற மகரிஷிகள், முனிவர்கள், சித்தர்களும் தோரண மலையில் இருந்து இடம்பெயர்ந்தனர்.
இதன் காரணமாக தோரணமலை அழகன் முருகன் ஆராதனை செய்யப்படாத நிலை ஏற்பட்டது.
அகத்தியர், தேரையர்களின் மருத்துவ தயாரிப்பு இடங்களும் இருந்த இடம் தெரியாமல் தூர்ந்து போய்விட்டன.
நாளடைவில் ஒட்டுமொத்த தோரணமலையும் மக்கள் கவனத்தில் இருந்து திசைமாறிப்போனது.
மிகவும் சிறப்பாக வழிபடப்பட்ட முருகனும் கால ஓட்டத்தில் அருகில் உள்ள சுனைக்குள் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது.
- அகத்திய முனிவர் பொதிகைக்கு வந்து கொண்டிருந்தபோது கடையம் அருகே உள்ள தோரணமலையை பார்த்து வியந்தார்.
- யானை வடிவத்தில் இருந்த அந்த மலை வாரணமலை என்றழைத்தார். அதுதான் மருவி தோரணமலை ஆகிவிட்டது.
அகத்தியர், தேரையர் வழிபட்ட இந்த சிறப்பான முருகன் அறுபடை வீடுகளுக்கு இணையாக பக்தர்களிடம் பிரசித்தி பெற்றிருக்க வேண்டுமே...
ஏன் பல நூறு ஆண்டு கழித்து இப்போது தெரியத் தொடங்கியுள்ளது? என்று நீங்கள் கேட்கலாம்.
அதற்கு விடை காண நாம் வரலாற்று நிகழ்வுகளை பார்க்க வேண்டும்.
உலகத்தை சமப்படுத்த தென்பகுதியில் உள்ள பொதிகை மலைக்கு செல் என்று சிவபெருமான், அகத்தியருக்கு உத்தரவிட்டு, அவர் வந்த கதை உங்களுக்கு தெரிந்ததுதான்.
அகத்திய முனிவர் பொதிகைக்கு வந்து கொண்டிருந்தபோது கடையம் அருகே உள்ள தோரணமலையை பார்த்து வியந்தார்.
யானை வடிவத்தில் இருந்த அந்த மலை வாரணமலை என்றழைத்தார். அதுதான் மருவி தோரணமலை ஆகிவிட்டது.
தோரணமலை அவருக்கு மிகவும் பிடித்துபோனது.
அதற்கு மிக முக்கிய காரணம் அந்த மலை அவருக்கு மனதை குளிரச் செய்து அமைதியை தந்தது.
எனவே அந்த மலையில் சிறிது காலம் தூங்கி செல்லலாம் என்று அகத்தியர் மலை உச்சிக்கு சென்றார்.
தோரணமலையில் பச்சை பசேலன விளைந்து கிடந்த சுமார் 4 ஆயிரம் மூலிகை செடி வகைகளை பார்த்ததும் அகத்தியர் மேலும் மகிழ்ச்சி அடைந்தார்.
அந்த மூலிகைகள் என்னென்ன நோய் தீர்க்கும் என்பதை கண்டுபிடித்தார்.
அந்த குறிப்புகளை எல்லாம் அவர் குறிப்புகளாக எழுதினார்.
அவைதான் இன்று அகத்தியர் மருத்துவ நூல்களாக உலகம் முழுவதும் பரவியுள்ளன.
ஆக அகத்தியரின் மருத்துவ ஆய்வுக்கு வித்திடப்பட்ட இடம் இந்த தோரணமலை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த தோரணமலையின் உச்சியில் முருகன் குடி கொண்டிருக்கிறான்.
- இந்த முருகப்பெருமானுக்கு உள்ள மிகப்பெரிய சிறப்பு என்ன தெரியுமா?
இந்த தோரணமலையின் உச்சியில் முருகன் குடி கொண்டிருக்கிறான்.
