என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • இச்சன்னதியில் உள்ள பாலாம்பிகை பால (சிறுமி) வடிவில், இரு கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.
    • அருகில் லட்சுமி, சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர்.

    திருக்கடையூர் அபிராமி ஆலய மகாமண்டபத்தின் வடக்கு பகுதியில் சிற்ப வேலைபாட்டுடன் கூடிய அழகிய சபை உள்ளது.

    அங்கு எமனை சம்ஹாரம் செய்த கோலத்தில் தெற்கு முகமாக கால சம்ஹார மூர்த்தி எழுந்தருளியுள்ளார்.

    வலது திருக்கரங்களில் சூலமும், மழுவும் உள்ளது. இடது திருவடியால் உதையுண்ட எமன் தலைகீழாக வீழ்ந்து கிடக்கின்றார்.

    வீழ்ந்து கிடக்கும் எமனை சிவபூதமான குண்டோதரன் கயிறு கட்டி இழுத்து அப்புறப்படுத்தும் காட்சி காண்பதற்கு அரியது.

    இறைவனார் வலது பாகத்தில் ஸ்ரீமார்க்கண்டேயர் அருள் உருவாய் காட்சி அளிக்கிறார்.

    இடது பக்கத்தில் இம்மூர்த்திக்கு எதிரில் திருமகள், கலை மகளுடன் விளங்குகின்றார்.

    இம்மூர்த்திக்கு எதிரில் வடக்கு முகமாக எமனார் (உற்சவ மூர்த்தி) எருமையுடன் ஆண்டவன் அருளை நாடிய வண்ணமாக ஆட்சித் திருக்கோலத்தில் காணப்படுகிறார்.

    இக்கால சங்கார மூர்த்திக்கு ஆண்டில் பதினோரு முறை அபிஷேகம் நடைபெறுகிறது.

    அந்த 11 அபிஷேக நாட்கள் விவரம் வருமாறு:

    சித்திரை விசேஷ, பெருவிழாவில் 5,6ம் நாள் பிராயசித்த அபிஷேகம், தட்சிணாயன புண்ணிய காலம், ஆனி உத்திரம், புரட்டாசியில் கன்யா சதுர்த்தி, துலாவிஷா, ஆரூத்ரா, உத்தராயண புண்ணிய காலம், மாசி மகம், கும்பசதுர்த்தி அபிஷேகம் நடைபெறுகின்றன.

    இவர் சித்திரைப் பெருவிழாவில் 6ம் திருநாளன்று தான் வீதி உலாவிற்கு எழுந்தருளுவார்.

    இவரை வழிபட எம பயம் நீங்கும்.

    இத்தலத்தில் கால சம்ஹார மூர்த்தி, இடது காலை ஆதிசேஷன் தலை மீது வைத்து இருக்கிறார்.

    சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார்.

    சாதாரணமாக கால சம்ஹாரமூர்த்தியை தரிசிக்கும் போது, எமனை பார்க்க முடியாது.

    பூஜை செய்யும் போது பீடத்தை திறப்பார்கள்.

    அப்போதுதான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி, கையில் சூலத்துடன் காட்சி தருவதை 'சம்ஹார கோலம்' என்றும், எமனுடன் இருப்பதை 'உயிர்ப்பித்த கோலம்' என்றும் சொல்கிறார்கள்.

    ஆக, ஒரே சமயத்தில் 'சம்ஹார' மற்றும் 'அணுக்கிர மூர்த்தி'யை தரிசிக்கலாம்.

    இச்சன்னதியில் உள்ள பாலாம்பிகை பால (சிறுமி) வடிவில், இரு கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.

    அருகில் லட்சுமி, சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர்.

    • ராமேஸ்வரத்தில் உள்ள சிவனை கடல் மணலில் சீதை பிடித்து வைத்தது.
    • ஆனால் திருராமேஸ்வரத்தில் உள்ள சிவலிங்கம், தானாக வளர்ந்த சுயம்பு லிங்கமாகும்.

