search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைனுக்கு மேலும் 12 பில்லியன் டாலர் நிதியுதவி - அமெரிக்க செனட் சபை ஒப்புதல்
    X

    உக்ரைன் ரஷியா போர்

    உக்ரைனுக்கு மேலும் 12 பில்லியன் டாலர் நிதியுதவி - அமெரிக்க செனட் சபை ஒப்புதல்

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 6 மாதத்தைக் கடந்துள்ளது.
    • இந்தப் போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 6 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.

    இதற்கிடையே, இந்த மாத தொடக்கத்தில் 11.7 பில்லியன் டாலர்களை புதிய அவசர கால ராணுவ மற்றும் பொருளாதார கட்டமைப்புக்காக உக்ரைனுக்கு வழங்குமாறு அமெரிக்க பாராளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று உக்ரைனுக்கு 12 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் மேலும் 12 பில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்க அமெரிக்க செனட் சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    Next Story
    ×