இந்த முருகப்பெருமானுக்கு உள்ள மிகப்பெரிய சிறப்பு என்ன தெரியுமா?
தமிழ் வாழ வழி வகுத்த குறுமுனியான அகத்தியர், மருத்துவ உலகமே வியந்து பார்க்கும் தேரையர் சித்தர் இருவரும் பல நூறு ஆண்டுகளாக வழிபட்ட பெருமையும், மகிமையும் இந்த முருகப் பெருமானுக்கு உண்டு.
தமிழ்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான முருகத் தலங்களில் அறுபடை வீடுகள் உள்பட எந்த ஒரு தலத்துக்கும் இல்லாத மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பாக இது கருதப்படுகிறது.
பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் இருப்பதாலோ என்னவோ, இந்த முருகன் மிகச்சிறந்த வரப்பிரசாதமாகத் திகழ்கிறார்.
நீங்கள் என்ன ஆசைப்பட்டு கேட்டாலும் சரி... தொழில் விருத்தி ஆகவேண்டுமா?
குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகளா? கடன் தொல்லையா? நல்ல வேலை வேண்டுமா?
பதவி உயர்வு வேண்டுமா? திருமணம் நடக்க வேண்டுமா? புத்திரப் பாக்கியம் வேண்டுமா? இப்படி நீங்கள் என்ன கேட்டாலும் தோரண மலை முருகன் வாரி வழங்க தயங்குவதே இல்லை.
அதுவும் இவரிடம் மலை ஏறி வந்து யார் ஒருவர் கண்ணீர் விட்டு தமது கோரிக்கைகளை வைக்கிறாரோ, அவரை தோரணமலை மேலும் அழவிடுவதில்லை.
- அந்த மண்டபத்தின் முன்பு இரண்டு யானைகள் நம்மை வரவேற்பது போல் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
- மண்டபத்தில் முன்பு இடதுபுறம் தேங்காய் சூறை (விடலை) போடுவதற்கான தொட்டி கட்டப்பட்டு உள்ளது.
எல்லா முருகன் மலைக்கோவிலிலும் அடிவாரத்தில் விநாயகர் இருப்பார்.
அதேபோல் தோரண மலையின் அடிவாரத்திலும் விநாயகர் பெருமானுக்கு தனி சன்னதி உள்ளது.
ஆனால் மற்ற கோவில்களில் எல்லாம் பெயரளவுக்குத்தான் விநாயகர் சன்னதி இருக்கும்.
அதாவது முருகனை வழிபட செல்லும்முன் அவரது அண்ணனும் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த விநாயகரை அமைத்து இருப்பார்கள்.
ஆனால் தோரணமலையை பொறுத்தவரை மலைமேல் உள்ள முருகன் சன்னதிக்கு எந்த விதத்திலும் குறையாத வகையில் விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது.
இன்னும் சொல்லப்போனால் முருகனைவிட அதி முக்கியத்துவம் பெற்று விளங்குகிறார், இங்குள்ள விநாயகர்.
அவருக்கு வல்லப விநாயகர் என்று பெயர்.
அமர்ந்த நிலையில் கிழக்கு நோக்கி இவர் அருள்பாலிக்கிறார்.
அந்த காலத்தில் இங்கு விநாயகர் சன்னதி மட்டுமே இருந்துள்ளது.
அதன்பின் சன்னதி முன்பு மண்டபம் கட்டப்பட்டு உள்ளது.
அந்த மண்டபத்தின் முன்பு இரண்டு யானைகள் நம்மை வரவேற்பது போல் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மண்டபத்தில் முன்பு இடதுபுறம் தேங்காய் சூறை (விடலை) போடுவதற்கான தொட்டி கட்டப்பட்டு உள்ளது.
சன்னதியை சுற்றி பிரகாரம் சிறப்புற அமைக்கப்பட்டு உள்ளது.
