என் மலர்
உலகம்

பெருமை அடைகிறேன்: ரஷிய அதிபரை சந்தித்தது குறித்து ஜெய்சங்கர்
- வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக ரஷியா சென்றுள்ளார்.
- மாஸ்கோவில் நடந்த இந்தியா -ரஷியா வணிக மன்ற கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார்.
மாஸ்கோ:
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக ரஷியா சென்றுள்ளார். தலைநகர் மாஸ்கோவில் நடந்த இந்தியா -ரஷியா வணிக மன்ற கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார்.
இதற்கிடையே, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், அதிபர் புதின்-ஜெய்சங்கர் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் உடனான சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
கிரெம்ளினில் அதிபர் புதினைச் சந்தித்ததில் பெருமை அடைகிறேன். ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன்.
முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவ் மற்றும் நிதி மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடனான எனது கலந்துரையாடல்களை அவருக்குத் தெரிவித்தேன். வருடாந்திர தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
உலகளாவிய நிலைமை மற்றும் உக்ரைன் குறித்த சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அவரது பார்வைகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.






