என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
மெக்சிகோ- துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு
- சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின.
- இஸ்தான்புல் நகருக்கு கிழக்கே சுமார் 170 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாஜா கலிபோர்னியாவில் உள்ள லாஸ் பிரிசாசுக்கு மேற்கு- தென்மேற்கில் சுமார் 30 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உண்டானது. 19 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. உடனே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
துருக்கியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்தான்புல் நகருக்கு கிழக்கே சுமார் 170 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6-1 ஆக பதிவானது. வீடுகள் பயங்கரமாக குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் பக்ரெட்டின் கோகா கூறும்போது, "நிலநடுக்கத்தில் 22 பேர் காயம் அடைந்தனர். பீதியில் ஒருவர் கட்டிடத்தில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்துள்ளார்" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்