விநாயகர் சன்னதிக்கு தென்கிழக்கு பகுதியில் மடப்பள்ளி கட்டப்பட்டு உள்ளது.
அந்த விநாயகர் சன்னதியில்தான் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், நடராஜர் உற்சவர்கள் உள்ளனர்.
- முருகப் பெருமான் அருளாட்சி செய்யும் எத்தனையோ மலைதலங்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
- அந்த வரிசையில் இடம் பெற்றுள்ள “தோரணமலை” முழுக்க முழுக்க வித்தியாசமானது.
குன்று இருக்கும் இடங்கள் எல்லாம் குமரன் அருள் வீசும் இடங்கள்.
முருகப் பெருமான் அருளாட்சி செய்யும் எத்தனையோ மலைதலங்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
பழனி, மருதமலை, திருத்தணி பழமுதிர்ச்சோலை என்று முருகன் வீற்றிருக்கும் மலை தலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த வரிசையில் இடம் பெற்றுள்ள "தோரணமலை" முழுக்க முழுக்க வித்தியாசமானது.
மிகுந்த தனித்துவம் கொண்டது.
முதலில் தோரணமலை எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நெல்லை மாவட்டத்தில் இப்புண்ணிய மலை அமைந்துள்ளது.
தென்காசியில் இருந்து கடையம் செல்லும் வழித்தடத்தில் இத்தலம் உள்ளது.
நெல்லையில் இருந்தும் மிக எளிதாக இத்தலத்துக்கு செல்ல முடியும்.
- உங்களிடம் சொந்த வீடு கட்ட எந்த ஒரு வசதியும் இல்லை.
- கையில் அதற்கான பணமும் இல்லை என்பவர்கள் கூட நம்பிக்கையோடு சிறுவாபுரி வந்து முருகனை வணங்கலாம்.
ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு விசேஷம் இருக்கும். அதுபோல சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வந்தால் 'சொந்த வீடு' கனவு நனவாகும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து உள்ளது.
இதனால் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதற்காக இங்குள்ள முருகனை நாடி வரும் பக்தர்கள் கூட்டம்தான் அதிகமாக காணப்படுகிறது.
அதுவும் செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்தும் இக்கோவிலை நாடி வரும் பக்தர்கள் அதிகம். பக்கத்து மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்தும் இந்த கோவிலின் பெருமையை கேள்விப்பட்டு ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
நாம் எல்லோருக்கும் எப்படியும் வாழ்க்கையில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தாங்கள் படும் கஷ்டங்களில் இருந்து மீள சொந்த வீடு கனவு ரொம்பவே அதிகமாக இருக்கும்.
ஆனால் எல்லோரும் அந்த கனவை அவ்வளவு எளிதாக அடைந்து விட முடிவதில்லை.
சிலருக்கு கையில் பணம் இருந்து ஏதோ ஒரு காரணத்தினால் சொந்த வீடு கட்டுவதில் பல தடைகள் ஏற்படுவது உண்டு.
இதுபற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.
உங்கள் உள்ளத்தில் உந்து சக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்து தருகிறேன் என்கிறார் சிறுவாபுரி முருகன்.
ஆம் சிறுவாபுரிக்கு வந்து முருகனை உள்ளன்போடு வணங்கினால் நாம் நினைத்த காரியம் நினைத்தபடியே நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள்.
கூட்டு பிரார்த்தனைக்கு பலன் அதிகம் உண்டு என்று சொல்வார்கள்.
இதனால் இங்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு எப்படியாவது சொந்த வீடு வேண்டும் என மனமுருகி வேண்டுவதால் அவர்கள் எண்ணங்களை இந்த முருகன் உடனடியாக நிறைவேற்றி தருவதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
இதற்காக பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள பகுதிகளில் செங்கற்களை அடுக்கி வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு அகல் விளக்குகள் ஏற்றி பூக்கள் வைத்து முருகனை நினைத்து வழிபடுகின்றனர்.
சிலர் சிறு சிறு கற்களையும் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.
