என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி

X
புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் விபத்தில் பலி
By
Maalaimalar .25 Sep 2023 4:01 AM GMT

- இடையஞ்சாவடி பகுதியில் வந்த போது எதிரே வந்த பள்ளி வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே ஆரோவில் சர்வதேச நகரம் உள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
அதுபோல் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மைக்கேல் அலெக்சாண்டர் (வயது 45) என்பவர் ஆரோவில்லில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர், புதுச்சேரிக்கு சென்று விட்டு ஆரோவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இடையஞ்சாவடி பகுதியில் வந்த போது எதிரே வந்த பள்ளி வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த மைக்கேல் அலெக்சாண்டரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
