என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
கட்டிட தொழிலாளி பலி
- மோட்டார் சைக்கிள் விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார்.
- இவருக்கு சுமதி என்ற மனைவியும், விஜயக்குமரன் என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஸ்டியான் (55) கட்டிட தொழிலாளி. இவருக்கு சுமதி என்ற மனைவியும், விஜயக்குமரன் என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
கிருஸ்டியான் மோட்டார் சைக்கிளில் லாஸ்பேட்டைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். கருவடிக்குப்பம் சாலையில் ஒரு கோழி இறைச்சி கடை அருகே வந்த போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென கிருஸ்டியான் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கிருஸ்டியான் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஸ்டியான் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் விஜயகுமரன் கொடுத்த புகாரின் பேரில் புதுவை வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்