என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்தணி முருகன் கோவில்
    X
    திருத்தணி முருகன் கோவில்

    திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

    பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதியும், நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலும் திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் இன்று மற்றும் நாளை சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர தினத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, புஷ்ப காவடிகள் எடுத்து வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு ஆடிப்பூரம் விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதியும், நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலும் திருத்தணி முருகன் கோவில் மற்றும் உபகோவில்களில் பக்தர்கள் இன்று(செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை(புதன்கிழமை) சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    மேலும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோவிலிலும் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் செவ்வாய்க்கிழமை நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×