என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
அமெரிக்காவில் கொரோனா அவசர நிலைக்கு முடிவு- தீர்மானத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ஜோ பைடன்
- கடந்த 2020-ல் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேசிய கொரோனா அவசர நிலையை பிறப்பித்தார்.
- ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டு தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டில்,கொரோனா தொற்று வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. வல்லரசு நாடான அமெரிக்காவையும் இது விட்டு வைக்கவில்லை. அங்கு லட்சக்கணக்கானோரின் உயிரைகொரோனா பறித்ததோடு பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால் அமெரிக்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020-ல் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேசிய கொரோனா அவசர நிலையை பிறப்பித்தார். இதனையடுத்து அந்த உத்தரவு அவ்வப்போது நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினத்துடன் அந்த அவசர நிலை உத்தரவு காலாவதியானது. இதற்கிடையே அதனை முடிவுக்கு கொண்டு வர பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டு தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்