    மன்னார்குடி திருத்துறைப்பூண்டி சாலையில், தட்டாங்கோவில் என்ற ஊரில் இருந்து வடகிழக்கில் 2 கி.மீ. தொலைவில் திருராமேஸ்வரம் இருக்கிறது.

    இங்கு சீதை பத்துமாதம் சிவ பூஜை செய்ததால் "சீதா ராமேஸ்வரம்" என்றும் அழைக்கப்படுகிறது.

    ராமேஸ்வரத்தில் உள்ள சிவனை கடல் மணலில் சீதை பிடித்து வைத்தது.

    ஆனால் திருராமேஸ்வரத்தில் உள்ள சிவலிங்கம், தானாக வளர்ந்த சுயம்பு லிங்கமாகும்.

    ராமேஸ்வரத்தில் 21 தீர்த்தங்களும் தனித்தனியே உள்ளன.

    ஆனால் திருராமேஸ்வரம் திருக்குளத்தில் 21 தீர்த்தங்களும் சேர்ந்தள்ளன.

    இக்கோவிலின் இன்னொரு சிறப்பு இங்கு சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை என்று இரு துர்க்கை அம்மன்கள் இருக்கிறார்கள்.

    விஷ்ணு துர்க்கைக்கும், சிவ துர்க்கைக்கும் ஒரே ஒருமுறை ராகுகால பூஜை செய்தால் போதும், திருமணம், குழந்தை செல்வம், பொருட்செல்வம் அனைத்தும் பெறலாம் என்கிறார்கள்.

    எல்லாக் கோவில்களிலும் குருபகவான், நான்கு ரிஷிகளுடன் இருப்பார்கள்.

    ஆனால் திரு ராமேஸ்வரம் கோவிலில் குருபகவான் எட்டு ரிஷிகளுடன் காட்சி தருகிறார்.

    ஏழு அமாவாசை தினங்களில் அதிகாலையில் தீர்த்தக் குளத்தில் முழுக்குப் போட்டு சிவதரிசனம் செய்தால் அனைத்து நோய்களும் நீங்கப்பெறும் என்பது ஐதீகம்.

    மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி பேருந்து சாலையில் 7 கிலோ மீட்டர் சென்று தட்டாங்கோவில் நிறுத்தத்தில் இறங்கி திருராமேஸ்வரம் செல்ல வேண்டும்.

    • பிரம்மனும் நாடெங்கிலும் சுற்றித் திரிந்து அங்கங்கே சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
    • பின்பு பிடவூராகிய இத்தலம் வந்து 12 லிங்கங்களை பிரதிஷ்டை செய்து விட்டார்.

    தமிழ்நாட்டில் எத்தனையோ சிவாலயங்கள் உள்ளன.

    இவற்றில் சில தலங்களுக்கு மட்டுமே அற்புதங்களை நம் கண் எதிரில் நடத்தி காட்டும் ஆற்றல் உண்டு.

    அந்த ஆற்றல் நிரம்பிய தலமாக திருப்பட்டூர் தலம் திகழ்கிறது.

    நமது தலைவிதியை மாற்றும் சக்தி இத்தலத்துக்கு உள்ளது. நினைத்தவுடன் எல்லோராலும் இத்தலத்துக்கு சென்று வந்துவிட முடியாது.

    ஈசனும், பிரம்மனும் மனம் வைத்தால் தான் நாம் இத்தலத்துக்குள் காலடி எடுத்து வைக்க முடியும்.

    இத்தலத்தின் வரலாறும் அதைத்தான் பிரதிபலிக்கிறது.

    அற்புதங்கள் நிறைந்த திருப்பட்டூர் தலம் தோன்ற காரணமான வரலாறு வருமாறு:

    சிவனிடம் இருந்து இந்த உலகை படைக்கும் ஆற்றலை பிரம்மா பெற்றார்.