இதற்காக அருகிலேயே செங்கற்களும் கிடைக்கிறது.
பின்னர் 6 வாரம் தொடர்ந்து இந்த கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தால் உங்களது ஆசை பூர்த்தியாகும் என்பது ஐதீகம்.
உங்களிடம் சொந்த வீடு கட்ட எந்த ஒரு வசதியும் இல்லை.
கையில் அதற்கான பணமும் இல்லை என நினைப்பவர்கள் கூட நம்பிக்கையோடு சிறுவாபுரி வந்து முருகனை வணங்கலாம்.
அதே போல 'திருப்புகழ்' பதிகத்தையும் தொடர்ந்து உச்சரித்து வர வேண்டும்.
இப்படி செய்வதினால் உங்களின் பொருளாதார நிலை உயர்ந்து ஏழ்மைநிலை மாறி சொந்த வீடு கட்டுவதற்கான சிறப்பான சூழ்நிலை உருவாகும்.
நிச்சயம் உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் கிட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- இத்தலத்திற்கு பிரார்த்தனை செய்து வருபவர்கள் ஆறு வாரமும் திருப்புகழ் பாடி இறைவனை வணங்க வேண்டும்.
- எண்ணியது முடிக்கும் எம்பெருமானை எண்ணி நம்மனதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
திருமணம் தவிர மற்ற வேண்டுதல்களான, வீடு, பிள்ளைப்பேறு, செல்வம், நோய் நிவர்த்தி ஆகியவை பெற வருபவர்கள் மேற்படி முறைப்படி ஆறு வாரமும் மூலவர் சந்நிதியில் அர்ச்சனை செய்து வர வேண்டும்.
ஆறாவது வாரம் மூலவர் சந்நிதியில் இருந்து பெற்ற மாலையை அணிந்து ஆறு முறை நம் வேண்டுதலை இறைவனிடம் முறையிட்டு வெற்றி வேண்டி ஆலயத்தை வலம் வர வேண்டும்.
இத்தலத்திற்கு பிரார்த்தனை செய்து வருபவர்கள் ஆறு வாரமும் திருப்புகழ் பாடி இறைவனை வணங்க வேண்டும்.
எண்ணியது முடிக்கும் எம்பெருமானை எண்ணி நம்மனதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
முதல் ஐந்து வாரங்களுக்கு, ஒவ்வொரு முறை வரும் பொழுதும் இரண்டு தேங்காய், இரண்டு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, பூமாலை ஒன்று மற்றும் இரண்டு எலுமிச்சம்பழம் கொண்டு வணங்க வேண்டும்.
ஆறாவது வாரம் ஆண்டவனை வழிபட்டு, அர்ச்சனை அல்லது அபிஷேகம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் வந்து போகும் பொழுது நம்மிடம் கொடுக்கப்பட்ட ஒரு எலுமிச்சம் பழத்தை வீட்டிலே வைத்து பூ வைத்து பூஜித்து வர வேண்டும்.
முதல் வார எலுமிச்சம் பழத்தை இரண்டாவது வார எலுமிச்சம் பழம் வந்தவுடன் எடுத்து கடல், கிணறு ஏதாவது ஓர் அசுத்தம் இல்லாத இடத்தில் சேர்த்துவிட்டு தற்சமயம் பெற்று வந்த பழத்தை பூஜிக்க வேண்டும்.
இவ்வாறு ஐந்து வாரம் செய்து விட்டு ஆறாவது வாரம் நாம் பெற்று வந்த பழத்தை ஈரம் படாது பாதுகாத்து நம்முடைய பிரார்த்தனை நிறைவேறும் வரை பூஜிக்க வேண்டும்.
இந்த பிரார்த்தனை பூஜை காலங்களில் நாம் அண்டர்பதி திருப்புகழை ஓதி வணங்க வேண்டும்.
