என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழிபாடு
    X
    வழிபாடு

    ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசைக்கு காவிரியில் புனித நீராட அனுமதி அளிக்க பொதுமக்கள் கோரிக்கை

    இந்தாண்டும் கொரோனா பரவலைத் தடுக்கும் அரசு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், இந்த ஆண்டு ஆடி 18ம் பெருக்கு விழா கொண்டாட காவிரி ஆற்றுப் படித்துறைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்விஎழுந்துள்ளது.
    இந்து மதத்தைச் சார்ந்தவர்களின் ஆன்மீக வழிபாடு மற்றும் பண்டிகைகளுக்கு உரிய தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பிடம் பெற்றது. வருகிற 17-ந்தேதி சனிக்கிழமையன்று ஆடி மாதம் தொடங்குகிறது.

    இந்த ஆடி மாதத்தில் தான் காவிரி அன்னையை அகத்தியரின் கமண்டலத்திலிருந்து விடுவித்து தமிழகமெங்கும் பாய்ந்தோடி விவசாயத்தை வளம் கொழிக்கச் செய்து மக்களை மகிழ்வுடன் வாழச் செய்த வினாயகப் பெருமானுக்கு தமிழக மக்கள் காவிரிக் கரைதோறும் கோவில் கட்டி ஆடிப் 18 தோறும் காவிரியில் புனித நீராடி, எள், வெல்லம் கலந்த பச்சரிசி, பழங்கள் முதலிய விளைபொருட்களை படையலிட்டு வழிபட்டு வருவது தொன்று தொட்டு நடந்து வருகிறது.

    ஆடிப்பெருக்கு அன்று புதுமணத் தம்பதிகளும், கன்னிப் பெண்களும், குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு கோடி கொடுத்தாலும் கிடைக்காத மங்கள விழாவாகவேக் கருதி மகிழ்ந்து இன்புறுவர். இந்த ஆடி மாதத்தில் தான் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோருக்கு நன்றிக் கடனாம் பித்ருக் கடன் செலுத்தும் ஆடி அமாவாசையும், திருவையாறில் அப்பர் பெருமானுக்கு சிவபெருமான் கயிலாயக் காட்சி தந்தப் பெருவிழாவும் (ஆக.8-ந்தேதி) நடக்கிறது.

    காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் சுற்று வட்டார கிராம மக்களால் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்பட்டு வரும் ஆடி மாத விழாக்கள் கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அரசால் தடை செய்யப்பட்டு காவிரி ஆற்றில் புனித நீராட முடியாமலும், விழாக் கொண்டாட முடியாமலும் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்தாண்டும் கொரோனா பரவலைத் தடுக்கும் அரசு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், இந்த ஆண்டு ஆடி 18ம் பெருக்கு விழா கொண்டாட காவிரி ஆற்றுப் படித்துறைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்விஎழுந்துள்ளது. மேலும், இந்த ஆண்டு ஆடி மாதத்தில் காவிரி கரைபுரண்டு ஓடி விவசாயப் பெருங்குடி மக்களை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திக் கொண்டிருப்பதால் இந்த ஆண்டு ஆடி 18 விழா நடத்த காவிரி ஆற்றின் கரைகளுக்கு மக்கள் செல்வதற்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டாம் என்றும், விழா நடத்த வசதி செய்து தருமாறும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×