என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவுக்கு எதிரான வாழ்வா? சாவா? ஆட்டத்தில் சாதிப்போம்: ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை
Byமாலை மலர்25 Jun 2019 2:37 PM GMT (Updated: 25 Jun 2019 2:37 PM GMT)
மிகமிக முக்கியமான ஆட்டத்தில் இந்தியாவை எங்களால் வீழ்த்த முடியும் என்று மிஸ்டர் கன்சிஸ்டன்ட் ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து தோல்வியடைந்ததன் மூலம் இலங்கை, வங்காள தேசம், பாகிஸ்தான் அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்புக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது.
வங்காள தேசம் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது ஆகியவற்றின் மூலமாக 7 புள்ளிகள் வெற்றி 5-வது இடத்தில் உள்ளது.
அடுத்த போட்டியில் இந்தியாவை ஜூலை 2-ந்தேதியும், பாகிஸ்தானை ஜூலை 5-ந்தேதியும் எதிர்கொள்கிறது. உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்தியாவை வீழ்த்திவிட்டால் பாகிஸ்தானை எப்படியும் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்து விடலாம் என அந்த அணி திட்டமிட்டுள்ளது.
ஆனால் இந்தியாவை எளிதில் வீழ்த்திவிட முடியாது என்று அந்த அணிக்குத் தெரியும். இருந்தாலும் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி மிஸ்டர் கன்சிஸ்டன்ட் என்று பெயர் எடுத்திருக்கும் ஷாகிப் அல் ஹசன், இந்தியாவை எங்களால் வீழ்த்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் ‘‘இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு மிகமிக முக்கியமானது. இந்தியா டாப் அணிகளில் ஒன்று. அவர்கள் சாம்பியன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. ஆனால், நங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.
அனுபவம் உதவியாக இருக்கும். ஆனால், அது மட்டுமே முடிவாக இருக்க முடியாது. இந்தியாவை வீழ்த்த வேண்டுமென்றால், நாங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்தியா உலகத்தரம் வாய்ந்த வீரர்களை பெற்றுள்ளது. அவர்களால் போட்டியை வெற்றி பெற வைக்க முடியும். நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதற்கான அனைத்தும் எங்களிடம் உள்ளது’’ என்றார்.
வங்காள தேசம் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது ஆகியவற்றின் மூலமாக 7 புள்ளிகள் வெற்றி 5-வது இடத்தில் உள்ளது.
அடுத்த போட்டியில் இந்தியாவை ஜூலை 2-ந்தேதியும், பாகிஸ்தானை ஜூலை 5-ந்தேதியும் எதிர்கொள்கிறது. உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்தியாவை வீழ்த்திவிட்டால் பாகிஸ்தானை எப்படியும் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்து விடலாம் என அந்த அணி திட்டமிட்டுள்ளது.
ஆனால் இந்தியாவை எளிதில் வீழ்த்திவிட முடியாது என்று அந்த அணிக்குத் தெரியும். இருந்தாலும் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி மிஸ்டர் கன்சிஸ்டன்ட் என்று பெயர் எடுத்திருக்கும் ஷாகிப் அல் ஹசன், இந்தியாவை எங்களால் வீழ்த்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் ‘‘இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு மிகமிக முக்கியமானது. இந்தியா டாப் அணிகளில் ஒன்று. அவர்கள் சாம்பியன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. ஆனால், நங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.
அனுபவம் உதவியாக இருக்கும். ஆனால், அது மட்டுமே முடிவாக இருக்க முடியாது. இந்தியாவை வீழ்த்த வேண்டுமென்றால், நாங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்தியா உலகத்தரம் வாய்ந்த வீரர்களை பெற்றுள்ளது. அவர்களால் போட்டியை வெற்றி பெற வைக்க முடியும். நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதற்கான அனைத்தும் எங்களிடம் உள்ளது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X