நம் பிரார்த்தனை நிறைவேறியதும் சிறுவாபுரி வந்து ஆறு அர்ச்சனைக்கு உரிய பொருட்கள் வைத்து பாலசுப்பிரமணிய சுவாமியை வணங்க வேண்டும்.
- சன்னதியில் தரும் மாலையை திருமண மாலையாக எண்ணி அணிந்து ஆறுமுறை ஆலயத்தை சுற்றி வர வேண்டும்.
- பின்னர் மாலையை வீட்டிற்கு எடுத்து சென்று திருமணம் நடைபெறும் வரை பாதுகாத்து வணங்கி வர வேண்டும்.
திருமணம் தடை பட்டாலோ அல்லது நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருந்தாலோ, சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை நாடினால் பலன் உண்டாகும்.
நம் பிரார்த்தனை நிறைவேற சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரமும் ஏதாவது ஒரு கிழமையில் (முதல் வாரம் வந்த கிழமையிலேயே தொடர்ந்து அடுத்த 5 வாரமும்) வர வேண்டும்.
வரும் நேரமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
காலை என்றால் ஒவ்வொரு வாரமும் காலையிலேயே வர வேண்டும்.
மாலை என்றால் ஒவ்வொரு வாரமும் மாலையிலேயே வர வேண்டும்.
திருமணம் ஆகவேண்டிய பெண்கள் ஆறு வாரமும், வாரம் ஒருநாள் என்று ஆறு தடவைகள் தொடர்ந்து வந்து சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டால் திருமணம் விரைவில் நடைபெறும்.
திருமணம் ஆக வேண்டி ஆண்டவனிடம் பிரார்த்திக்க வருபவர்கள் வள்ளி மணவாள பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.
ஆறாவது வாரம் ஆறு அர்ச்சனைக்கு உரிய பொருட்களுடன் வந்து மரகத விநாயகர், மூலவர், வள்ளி மணவாளப் பெருமான், அண்ணாமலையார், உண்ணா முலையம்மை, ஆதிமூலவர் ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
வள்ளி மணவாளப்பெருமான் சன்னதியில் தரும் மாலையை திருமண மாலையாக எண்ணி அணிந்து ஆறுமுறை ஆலயத்தை சுற்றி வர வேண்டும்.
பின்னர் மாலையை வீட்டிற்கு எடுத்து சென்று திருமணம் நடைபெறும் வரை பாதுகாத்து வணங்கி வர வேண்டும்.
திருமணம் முடிந்ததும் தம்பதி சமேதராய் இத்தலம் வந்து ஆறு தெய்வ சந்நிதிகளுக்கும் அர்ச்சனை செய்து பழைய மாலையை கோவிலில் உள்ள மரத்தில் கட்ட வேண்டும்.
- இந்த அற்புதக் கோலத்தை வழிபாடு செய்பவர்கள் இனிமையான இல்லற வாழ்கையைப் பெற்று இன்பமடைவர்.
- தடைபட்ட திருமணத் தடைகள் நீங்கப் பெற்று மனம் நிறைந்த மங்கல வாழ்வுப் பேறு கிடைக்கும்.
சந்தமும் அடியார்கள் சிந்தையது குடியான தன் சிறுவைதனில் மேவும் பெருமான் வள்ளி மணவாளனாக அருட்காட்சியளிக்கும் அற்புதக் கோலத்தை வழிபாடு செய்பவர்கள் இனிமையான இல்லற வாழ்கையைப் பெற்று இன்பமடைவர்.
தடைபட்ட திருமணத் தடைகள் நீங்கப் பெற்று மனம் நிறைந்த மங்கல வாழ்வுப் பேறு கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும், பூரம், உத்திரம், விசாகம் ஆகிய நட்சத்திரங்களிலும் பவுர்ணமி, சுக்லது விதியை, சுக்ல சஷ்டி, செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களிலும் விசேஷ வழிபாடு செய்தல் வேண்டும்.