    இதனால் பிரம்மனுக்கு கர்வம் ஏற்பட்டது.

    சிவனைப்போலவே தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருத வேண்டும் என்று ஆணவம் கொண்டார்.

    பிரம்மாவிற்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், பிரம்மாவின் 5 தலைகளில் ஒன்றைக் கிள்ளி துண்டித்து கொய்து விட்டார்.

    பிரம்மாவின் படைப்புத் தொழிலையும் சிவன் பறித்து விட்டார்.

    அதன்பிறகே பிரம்மாவுக்கு தான் செய்தது தவறு என்று புரிந்தது.

    அவர் இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.

    பூலோகத்தில் ஆங்காங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து தன்னை வழிபடுமாறும், தகுந்த நேரமும், இடமும் வரும்போது சாப விமோசனம் தருவதாகவும் சிவபெருமான் பிரம்மாவிற்கு கூறினார்.

    இந்த நிலையில் திருப்பட்டூர் தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதச லிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார்.

    மேலும் பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத் தொழிலை அருள்வதாக கூறினார்.

    பிரம்மனும் நாடெங்கிலும் சுற்றித் திரிந்து அங்கங்கே சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

    பின்பு பிடவூராகிய இத்தலம் வந்து 12 லிங்கங்களை பிரதிஷ்டை செய்து விட்டார்.

    பிரம்மனின் வழிபாட்டில் சிவபெருமான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

    இத்தலத்தில் சாப விமோசனம் அளித்து மீண்டும் பிரம்மாவிடம் படைப்புத் தொழில் செய்யும் ஆற்றலையும் வழங்கினார்.

    பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பரம்பொருளான ஈசனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது.

    அப்போது முதல் 'என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக' என வரமும் கொடுத்தார்.

    அன்று முதல் பிரம்மா தன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் நல்ல செயலைத் தொடங்கினார்.

    எனவே இத்தலத்துக்கு வந்து பிரம்மனை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை பிரம்மன் மாற்றி அவர்களது ஆயுளை அதிகரிக்க செய்து அருள்புரிந்து வருகிறார்.

    • கோவில்கள் பல கட்டினான். சீர்திருத்தங்கள் பலவும் செய்தான்.
    • ஊர் முன்னேற்றம் பெற காரணமாயிருந்த மன்னன் வீரபாண்டியன் பெயரே அவ்வூருக்கு வழங்கப்பட்டது.

    கண் நோய் தீர்க்கும் கோவிலாக விளங்கி வருவது வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன்.

    வீரபாண்டி என்ற பெயருக்கும் மாரியம்மன் என்ற பெயருக்கும், பொருத்தமான காரணமும் உண்டு.

    அதாவது மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தவன் வீரபாண்டிய மன்னன்.

    ஒருமுறை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான முல்லை (பெரியாறு) அணைப்பகுதிப் பக்கம் வேட்டைக்கு வந்தான்.

    வேட்டை ஏதும் கிடைக்காத மன்னன் மயங்கி கிரங்கி விழுந்த போது திடீரென இரண்டு கண்களின் பார்வையும் செயலிழந்து விடுகின்றன.

    இவ்விதம் திடீரென பார்வையை இழந்தது தெய்வ குற்றமாகத்தான் இருக்கும் என்று உடன் வந்த மந்திரி ஒருவர் நினைத்தார்.

    மன்னா தங்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க வேண்டும் என்றால் கண்ணீஸ்வரமுடையார் இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.

    மந்திரியின் ஆலோசனைப்படி மன்னனும் இறைவனை வேண்டினான்.

    அவனது கனவில் இறைவன் தோன்றினார்.

    "மகனே உலகைக் காக்கும் உன் அன்னை உமாதேவி அம்சம் பொருந்திய மாரியம்மன், நான் எழுந்தருளியிருக்கும் ஸ்தலத்தின் அருகே அமர்ந்து தவமிருக்கிறாள். அவளை வணங்கினால் அவளது அருள்பார்வை உன்மீது படும். அவளுடன் சேர்ந்து நானும் உனக்கு பார்வை தருகிறேன்" என்று கூறி மறைந்தார்.

