search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டது கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் - அதிபர் ஜோ பைடன்
    X

    அதிபர் ஜோ பைடன்

    சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டது கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் - அதிபர் ஜோ பைடன்

    • நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
    • சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்தார்

    வாஷிங்டன்:

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, கடந்த 20 ஆண்டாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேடையில் விரிவுரை அளிக்க இருந்தபோது திடீரென எழுந்த மர்ம நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை நோக்கிச் சென்று, கத்தியால் அவரது கழுத்து, வயிற்றுப் பகுதியில் குத்தினார்.

    இதில் நிலைகுலைந்த சல்மான் ருஷ்டி தரையில் விழுந்தார். உடனே அவர் மருத்துவ ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்தார்

    இதுதொடர்பாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    நேற்று நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது நடந்த கொடூரமான தாக்குதலை அறிந்து நானும் ஜில்லும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தோம். அனைத்து அமெரிக்கர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் சேர்ந்து, அவரது உடல்நலம் மற்றும் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×