என் மலர்
வழிபாடு

காரப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் 25 நாள் அக்னி வசந்த விழா
காரப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் 25 நாள் அக்னி வசந்த விழா
காரப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் அடுத்த மாதம் 15-ந்தேதி (ஞாயிறு) காலையில் படுகள காட்சியும், மாலையில் தீ மிதி திருவிழாவும் நடைபெறுகிறது.
சென்னை சோழிங்க நல்லூர் அருகே உள்ள காரப்பாக்கம் பகுதியில் புகழ் பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலை கடந்த 2011-ம் ஆண்டு ஊர் மக்கள் ஒன்று கூடி கோவிலை புதுப்பித்து கட்டி போதிராஜா சிலையும், கொடி மரமும் அமைத்தனர்.
தினமும் திரவுபதியம் மனுக்கும், போதி ராஜாவுக் கும் அபிசேகம் செய்யப்படும். ராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யும் விதமாக, கோவிலின் வடக்கு பக்கம் நவகிரக சிலை, நாகராஜா- ராணி சிலைகள் உள்ளன.
மாதந்தோறும் அமாவாசையின் போது சிறப்பு பூஜையும் நடைபெறும்.
இந்த கோவிலை புதுப்பித்து முதலாம் ஆண்டு அக்னி வசந்தவிழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த 21-ந் தேதி கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், கொடியேற்றத்து டன் விழா தொடங்கியது.
அடுத்த மாதம் 16-ந் தேதி வரை நடைபெறும் விழாவில் மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து, நாடகம், தீமிதி உலா, படுகள காட்சி, திருமுடி புனைதல், தருமர் பட்டா பிஷேகம் என தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.
தீ மிதிக்கு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்கின்றனர். அடுத்த மாதம் 15-ந் தேதி (ஞாயிறு) காலையில் படுகள காட்சியும், மாலையில் தீ மிதி திரு விழாவும் நடைபெறுகிறது. 16-ந் தேதி தருமனுக்கு திருமுடி புனைதல், தருமர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
கோவில் அறங்காவலர் காரப்பாக்கம் லியோ என்.சுந்தரம் தலைமையில் ஊர் மக்கள் 25 நாட்கள் நடை பெறும் விழாவை முன்னின்று நடத்தி வருகின்றனர்.
தினமும் திரவுபதியம் மனுக்கும், போதி ராஜாவுக் கும் அபிசேகம் செய்யப்படும். ராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யும் விதமாக, கோவிலின் வடக்கு பக்கம் நவகிரக சிலை, நாகராஜா- ராணி சிலைகள் உள்ளன.
மாதந்தோறும் அமாவாசையின் போது சிறப்பு பூஜையும் நடைபெறும்.
இந்த கோவிலை புதுப்பித்து முதலாம் ஆண்டு அக்னி வசந்தவிழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த 21-ந் தேதி கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், கொடியேற்றத்து டன் விழா தொடங்கியது.
அடுத்த மாதம் 16-ந் தேதி வரை நடைபெறும் விழாவில் மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து, நாடகம், தீமிதி உலா, படுகள காட்சி, திருமுடி புனைதல், தருமர் பட்டா பிஷேகம் என தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.
தீ மிதிக்கு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்கின்றனர். அடுத்த மாதம் 15-ந் தேதி (ஞாயிறு) காலையில் படுகள காட்சியும், மாலையில் தீ மிதி திரு விழாவும் நடைபெறுகிறது. 16-ந் தேதி தருமனுக்கு திருமுடி புனைதல், தருமர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
கோவில் அறங்காவலர் காரப்பாக்கம் லியோ என்.சுந்தரம் தலைமையில் ஊர் மக்கள் 25 நாட்கள் நடை பெறும் விழாவை முன்னின்று நடத்தி வருகின்றனர்.
Next Story