    கண்ணீஸ்வரனது அருள் வாக்குப்படியே அம்மனை மன்னனும் வேண்டினான்.

    பார்வையும் கிடைக்கப்பெற்றான்.

    அதன் பிராயசித்தமாக குளங்கள் பல வெட்டினான்.

    கோவில்கள் பல கட்டினான். சீர்திருத்தங்கள் பலவும் செய்தான்.

    ஊர் முன்னேற்றம் பெற காரணமாயிருந்த மன்னன் வீரபாண்டியன் பெயரே அவ்வூருக்கு வழங்கப்பட்டது.

    இவ்வூரில்தான் சுயம்புவாக காட்சி தந்து கொண்டிருக்கிறாள் ஸ்ரீ கவுமாரியம்மன் கண் நோய் கண்டவர்கள், அம்மை நோய் கொண்டவர்கள் வந்து இங்கு வழங்கப்படும் தீர்த்த நீரினை அருந்துகின்றனர்.

    அவ்விதம் அருந்துபவர்களின் கண்நோய் அம்மை நோய்கள் குணமாகிவிடும் என்பது ஐதீகம்.

    • சைவ வைணவ ஒற்றுமையை காட்டும் வகையில் இறைவன் இங்கு சங்கர நாராயணனாக காட்சி தருகிறார்.
    • இத்தலத்தின் பிரார்த்தனை தெய்வமாக கோமதி அம்மன் விளங்குகிறாள்.

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கர நாராயணசாமி கோவில் அமைந்துள்ளது.

    சைவ வைணவ ஒற்றுமையை காட்டும் வகையில் இறைவன் இங்கு சங்கர நாராயணனாக காட்சி தருகிறார்.

    இத்தலத்தின் பிரார்த்தனை தெய்வமாக கோமதி அம்மன் விளங்குகிறாள்.

    வடக்கு திருச்சுற்றில் ஒரு பள்ளம் காணப்படுகிறது.

    அந்த பள்ளத்தில் இருக்கும் புற்று மண்ணை நீரில் குழைத்து நெற்றியில் தரித்துக் கொண்டால் தீராத நோய்கள் எல்லாம் தீர்த்துவிடும் என்கிற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

    இப்புற்று மண்ணை நீரில் குழைத்து நெற்றியில் பூசுவது மட்டுமின்றி நீரில் கரைத்து குடித்து விடுபவர்களும் உண்டு.

    • அதிகாலை நேரத்தில் கிழக்கு திசையில் அவர் ஒளியுடன் கீழ் வானத்தில் காட்சியளிப்பார்.
    • அதிகாலை நேரத்தில் கிழக்கில் உள்ள வெள்ளியை எதிர்த்து பிரயாணம் செய்யக்கூடாது என்பர்.

    நான்கு கரங்கள் உடையவர். அவற்றில் கமண்டலம், அட்சமாலையும், தண்டமும், தாங்கியவர்.

    இவருடைய வெள்ளித் தேரில் எட்டு குதிரைகள் பூட்டப்பெற்றுள்ளன.

    பத்து குதிரைகள் தேரை இழுப்பதாகவும் சில நூல்கள் கூறுகின்றன.

    இவர் மீன ராசியில் உச்சமடைகிறார்.

    ரிஷபம், துலாம் இவரது ஆட்சி வீடு.

    பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களுக்கு அதிபதி.

    தசை புத்திகளில் இவருக்குத்தான் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் உள்ளது.

    ஆங்கில எண்ணில் 6க்கு அதிபதி 6, 15, 24ந் தேதியில் பிறந்தவர்களுக்கு இவரே அதிபதி.

    சுக்கிரன் 'வெள்ளி' என்றும் குறிப்பிடப் படுகிறது.

