search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கிராமங்கள் தோறும் பொதுக்கூட்டம்
    X

    பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் மாநில அமைப்பாளர் கணபதி பேசிய காட்சி.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கிராமங்கள் தோறும் பொதுக்கூட்டம்

    • அன்சாரி துரைசாமி நாயக்கர் உள் அரங்கத்தில் நடைபெற்றது.
    • மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரி மாநில பா.ம.க. அவசர பொது குழு கூட்டம் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி புதுவை பா.ம.க. தலைமை அலுவலகமாக கவுண்டன்பாளையம், அன்சாரி துரைசாமி நாயக்கர் உள் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார்.

    பொதுக்குழுவில் மக்க ளவைத் தேர்தலையொட்டி பா.ம.க. செயல்திட்டங்களை விளக்க மாநிலம் முழுவதும் கூட்டங்கள் நடத்துவது, கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்துவது, தொகுதி,கிராமக் கூட்டங்கள் நடத்துவது, இருசக்கர வாகன பிரச்சாரம் செய்வது, வாக்குச்சாவடி களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாநில துணை அமைப்பாளர் வடிவேல் , வன்னியர் சங்க தலைவர் துரை என்ற ஜெயக்குமார், வன்னியர் சங்க துணை தலைவர் பாண்டுரங்கன், மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் தாபா சோம சுந்தரம், சமூக முன்னேற்ற சங்க பொறுப்பாளர்கள் நடேசன் , சம்மந்தம், சிவப்பிரகாசம் , பொன்னு சாமி, வன்னியர் சங்கம் செயலாளர் நாகப்பன், இளைஞர் சங்க செயலாளர் சங்கிலியன்,

    மாணவர் சங்கம் மதன் ,ஹரி மகளிர் சங்கம் மாநில செயலாளர் ஏபில் இளவரசன் , உழவர் பேரியக்கம் மாநில செய லாளர் மணிபாலன், ஜெயமூர்த்தி, அன்பு மணி தம்பிகள் படை மாநில தலைவர் பிரபாகரன், மாநில செயலாளர் பாலாஜி, மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சந்தோஷ், உட்பட மாநில தொகுதி நிர்வாகிகள் தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×