என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைனுக்கு மேலும் 725 மில்லியன் டாலர் நிதி உதவி - அமெரிக்கா அறிவிப்பு
    X

    ஆன்டனி பிளிங்கன்

    உக்ரைனுக்கு மேலும் 725 மில்லியன் டாலர் நிதி உதவி - அமெரிக்கா அறிவிப்பு

    • உக்ரைன், ரஷியா இடையிலான போர் 7 மாதத்தைக் கடந்து நீடித்து வருகிறது.
    • போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருகிறது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 7 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 725 மில்லியன் டாலர்கள் நிதி உதவி அளிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் உறுதியளித்தார்.

    ஏற்கனவே, கடந்த வாரம் அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 625 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×