search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வாலிபருடன் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டதால் ஆத்திரம்... இளம்பெண்ணுக்கு எதிராக பஞ்சாயத்து எடுத்த கொடூர முடிவு..
    X

    கோப்புப்படம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வாலிபருடன் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டதால் ஆத்திரம்... இளம்பெண்ணுக்கு எதிராக பஞ்சாயத்து எடுத்த கொடூர முடிவு..

    • இளம்பெண்ணுடன் நடனமாடிய வாலிபரையும் போலீசார் கிராமத்தினரிடம் இருந்து மீட்டனர்.
    • இளம்பெண் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கோ ஹிஸ்தான் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சில வாலிபர்களுடன் நடனம் ஆடும் வீடியோ வெளியானது. இதை பார்த்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஊர் பெரியவர்கள் நடத்திய பஞ்சாயத்தில் அந்த இளம்பெண்ணை கொலை செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொலை செய்தனர்.

    இளம்பெண் கவுரவ கொலை செய்யப்பட்டது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஊர் பஞ்சாயத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு சிறுமியை போலீசார் மீட்டனர்.

    அதே போல் இளம்பெண்ணுடன் நடனமாடிய வாலிபரையும் போலீசார் கிராமத்தினரிடம் இருந்து மீட்டனர். இளம்பெண் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, இளம்பெண்ணை கொலை செய்தவர்கள் மற்றும் பஞ்சாயத்தில் ஆலோசனை செய்தவர்கள், பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தவர்கள் யார் என்பதை கண்டறிய விசாரணை தொடங்கியுள்ளோம்" என்றனர்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் கவுரவ கொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×