நைஜர்: பயங்கரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் பலி .. ஒருவர் கடத்தல்

130 கி.மீ. தொலைவில் டாசோ அமைந்துள்ளது.நைஜர் இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நைஜர்: பயங்கரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் பலி .. ஒருவர் கடத்தல்
Published on

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் தலைநகர் நியாமியில் இருந்து 130 கி.மீ. தொலைவில் டாசோ அமைந்துள்ளது.

இங்கு கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ராணுவ வீரர்கள் மீது கடந்த 15-ந்தேதி பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

ராணுவ வீரர்களும் பதிலுக்கு தாக்கினர். அப்போது மோதலுக்கிடையில் பயங்கரவாதிகள் தாக்கியதில் 2 இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு இந்தியரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.

இதுகுறித்து நைஜர் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடத்திச் செல்லப்பட்ட இந்தியரை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும். நைஜரில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com