என் மலர்
வழிபாடு

திருத்தணி முருகன் கோவில்
திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்
திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை (5-ம்தேதி) தொடங்கி வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது. 12-ந்தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் நோய்தொற்று பரவல் தற்போது குறைந்ததை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சித்திரைமாத பிரம்மோற்சவ விழா நாளை (5ந்தேதி) கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்குகிறது. மாலையில் கேடய உலாவில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவையொட்டி தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வருகிற 12-ந் தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 6-ந்தேதி வெள்ளி சூரிய பிரபை பூத வாகனம், 7-ந்தேதி சிம்ம வாகனம், ஆட்டு கிடாய் வாகனம், 8-ந்தேதி பல்லக்குசேவை, வெள்ளி நாக வாகனம், 9-ந்தேதி அன்ன வாகனம்,வெள்ளி மயில் வாகனம், 10-ந்தேதி புலி வாகனம், மாலை 4:30 மணிக்கு யானை வாகனம், 11-ந்தேதி தங்கத்தேர் இரவு 7 மணி, 12-ந்தேதி யாளி வாகனம், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
13-ந்தேதி கேடய உலா, சண்முகர் உற்சவம், 14-ந்தேதி தீர்த்தவாரி, சண்முகர் உற்சவம், கொடி இறக்கம் நடைபெறுகிறது. 15-ந்தேதி சப்தாபரணம், காதம்பரிவிழா நடைபெற இருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நோய்தொற்று பரவல் தற்போது குறைந்ததை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சித்திரைமாத பிரம்மோற்சவ விழா நாளை (5ந்தேதி) கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்குகிறது. மாலையில் கேடய உலாவில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவையொட்டி தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வருகிற 12-ந் தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 6-ந்தேதி வெள்ளி சூரிய பிரபை பூத வாகனம், 7-ந்தேதி சிம்ம வாகனம், ஆட்டு கிடாய் வாகனம், 8-ந்தேதி பல்லக்குசேவை, வெள்ளி நாக வாகனம், 9-ந்தேதி அன்ன வாகனம்,வெள்ளி மயில் வாகனம், 10-ந்தேதி புலி வாகனம், மாலை 4:30 மணிக்கு யானை வாகனம், 11-ந்தேதி தங்கத்தேர் இரவு 7 மணி, 12-ந்தேதி யாளி வாகனம், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
13-ந்தேதி கேடய உலா, சண்முகர் உற்சவம், 14-ந்தேதி தீர்த்தவாரி, சண்முகர் உற்சவம், கொடி இறக்கம் நடைபெறுகிறது. 15-ந்தேதி சப்தாபரணம், காதம்பரிவிழா நடைபெற இருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Next Story






