search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் பிரான்சில் வசித்து வருபவர் வீட்டில் வெளிநாட்டு பணம் திருட்டு- வேலைக்கார பெண்கள் கைவரிசையா? விசாரணை
    X

    புதுச்சேரியில் பிரான்சில் வசித்து வருபவர் வீட்டில் வெளிநாட்டு பணம் திருட்டு- வேலைக்கார பெண்கள் கைவரிசையா? விசாரணை

    • சாய்ராம் வீட்டில் பேக்கில் வைத்திருந்த 4,800 யூரோ பணம் மாயமாகி இருந்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு அண்ணாநகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சாய்ராம் (வயது60). பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவர் பிரான்சில் வசித்து வருகிறார்.

    அவ்வப்போது புதுவைக்கு வந்து சொந்த வீட்டில் தங்கி செல்வது வழக்கம்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சாய்ராம் புதுவையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்து வந்தார். வீட்டு வேலைக்காக 2 பெண்களை பணிக்கு அமர்த்தியிருந்தார்.

    இந்நிலையில் சாய்ராம் வீட்டில் பேக்கில் வைத்திருந்த 4,800 யூரோ பணம் மாயமாகி இருந்தது.

    யாரோ அதனை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சாய்ராம் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால் வெளிநபர்கள் யாரும் சாய்ராம் வீட்டுக்குள் வரவில்லை என்பது ஆய்வில் தெரியவந்தது.

    எனவே வீட்டு வேலை செய்யும் பெண்கள் இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து வீட்டு வேலை செய்து வந்த 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×