என் மலர்tooltip icon

    உலகம்

    gen Z போராட்டம்: உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை- நேபாள பிரதமர் சுஷிலா கார்கி
    X

    "gen Z" போராட்டம்: உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை- நேபாள பிரதமர் சுஷிலா கார்கி

    • நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டம் வன்முறையா வெடித்து 74 பேர் உயிரிழந்தனர்.

    இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அரசு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இளைஞர்கள் தலைமையிலான Gen Z குரூப் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்தது. இளைஞர்கள் பிரதமர் வீட்டை சூறையாடினர். பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் வன்முறை முடிவுக்கு வந்தது. முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

    இந்த நிலையில் போராட்டத்தின்போது உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுஷிலா கார்கி கூறியதாவது:-

    தற்போதைய அரசுக்கு அரசிலமைப்பு திருத்துவதற்கும், நிர்வாக அமைப்பு மாற்றுவதற்கும் அதிகாரம் கிடையாது. ஊழலை முடிவுக்கு கொண்டு வரவும், சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்வதையும், மக்கள் எதிர்பார்க்கும் சேவையை மேம்படுத்தவும் உறுதி பூண்டுள்ளது.

    போராட்டத்தின்போது உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மாணவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த வருடம் மார்ச் 5ஆம் தேதியில் பாராளுமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

    இவ்வாறு சுஷிலா கார்கி தெரிவித்தார்.

    Next Story
    ×