    அதிகாலை நேரத்தில் கிழக்கு திசையில் அவர் ஒளியுடன் கீழ் வானத்தில் காட்சியளிப்பார்.

    அதிகாலை நேரத்தில் கிழக்கில் உள்ள வெள்ளியை எதிர்த்து பிரயாணம் செய்யக்கூடாது என்பர்.

    மேற்கில் சிறிதுதூரம் சென்று பின்னர் கிழக்கில் பயணிப்பதும் சிலர் வழக்கம்.

    கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூரில் சுக்கிர பகவானுக்குரிய திருத்தலம் அமைந்துள்ளது. 

    ஓம் சுக்ராய நம!

    ஓம் ஸுசயே நம!

    ஓம் ஸுபகுணாய நம!

    ஓம் ஸுபலக்ஷணாய நம!

    ஓம் ஸோபநாக்ஷலீய நம!

    ஓம் காமபாலாய நம!

    ஓம் கவயே நம!

    ஓம் கல்யாண தாயகாய நம!

    ஓம் பத்ரமூர்த்தயே நம!

    ஓம் பரத்குணாய நம!

    ஓம் பார்க்கவாய நம!

    ஓம் பக்தபாலகாய நம!

    ஓம் போகதாய நம!

    ஓம் புவநாத்யக்ஷலீய நம!

    ஓம் புக்தி முக்திபலப்ரதாய நம!

    ஓம் சாருஸீலாய நம!

    ஓம் சாருரூபாய நம!

    ஓம் சாருசந்த்ரநிபாஸாய நம!

    ஓம் நிதயே நம!

    ஓம் நீகிலஸாஸ்த்ரக்ஞாய நம!

    ஓம் நீதிவித்யாதுரந்தராய நம!

    ஓம் ஸர்வலக்ஷணஸ்ப்பந்நாய நம!

    ஓம் ஸர்வார்த்தகுணவர்ஜிதாய நம!

    ஓம் ஸமாநாதிகநிர்முக்த்தாய நம!

    ஓம் ஸகலாகமபாரகாய நம!

    ஓம் ப்ருகுவே நம!

    ஓம் போகராய நம!

    ஓம் பூமஸுரபாலநதத்பராய நம!

    ஓம் ஸுப்ரரூபாய நம!

    ஓம் சுத்தஸ்படிகபாஸ்வராய நம!

    ஓம் தீநார் திஹாரகாய நம!

    ஓம் தைத்யகுருவே நம!

    ஓம் தேவாபிநந்திதாய நம!

    ஓம் காவ்யாஸக்தாய நம!

    ஓம் பவிபந்தவிமோசகாய நம!

    ஓம் கநாத்யாய நம!

    ஓம் கநாத்யக்ஷலீய நம!

    ஓம் கமபுக்ரீவாய நம!

    ஓம் காளாதராய நம!

    ஓம் ககருண்யரஸஸம்பூரணா நம!

    ஓம் கல்யாணகுணவர்தநாய நம!

    ஓம் ஸ்வேதாம்பராய நம!

    ஓம் ஸ்வேதவபுஷே நம!

    ஓம் சதுர்புஜஸமந்விதாய நம!

    ஓம் அக்ஷமாலாதராய நம!

    ஓம் அசிந்த்யாய நம!

    ஓம் அக்ஷீணகுணபாரஸுராய நம!

    ஓம் நக்ஷத்ரகணஸஞ்சாராய நம!

    ஓம் நவதாய நம!

    ஓம் நீதிமார்க்கதாய நம!

    ஓம் வர்ஷப்ரதாய நம!

    ஓம் ஹ்ருஷீகேஸாய நம!

    ஓம் கலேஸநாஸகராய நம!

    ஓம் நவயே நம!

    ஓம் சிந்திதார்த்தப்ரதாய நம!

    ஓம் ஸாந்திமதயே நம!

    ஓம் சித்தஸ்மாதிக்ருதே நம!

    ஓம் ஆதிவ்யாதிஹாராய நம!

