என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்கியது
Byமாலை மலர்9 Aug 2018 9:27 AM GMT (Updated: 9 Aug 2018 9:27 AM GMT)
மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமான ஒன்று ஆவணி மூலத்திருவிழா. கருங்குருவி உபதேசம் செய்தல், நாரைக்கு முக்தி கொடுத்தல், பிட்டுக்கு மண் சுமந்த லீலை போன்ற வைபவங்கள் விமரிசையாக விழாவில் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிசேக ஆராதனைக்கு பின்னர் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமியின் திருவிளையாடல் வைபவங்கள் விழாவாக நடைபெறுகிறது. தினமும் மீனாட்சி - சுந்தரேசுவரர் வீதி உலா நடக்கிறது.
15-ந்தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த கோலத்தில் சுவாமி காட்சி அளிக்கிறார். அதன் பின்னர் ஆவண மூல வீதிகளில் மீனாட்சி அம்மனுடன் வலம் வருகிறார். மறுநாள் (16-ந்தேதி) நாரைக்கு முக்தி கொடுத்தல், 17-ந்தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடல், 18-ந்தேதி தருமிக்கு பொற்கிழி அளித்த வைபவம் என ஆவணி மூலத்திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது.
தினமும் இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனத்தில் வீதிஉலா செல்கின்றனர். 20-ந் தேதி மாலை திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலை நாட்டிய லீலை நிகழ்த்திக் காட்டப்படுகிறது.
21-ந் தேதி சுந்தரேசுவரர் வளையல் வியாபாரியாக வந்து சாபத்தின் பயனாக மதுரையில் பிறந்த ரிஷி பத்தினிகளுக்கு வளையல் அணிவித்து சாபவிமோசனம் அளிக்கும் வைபவம் நடக்கிறது. அன்று இரவு வீதிஉலா முடிந்து கோவி லுக்கு வரும் சுந்தரேசுவரருக்கு ஆறுகால் பீடத்தில் இரவு 7.30 மணிக்கு கும்பலக்கனத்தில் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை பூஜையானது 23-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் இருந்து அன்று காலை புறப்பாடாகும் சுவாமி, அம்மன் மற்றும் திருஞான சம்பந்தர் சுவாமிகள் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பிட்டுத் தோப்புக்கு செல்கின்றனர்.
சுவாமி-அம்மன் கோவிலில் இருந்து புட்டுத் தோப்பு பகுதிக்கு செல்வதை அடுத்து கோவில் நடையானது சாத்தப்படுகிறது. இருப்பினும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் பக்தர்கள் காலை 7.30 மணி முதல் வடக்கு கோபுரவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.
அவர்கள் ஆயிரங்கால் மண்டபத்துக்குள் பகல் 12.30 மணி வரை செல்லலாம். பின்னர் மாலையில் கோவில் நடை வழக்கம் போல திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
26-ந்தேதி பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவுபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிசேக ஆராதனைக்கு பின்னர் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமியின் திருவிளையாடல் வைபவங்கள் விழாவாக நடைபெறுகிறது. தினமும் மீனாட்சி - சுந்தரேசுவரர் வீதி உலா நடக்கிறது.
15-ந்தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த கோலத்தில் சுவாமி காட்சி அளிக்கிறார். அதன் பின்னர் ஆவண மூல வீதிகளில் மீனாட்சி அம்மனுடன் வலம் வருகிறார். மறுநாள் (16-ந்தேதி) நாரைக்கு முக்தி கொடுத்தல், 17-ந்தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடல், 18-ந்தேதி தருமிக்கு பொற்கிழி அளித்த வைபவம் என ஆவணி மூலத்திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது.
தினமும் இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனத்தில் வீதிஉலா செல்கின்றனர். 20-ந் தேதி மாலை திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலை நாட்டிய லீலை நிகழ்த்திக் காட்டப்படுகிறது.
21-ந் தேதி சுந்தரேசுவரர் வளையல் வியாபாரியாக வந்து சாபத்தின் பயனாக மதுரையில் பிறந்த ரிஷி பத்தினிகளுக்கு வளையல் அணிவித்து சாபவிமோசனம் அளிக்கும் வைபவம் நடக்கிறது. அன்று இரவு வீதிஉலா முடிந்து கோவி லுக்கு வரும் சுந்தரேசுவரருக்கு ஆறுகால் பீடத்தில் இரவு 7.30 மணிக்கு கும்பலக்கனத்தில் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை பூஜையானது 23-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் இருந்து அன்று காலை புறப்பாடாகும் சுவாமி, அம்மன் மற்றும் திருஞான சம்பந்தர் சுவாமிகள் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பிட்டுத் தோப்புக்கு செல்கின்றனர்.
சுவாமி-அம்மன் கோவிலில் இருந்து புட்டுத் தோப்பு பகுதிக்கு செல்வதை அடுத்து கோவில் நடையானது சாத்தப்படுகிறது. இருப்பினும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் பக்தர்கள் காலை 7.30 மணி முதல் வடக்கு கோபுரவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.
அவர்கள் ஆயிரங்கால் மண்டபத்துக்குள் பகல் 12.30 மணி வரை செல்லலாம். பின்னர் மாலையில் கோவில் நடை வழக்கம் போல திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
26-ந்தேதி பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவுபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X