என் மலர்
பப்புவா நியூ கினியா
- ஜப்பான் பயணத்தை முடித்த பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா சென்றடைந்தார்.
- அவரை அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபே உற்சாகமாக வரவேற்றார்.
பப்புவா நியூ கினியா:
பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் அரசு முறைப் பயணமாக, ஜப்பானுக்கு சென்றார். அங்கு ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி முன்னதாக அங்குள்ள மகாத்மா காந்தி அமைதி சிலையை திறந்து வைத்தார். மேலும் உயிரிழந்தவர்களின் நினைவிடங்களுக்கு மரியாதையை செலுத்தினார்.
மேலும், ஜி7 மாநாட்டின் இடையே பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நியூ கினியா சென்றடைந்தார். அவரை அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபே உற்சாகமாக வரவேற்றார். பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பப்புவா நியூ கினியாவில் நாளை இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் மூன்றாவது உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொகுத்து வழங்குகிறார்.
பப்புவா நியூ கினியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது
- இரவில் செல்லும் மோடிக்கு பப்புவா நியூகினியாவில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் (டோக் பிசின்) திருக்குறளை வெளியிடுகிறார்.
பிரதமர் மோடி, ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு தீவு நாடான பப்புவா நியூ கினியாவுக்கு செல்கிறார். அங்கு சூரியோதயத்திற்கு பின் எந்த தலைவருக்கும் சம்பிரதாய வரவேற்பு தரக்கூடாது என்று கட்டுப்பாடு உள்ள நிலையில் மோடி வருகையையொட்டி அந்த கட்டுப்பாட்டை பப்புலா நியூ கினியா அரசு தளர்த்தி உள்ளது. இரவில் செல்லும் மோடிக்கு பப்புவா நியூகினியாவில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் (டோக் பிசின்) திருக்குறளை வெளியிடுகிறார்.






