என் மலர்
உலகம்

உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு.. இந்தியா பற்றி தெற்காசிய பத்திரிகை சுதந்திர அறிக்கையில் பகீர்
- தவறான தகவல்களைப் பரப்புவதில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் ஐடி பிரிவுகளின் பங்கையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
- 'ஜனநாயகத்தின் நிழலில் செயல்படும் எதேச்சதிகார ஆட்சி' என்று அறிக்கை பாகிஸ்தானை வர்ணிக்கிறது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஊடகங்களின் நிலை மோசமாக இருப்பதாகஉலகில் வேறெங்கும் இல்லாத அளவில்.. இந்தியா பற்றி தெற்காசிய பத்திரிகை சுதந்திர அறிக்கையில் பகீர்(2024-25) கூறுகிறது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மற்றும் மாலத்தீவு போன்ற இடங்களில் ஊடக நிறுவனங்களைப் பலவீனப்படுத்தும் திட்டமிட்ட முயற்சிகள் தொடர்கின்றன.
நம்பிக்கையின்மை, சுயாதீன டிஜிட்டல் தளங்கள் மீதான ஒடுக்குமுறைகள், ஊடக ஊழியர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தான சூழ்நிலைகள், அத்துடன் போலி தகவல்களின் பெருக்கம் உள்ளிட்ட பல சவால்களை ஊடகத் துறை எதிர்கொள்கிறது என்பதை அறிக்கை கூறுகிறது.
'ஜனநாயகத்தின் நிழலில் செயல்படும் எதேச்சதிகார ஆட்சி' என்று அறிக்கை பாகிஸ்தானை வர்ணிக்கிறது. சமீப காலங்களில் எட்டு ஊடக ஊழியர்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் வெறுப்புப் பேச்சு மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் ஐடி பிரிவுகளின் பங்கையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவில் ஊடக சுதந்திரத்தைத் தடுக்க சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது.
அரசாங்கத்தை விமர்சிக்கும் அறிக்கைகளை வெளியிடுவதற்காகப் பத்திரிகையாளர்களும் ஊடக நிறுவனங்களும் சட்ட சவால்களை எதிர்கொள்கின்றன. அரசாங்கம், தேசத்துரோகம், UAPA மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் போலிச் செய்திகளின் போக்கு அதிகமாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.