    ஓம் மநஸ்விநே நம!

    ஓம் மாகாதாய நம!

    ஓம் மாத்யாய நம!

    ஓம் மஹாஸயாய நம!

    ஓம் பலிப்ரஸந்நாய நம!

    ஓம் அபதாய நம!

    ஓம் பலநே நம!

    ஓம் பலபராக்ரமாய நம!

    ஓம் பவபாஸபரித்யாதாய நம!

    ஓம் மந்தஹாஸாய நம!

    ஓம் பஹாஸுரராய நம!

    ஓம் முக்தாயலஸமாநாபாவ நம!

    ஓம் முக்திதாய நம!

    ஓம் முஸிந்துதாய நம!

    ஓம் ரத்ஸீஹாஸகாருடாய நம!

    ஓம் ரதஸ்தாய நம!

    ஓம் ரஜிப்ரபாய நம!

    ஓம் சூரியப்ராக்தேஸந்தராய நம!

    ஓம் ஸுரஸத்ருஸுஹருதே நம!

    ஓம் கவயே நம!

    ஓம் துலாவ்ரூஷபராஸீஸாய நம!

    ஓம் துர்தராய நம!

    ஓம் தர்மபாலதாய நம!

    ஓம் பாக்யதாய நம!

    ஓம் பூரிவிக்ரமாய நம!

    ஓம் புண்ணியதாயகாய நம!

    ஓம் புராணபுருஷாய நம!

    ஓம் புஜ்யாய நம!

    ஓம் புருஹூதாதிஸந்ஜதாய நம!

    ஓம் அஜேயாய நம!

    ஓம் விஜிதாராதயே நம!

    ஓம் விவதாபரணோஜ்ஜவலாய நம

    ஓம் குந்தபுஷ்பப்ரதீகாஸாய நம!

    ஓம் பவ்யதாரித்ராய நம!

    ஓம் பவபாசவிமோசாய நம!

    ஓம் கௌடதேஸேஸ்வராய நம!

    ஓம் கோப்த்ரே நம!

    ஓம் குணிநே நம!

    ஓம் ஜ்யேஷ்டநக்ஷத்ரஸ்வபூதாய நம!

    ஓம் ஜயேஷ்டாய நம!

    ஓம் ஸ்ரேஷ்டாய நம!

    ஓம் ஸுசிஸ்மிதாய நம!

    ஓம் அபவர்கபரதாய நம!

    ஓம் அநந்தாய நம!

    ஓம் ஸந்தாநபலதாயகாய நம!

    ஓம் ஸர்வைஸ்வர்யப்ரதாய நம!

    ஓம் ஸர்வகீர்வரணஸந்துதாய நம!

    • இதை கண்ட மகாபலி இவரால் இடையூறு வருவதால் தனது பவித்திரத்தை கெண்டியின் மூக்கினுள் செருகினார்.
    • அது சுக்கிரரின் ஒரு கண்ணில் குத்த அதனால் சுக்கிரன் ஒரு கண்ணை இழந்தார்.

    வயல்கள், அழகிய வீடுகள், அலங்கரிக்கப்பட்ட இடங்கள், படுக்கையறை போன்றவற்றில் வாசம் செய்பவர்.

    பால் உணர்ச்சியை தூண்டும் கிரகம். மழைக்கு காரகர்.

    மனித உடலில் கழுத்து, தொண்டை, மார்பு, இடுப்பு பக்கம் அசுத்த ரத்த குழாய்கள் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்துகிறார்.

    சுக்கிரன் ஜாதகத்தில் அமையும் இடத்தை பொருத்து பால்வினை நோய்கள், சர்க்கரை வியாதி, கண்நோய், வீரியமின்மை, சிறுநீர் வழி வியாதிகள் உண்டாகிறது.

    ஒற்றை கண்ணை உடையவர்.