நெய் அல்லது இலுப்பை எண்ணைய் விளக்கு ஏற்றியும், பழங்கள், தேன், சுத்தமான (கலப்படமற்ற) சந்தனம், பச்சைக் கற்பூரம் முதலான அபிஷேகங்கள் செய்தும், சிவப்பு பச்சை வஸ்திரங்கள் அணிவித்தும், தேன் கலந்த தினைமாவிளக்கு ஏற்றியும் ரோஜா, சண்முகம், சிவப்புத்தாமரை, சிவப்பு அரளி, மகிழம்பூ முதலிய ஏதாவதொரு மலர்மாலை அணிவித்து ஷடாக்ஷர அஷ்டோத்ரம், ஷடாக்ஷரத்ரிசதி வள்ளி மணவாளப் பெருமான் திருப்புகழ் போற்றி 108 ஆகிய ஏதாவதொரு அர்ச்சனை செய்தல் வேண்டும்.
(பூக்களை கிள்ளி அர்ச்சனை செய்தல் கூடாது, முழுப்பூவாகத்தான் அர்ச்சிக்க வேண்டும்) வெண்பொங்கல், தேன்குழல், கடலைப்பருப்பு பாயாசம் முதலிய ஏதாவதொரு நைவேத்தியம் செய்தால் எல்லா நலன்களும் பெற்று இன்பமயமான இல்லற வாழ்வை அடையலாம்.
- முருகர் சன்னதியின் வலதுபுறம் அண்ணாமலையார், உண்ணாமலை அம்பாள் சன்னதி உள்ளது.
- இவர்களுக்கு நடுவில் கல்யாண கோலத்தில் வள்ளியும், முருகனும் கைகோர்த்து நிற்பது அற்புதச் சிறப்பாகும்.
சிறுவாபுரி முருகன் கோவில் அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற திருத்தலமாகும்.
ராமபிரான் தன் பட்டாபிஷேகத்திற்கு பிறகு கர்ப்பிணியான மனைவி சீதை மீது ஊரார் பழிபோட்டதால் காட்டிற்கு அனுப்பிவிட்டார்.
அங்கு லவனும், குசனும் பிறந்தனர். இதன் பிறகு ராமர் அஸ்வமேத யாகம் செய்தார்.
மனைவியின்றி யாகம் செய்வது விதிக்கு புறம்பானது என்பதால் அவர் பல நாடுகளுக்கும் அனுப்பிய யாக குதிரையை லவனும், குசனும் இத்தலத்தில் கட்டிப்போட்டுவிட்டனர்.
குதிரை திரும்பி வராமல் போகவே, அதை மீட்டு வர லட்சுமணனை அனுப்பினார்.
லட்சுமணனால் குதிரையை மீட்க முடியவில்லை.
இதனால் ராமரே நேரில் சென்று மீட்டு சென்றார் என்பது ராமயண கால செய்தியாகும்.
இந்த வரலாற்று செய்தியை "சிறுவராகி இருவர் கரிபதாதி கொடுஞ்சொல் சிலை ராமன் உடன் எதிர்த்து ஜெயமதானநகர்" என்ற திருப்புகழ் பாடல் மூலம் அறிய முடிகிறது.
ராமனிடம் லவனும், குசனும் சண்டை போட்டதாகவும் அந்த இடமே சிறுவாபுரி என்ற சின்னம்பேடு என்றும் இத்தல வரலாறு கூறுகிறது.
சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடு. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு ஆகும்.
இக்கோவிலில் அமைந்துள்ள ஆதிமூலவர் சிலா விக்கிரகம் பல்லவர் காலத்தை சேர்ந்தது.
கடந்த 1968-ம் ஆண்டு உபயதாரர்களால் 5 நிலை ராஜகோபுரம் புதியதாக கட்டப்பட்டது.
இக்கோவில் பிரார்த்தனை தலமாக உள்ளது.
இத்திருக்கோவிலில் மரகத பச்சைக் கற்களால் ஆன சிவன், அம்பாள், விநாயகர், நந்தி, மயில் மற்றும் பைரவர் விக்கிரகங்கள் உள்ளன.
