என் மலர்tooltip icon

    உலகம்

    கொரோனாவில் இருந்து ஜோ பைடன் குணமடைந்தார்
    X

    ஜோ பைடன்

    கொரோனாவில் இருந்து ஜோ பைடன் குணமடைந்தார்

    • அதிபர் ஜோபைடனுக்கு நேற்று மாலை, இன்று காலை நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்துள்ளது.
    • அதிபர் தனது கடுமையான தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டு வருவார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோபைடனை டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் ஜோபைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.

    இதுகுறித்து அதிபரின் டாக்டர் கெவின் ஓகானர் கூறும்போது, 'அதிபர் ஜோபைடனுக்கு நேற்று மாலை, இன்று காலை நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்துள்ளது.

    இதையடுத்து அதிபர் தனது கடுமையான தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டு வருவார். அவருக்கு காய்ச்சல் இல்லை. கொரோனா அறிகுறிகள் முற்றிலும் நீங்கிவிட்டன' என்றார்.

    Next Story
    ×