    மகாபலி சக்ரவர்த்தியிடம் திருமால் வாமனராக வந்து மூன்றடி மண் கேட்ட பொழுது சுக்ராச்சாரியார் அவ்வாறு கொடுக்க வேண்டாம் என்று தடுத்தார்.

    மகாபலி அவர் சொல்லைக்கேளாமல் நீர்வார்த்து மூன்றடி மண் கொடுக்க முற்படும்பொழுது நீர்வார்க்குன் கெண்டியின் மூக்கினுள் வண்டாக சுக்கிரர் உருவெடுத்து நீர் வராமல் அடைத்துக் கொண்டார்.

    இதை கண்ட மகாபலி இவரால் இடையூறு வருவதால் தனது பவித்திரத்தை கெண்டியின் மூக்கினுள் செருகினார்.

    அது சுக்கிரரின் ஒரு கண்ணில் குத்த அதனால் சுக்கிரன் ஒரு கண்ணை இழந்தார்.

    • நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக திகழ்கிறார்.
    • பிருகு முனிவருக்கும், புலோமிசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவர்.

    நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக திகழ்கிறார்.

    பிருகு முனிவருக்கும், புலோமிசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவர்.

    உச்சநிலை கிரகம், மூலக்கிரகம் என்றும் கூறப்படுவதுண்டு.

    நீர்க்கிரகம், பெண்கிரகம், வெண்மை நிறமுடையவராதலால் வெள்ளி என்ற பெயரும் உண்டு.

    அசுரர்களுக்கு குரு என்பதால் 'அசுரகுரு' என்ற பெயரும் உண்டு.

    தன்னை வழிபடுபவர்களுக்கு நன்மதிப்பையும், சுகபோகங்களையும், அதிர்ஷ்டத்தையும் அளிப்பவர்.

    இவர் கலா ரசிகர். அழகானவர், கலாவல்லவர், கவிஞர், சுக்ரநீதி என்ற நீதி சாஸ்திரத்தை எழுதியவர்.

    சுக்கிரனுக்குரிய நாள் வெள்ளிக்கிழமை.

    இது இரு கண்ணுடைய நாள். திசை கிழக்கு.

    ஒரு ராசியை கடக்க ஆகும் காலம் ஒரு மாதம்.

    ஒருவருடைய ஜாதகத்தில் மனைவியின் நிலை, இசை, நாட்டியம் போன்ற கலைகள், இன்பம் ஆகியவை சுக்கிரனை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

    இவர் வாகனகாரகன் என்றும் சொல்லப்படுகிறார்.

    வாகனங்கள் வைத்து ஆளக்கூடிய அம்சத்தை தருபவர். 

    • சுக்கிரக் கிரகம் களத்திரகாரகன் என்றழைக்கப்படும் கிரகம் ஆகும்.
    • ஒருவரது திருமண வாழ்வை நிர்ணயிக்கும் கிரகமாகச் சுக்கிரன் திகழ்கிறது.

    சுக்கிரக் கிரகம் களத்திரகாரகன் என்றழைக்கப்படும் கிரகம் ஆகும்.

    ஒருவரது திருமண வாழ்வை நிர்ணயிக்கும் கிரகமாகச் சுக்கிரன் திகழ்கிறது.

    சூரியனார்கோயிலில் சூரியனுக்கு வடக்கில் தெற்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் காணப்பெறும் சுக்கிர பகவான் வலது கையால் அபய முத்திரையினையும் இடது கையைத் துடையில் ஊன்றியவாறும் காட்சி அளிக்கின்றார்.

    சுக்கிர பகவானுக்கு அசுரகுரு, உஷனன், ஒள்ளியோன், கவி, காப்பியன், சல்லியன், சிதன், சுக்கிரன், சுங்கன், சைக்கியன், திங்கள், தைத்யமந்திரி, பளிங்கு, பார்க்கவன், பிரசுரன், பிருகு, புகர், புயல், மழைக்கோள் என்றும் வேறு பெயர்கள் உண்டு.