முருகர் சன்னதியின் வலதுபுறம் அண்ணாமலையார், உண்ணாமலை அம்பாள் சன்னதி உள்ளது.
இவர்களுக்கு நடுவில் கல்யாண கோலத்தில் வள்ளியும், முருகனும் கைகோர்த்து நிற்பது அற்புதச் சிறப்பாகும்.
- தொடர்ந்து 6 வாரம் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
- அதிலும் சொந்த வீடு மற்றும் திருமண தடை நீங்க இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தான் அதிகம்.
சின்னஞ்சிறு கிராமமாக இருந்தாலும் இந்த கோவிலை நோக்கி படையெடுக்கும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை கண்கூடாக பார்க்கலாம்.
அதுவும் முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படும் செவ்வாய்க்கிழமைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும்.
அன்றைய தினம் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலையாக தான் காட்சி அளிக்கும்.
தொடர்ந்து 6 வாரம் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
அதிலும் சொந்த வீடு மற்றும் திருமண தடை நீங்க இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தான் அதிகம்.
தாங்கள் நினைப்பதை சிறுவாபுரி முருகன் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
அழகு மயிலில் ஆடி வந்து முருகன் அருணகிரியாருக்கு காட்சிஅளித்த இந்த தலத்திற்கு நான்கு திருப்புகழ் பாடல்கள் உள்ளன.
புது வீடு கட்டுபவர்கள், புது வீட்டில் குடியேற விரும்புவோர்,சிறுவாபுரி திருப்புகழை ஓதி சிறுவாபுரி முருகனை தரிசித்து மரகத கல்லில் மாட்சியுடன் விளங்கும் மயிலையும், மற்ற மூர்த்திகளையும் வழிபட்டு வாழ்வில் சொந்த வீடு கட்டி மகிழ்ச்சியாக வாழலாம் என்பது உறுதி.
முருகனால் வாழ்வு பெற்று, முருகனின் வேலால் நாவில் தமிழ் எழுதப்பட்டு, முருகனின் அருளால் பாடல் பாடும் திறமை பெற்ற அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலங்கள் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
அந்த வகையில் அருணகிரியாரால் நான்கு திருப்புகழ்கள் பாடப்பட்ட சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் கேட்ட வரம் அருளும் வல்லமை உடை யவராக கருதப்படுகிறார்.
- கோவிலின் உயரமான கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொழுவாக வீற்று இருக்கிறது.
- இக்கோவிலின் தல விருட்சமாக மகிழம் மரம் திகழ்கிறது.
இங்குள்ள சிலைகளில் பாலசுப்பிரமணிய சுவாமி , ஆதிமூலவர் நவக்கிரகம் தவிர மற்ற சிலைகள் அனைத்தும் பச்சைக்கற்களால் ஆனது என்பது தான் விசேஷம்.
கோவிலின் உயரமான கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொழுவாக வீற்று இருக்கிறது.
இக்கோவிலின் தல விருட்சமாக மகிழம் மரம் திகழ்கிறது.
இங்குள்ள முருகனை மனமுறுகி வேண்டினால் பூமி சம்பந்தமாக அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும் , குழந்தை பேறு இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும் கடன் தொல்லை நீங்கவும் சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
தை மாதத்தில் கிரகப்பிரவேசத்திற்கு நாள் குறித்து விட்டு நம்பிக்கையுடன் சிறுவாபுரிக்கு 6 வாரம் தொடர்ந்து சென்று வந்தால் சொந்த வீட்டில் குடியேறும் யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இது மட்டும் அல்லாது கல்வி செல்வம் , செல்வ செழிப்பான வாழ்க்கை, கடன் பிரச்சினை தீருதல் என அனைத்து பிரார்த்தனைகளையும் இந்த முருகன் நிறைவேற்றி தருகிறார்.






