search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாய்க்கால் கட்டும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் 3 பேர் பலி
    X

    வாய்க்கால் கட்டும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் 3 பேர் பலி

    • வாய்க்காலுக்கு மறுபக்கம் நின்றிருந்த 10 பேர் உயிர் தப்பினர்.
    • சம்பவம் நடைபெற்றவுடன் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தேங்காய்திட்டு வசந்த் நகர் என்ற பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    வசந்த் நகர் 3-வது குறுக்கு தெருவில் நடந்த இந்த பணியில் இன்று காலை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    மரப்பாலம் துணைமின் நிலையம் பின்புறம் சுற்று சுவரையொட்டி தூர்வாரி வாய்காலில் இருந்த சேற்றை வெளியேற்றி கொண்டிருந்னர்.

    அப்போது மின் துறையின் 33 ஆண்டுகள் பழைமையான சுற்று சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கு இடையே தொழிலாளர்கள் சிக்கினர்.

    இதனையடுத்து முதலியார்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்டனர். இதில் 3 தொழிலாளர்கள் இடுபாடுகளில் சிக்கியும் கால்வாய் தண்ணீரில் மூழ்கியும் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் 3 பேரும் அரியலூர் நெட்டகுறிச்சியை சேர்ந்த பாக்கியராஜ், பால முருகன், ஆரோக்கியராஜ் என்பது தெரியவந்தது.

    மீதமுள்ள 3 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வாய்க்காலுக்கு மறுபக்கம் நின்றிருந்த 10 பேர் உயிர் தப்பினர்.

    சம்பவம் நடைபெற்றவுடன் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததால் மினி லாரியில் வைத்து தொழிலாளர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×