search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஆப்கானிஸ்தானில் குருத்வாரா தாக்குதலுக்கு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
    X

    ஆப்கானிஸ்தானில் குருத்வாரா தாக்குதலுக்கு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

    • குருத்வாரா மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
    • முன்னுரிமை அடிப்படையில் இ- விசாக்கள் வழங்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.

    காபூல்:-

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சீக்கியர் உள்பட 2 பேர் பலியானார்கள். பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    குருத்வாரா மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நபிகள் நாயகம் குறித்து பா.ஜனதா முன்னாள் செய்தித்தொடர்பாளர் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த தாக்குதலையடுத்து ஆப்கானிஸ்தான் வாழ் சீக்கியர்கள், இந்துக்களுக்கு 100 இ-விசாக்களை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் இ- விசாக்கள் வழங்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×