என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது அரைஇறுதி இங்கிலாந்துக்கு நெருக்கடி: ஆஸ்திரேலிய வீரர் லயன்
Byமாலை மலர்9 July 2019 8:53 AM GMT (Updated: 9 July 2019 8:53 AM GMT)
எங்களுக்கு எதிரான 2-வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்குதான் நெருக்கடி என்று ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை போட்டியில் 2-வது அரைஇறுதி 11-ந்தேதி எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி குறித்து ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கூறியதாவது:-
இங்கிலாந்து அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக இங்கிலாந்து ‘நம்பர் 1’ அணியாக உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்என்று பலரும் சொல்கிறார்கள்.
அதைவைத்து பார்த்தால் எங்கள் மீது எந்தவித அழுத்தமும் கிடையாது. அவர்கள் (இங்கிலாந்து) தோல்வி அடைந்தால் இழக்க நிறைய இருக்கிறது. எனவே இங்கிலாந்து அணி மீது நெருக்கடி உள்ளது.
இந்த அரைஇறுதி போட்டியின் முடிவு ஆஷஸ் தொடருக்கு முன்னோட்டமாக இருக்கும். வருகிற 14-ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய விளையாடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் புகழ் ஆஷஸ் தொடருக்கு முன்பாக இருஅணி வீரர்களும் வார்த்தை போர்களில் ஈடுபடுவது வழக்கம். அதுபோன்று ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் தற்போது கருத்தை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி குறித்து ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கூறியதாவது:-
இங்கிலாந்து அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக இங்கிலாந்து ‘நம்பர் 1’ அணியாக உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்என்று பலரும் சொல்கிறார்கள்.
அதைவைத்து பார்த்தால் எங்கள் மீது எந்தவித அழுத்தமும் கிடையாது. அவர்கள் (இங்கிலாந்து) தோல்வி அடைந்தால் இழக்க நிறைய இருக்கிறது. எனவே இங்கிலாந்து அணி மீது நெருக்கடி உள்ளது.
இந்த அரைஇறுதி போட்டியின் முடிவு ஆஷஸ் தொடருக்கு முன்னோட்டமாக இருக்கும். வருகிற 14-ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய விளையாடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் புகழ் ஆஷஸ் தொடருக்கு முன்பாக இருஅணி வீரர்களும் வார்த்தை போர்களில் ஈடுபடுவது வழக்கம். அதுபோன்று ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் தற்போது கருத்தை தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X