search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காலரா பரவல்-  காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
    X

    (கோப்பு படம்)

    காலரா பரவல்- காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

    • காலரா நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன.
    • பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல்.

    காரைக்கால்:

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

    பாதிக்கப்பட்ட நோயாளிகள் மாவட்ட அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில் சிலருக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது.இதன் எதிரொலியாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.

    காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இணை நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    வாந்தி, வயிற்றுப்போக்கால் காரைக்காலில் இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காலரா தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    காலரா பரவல் எதிரொலியாக காரைக்காலில் நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முகம்மது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். இந்த 3 நாட்கள் விடுமுறையின்போது பள்ளி, கல்லூரிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×