என் மலர்
வழிபாடு

சதுரகிரி கோவில்
4 நாட்களுக்கு சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி
பக்தர்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.
இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்படுகிறது.
அதன்படி இந்த மாதம் பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சதுரகிரி மலையேற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
பக்தர்கள் காலை 7 மணி முதல் பகல் 11 மணிவரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பிரதோஷம் மற்றும் பவுர்ணமி அன்று சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கும், மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.
இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்படுகிறது.
அதன்படி இந்த மாதம் பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சதுரகிரி மலையேற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
பக்தர்கள் காலை 7 மணி முதல் பகல் 11 மணிவரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பிரதோஷம் மற்றும் பவுர்ணமி அன்று சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கும், மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது
Next Story






