என் மலர்
உலகம்

முதியவர்களிடம் ரூ.24 லட்சம் மோசடி- இந்தியருக்கு 33 மாதங்கள் ஜெயில் தண்டனை
- முதியவர்களுக்கு பண உதவி செய்வதாக கூறி அவர்களிடம் இருந்து ரூ.24லட்சம் வரை பெற்றுக்கொண்டு ஆசிஸ் பஜாஜ் மோசடி செய்தார்.
- மோசடி தொடர்பாக எழுந்த புகாரில் ஆசிஸ் பஜாஜை போலீசார் கைது செய்தனர்.
வாஷிங்டன்:
இந்தியாவை சேர்ந்தவர் ஆசிஸ் பஜாஜ் (வயது29). அமெரிக்கா கலிபோர்னியாவில் வசித்து வந்த இவர் அந்நாட்டை சேர்ந்தவர்களிடம் குறிப்பாக முதியவர்களிடம் தான் பிரபலமான வங்கியில் வேலை பார்த்து வருவதாக கூறி வந்தார்.
மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பி அவர்களுக்கு பண உதவி செய்வதாக கூறி அவர்களிடம் இருந்து ரூ.24லட்சம் வரை பெற்றுக்கொண்டு மோசடி செய்தார்.
இது தொடர்பாக எழுந்த புகாரில் ஆசிஸ் பஜாஜை போலீசார் கைது செய்தனர். அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 33 மாதங்கள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறி உள்ளது.
Next Story






