search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரோன் பிஞ்ச்
    X
    ஆரோன் பிஞ்ச்

    தோல்வி காயத்தை ஏற்படுத்தி விட்டது -ஆரோன் பிஞ்ச்

    அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக மோசமான முறையில் தோல்வியடைந்தது காயத்தை ஏற்படுத்திவிட்டது என பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
    அரை இறுதியில் தோற்றது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:-

    நாங்கள் அனைத்து துறையிலும் மோசமாக விளையாடி விட்டோம். அவர்கள் எங்களின் முதல் 3 விக்கெட்டை விரைவில் வீழ்த்தி விட்டனர்.

    இந்த உலகக்கோப்பை தொடரில் கற்றுக்கொள்ள நிறைய நல்ல வி‌ஷயங்கள் இருக்கிறது. நீங்கள் எப்போதுமே வெற்றி பெறவே விரும்புவீர்கள்.

    நம்மால் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்துடன்தான் வருவார்கள். கடந்த 6 மாதங்களாக கூட நிறைய நேர்மறை எண்ணங்கள் இருந்தன. ஆனால் இந்த தோல்வி காயத்தை ஏற்படுத்திவிட்டது.

    இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்புகளை எதிர்பார்த்தோம். அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.

    இங்கிலாந்து அணியினர் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தவர்கள், ஆதிக்கம் நிறைந்தவர்கள் என்பதை அறிவோம். என்றாவது ஒரு நாளில் நமது திறமையை செயல்படுத்த முடியாமல் போய்விடும். இதனால் ஒரு நல்ல அணியான நீங்கள் கூட தோல்வி அடைந்து விடுவீர்கள்.

    சில வீரர்கள் காயத்துடன் இங்கு வந்தார்கள். ஆனால் அதை தோல்விக்கு காரணமாக சொல்லக்கூடாது. கோப்பையை வெல்ல வேண்டும் என்றுதான் இங்கு வந்தோம். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.

    இவ்வாறு ஆரோன் பிஞ்ச் கூறினார்.
    Next Story
    ×