    ரிஷபம், துலாம் ராசிகளுக்கு அதிபதியான இவருக்குரிய அதிதேவதை இந்திராணி, வாகனம் முதலை, தானியம் மொச்சை, வெண்தாமரை, வெள்ளைநிற ஆடை, வைரம், மொச்சைப் பொடி அன்னம், அத்தி சமித்து, வெள்ளி, உலோகம் ஆகியன இவருக்கு உரியன ஆகும். 

    • நிவேதனமாக, சர்க்கரை சேர்ந்த பால் வைத்து வெள்ளிக்கிழமைகளில் சொல்ல ஆரம்பிக்கவேண்டும்.
    • தினமும் 16 முறைக்குக் குறையாமல் சொல்ல வேண்டும். 108 முறை சொல்வது உத்தமம்.

    மகாலட்சுமி மந்திரம்

    ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி

    ஆகச்ச ஆகச்ச,

    மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

    மஹாலக்ஷ்மி மூல மந்திரம்

    ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி

    மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி

    ஏஹ்யேஹி ஸர்வ

    ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம். கமலே

    கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத.

    ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

    ஓம் மஹாலக்ஷ்ம்யை நம.

    பீஜ மந்திரத்துடன் கூடியவை இந்த மஹா மந்திரங்கள்.

    இதில் ஏதேனும் ஒரு மந்திரத்தை மனம் உருகி சொன்னால் சிறப்பான பலன் தரும் என்பது ஐதீகம்.

    இதனை சொல்லும் முன், மகாலட்சுமியின் படத்துக்கு பொட்டு வைத்து, பூ சூட்டி, நெய் தீபம் ஏற்றி குல தெய்வத்தை முதலில் வணங்கி அதன் பிறகே, மந்திரம் சொல்லி வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும்.

    நிவேதனமாக, சர்க்கரை சேர்ந்த பால் வைத்து வெள்ளிக்கிழமைகளில் சொல்ல ஆரம்பிக்கவேண்டும்.

    தினமும் 16 முறைக்குக் குறையாமல் சொல்ல வேண்டும். 108 முறை சொல்வது உத்தமம்.

    இப்பூஜையின் நிறைவில் குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றை தந்து வருவது சிறப்பாகும்.

    வீட்டில் மகாலட்சுமி வசம் செய்யும் துளசியுடன் கூடிய மாடம் இருந்தால் இதேபோல் அதற்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது இன்னும் சற்று கூடுதல் பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒருவன் வாழ்வில் அனைத்து வகையான இன்பங்களை அனுபவிக்க ஜாதகத்தில் சுக்கிர பகவான் உச்சமோ பெற்றிருக்க வேண்டும்
    • செல்வ வளம் பெற்று நலம் காண தினமும் காலை, மாலை இம்மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்

    கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே

    வசமானய ஸ்வாஹா

    ஒருவர் தனது வாழ்வியலில் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தால் அவருக்கு "சுக்கிரத் திசை" என சிலர் கூற நாம் கேள்விப் பட்டிருப்போம்.

    ஒரு மனிதனின் வாழ்வில் அனைத்து வகையான இன்பங்களை அனுபவிக்க அவரது ஜாதகத்தில் சுக்கிர (கிரகம்) பகவான் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருக்க வேண்டும் என்பது ஐதீகம்.

    ஜாதகத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லாதவர்களும் செல்வ வளம் பெற்று நலம் காண தினமும் காலை, மாலை உச்சரிக்க வேண்டிய "ஸ்ரீ சுக்கிர பகவான் மற்றும் ஸ்ரீமகாலட்சுமியின் மூல மந்திரங்கள் வருமாறு:

    சுக்கிர பகவான் மந்திரம்

    "ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்.

    ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்"

    சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்

    வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்!

    வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே

    அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!!

    சுக்ர காயத்ரீ மந்திரம்

    ஓம் அச்வ த்வஜாய வித்மஹே

    தநுர் ஹஸ்தாய தீமஹி

    தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

    ×